


இன்றோடு என் நல்லைக் கந்தனின் மகோற்சவ காலப் பதிவுகள் ஒரு நிறைவை நாடுகின்றன. இருபத்தைந்து நாட்களுக்கு முன், எம் பெருமான் முருகக்கடவுளை நினைந்தவாறே நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மாதத்துக்கு இரண்டு பதிவுகள் இடும் எனக்கு இது அசாதாரண முயற்சியாகவே ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பதிவுக்காக எமது ஈழவரலாற்றாசிரியர்களின் நூல்களை நுகர்ந்து பொருத்தமான பதிவுகளாக்கும் போது சுமை பருத்திப் பஞ்சாய் ஆனது. அத்தோடு என் இந்தப் பதிவுப் பயணத்தில் கூடவே பயணித்து எப்போதும் ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த நல்லூர்க்காலத்தில் என் நனவிடை தேய்தலாகப் பல பதிவுகளைத் தரவிருந்தேன். ஆனால் வரலாற்று, ஆன்மீக விடங்களோடு இயன்றளவும் உங்களை இருத்தி வைப்பதற்காக அவற்றைத் தவிர்த்து விட்டேன். அவை பிந்திய காலத்தின் பதிவுகளாக வரும்.
எனது இந்தப் பயணத்தில் உதவிய ஈழ வரலாற்றாசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நல்லைக்கந்தன் மற்றும் நற்சிந்தனைப் பாடல்களையும், சங்கீத கதப்பிரசங்கத்தையும் வெளியிட்டுதவிய அமைப்புக்களுக்கும், யோகர் சுவாமிகளின் ஆக்கத்தை அளித்த அன்பர், மற்றும் பதிவுலக அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.


ஈழ வரலாறு குறித்த மேலதிக வாசிப்பினைத் தருமாறு தமிழகச் சகோதரர்கள் கேட்டிருந்தீர்கள். எமது சகோதர வலைப்பதிவர் ஈழநாதன் பின்னூட்ட மூலம் மேலதிக தகவல்களை அளித்திருந்தார். நன்றியோடு அந்த இணைப்பையும் கீழே தருகின்றேன்.
நல்லூர் இராசதானி: வ.ந.கிரிதரன்
நல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா ஏரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது
இதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்:
யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை - PDF வடிவில்
யாழ்ப்பாண வைபவ மாலை: முதலியார் குல.சபாநாதன் - PDF வடிவில்

இதுவரை நாளும் நல்லை நகர்க் கந்தனாலயத்தின் மகோற்சவ காலப் பதிவுகளாக அணி செய்த பதிவுகளின் தொகுப்பை உங்கள் வசதிக்காக இங்கே தருகின்றேன்.
முதலாந் திருவிழா - நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்

இரண்டாந் திருவிழா - கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு

"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.
நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா

நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது.
அழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா

நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா

யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா

உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா

போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா

சங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா

கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா

கந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா

குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா

நல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா

பொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா

எந்நாளும் நல்லூரை வலம் வந்து....! - பதினாறாந் திருவிழா

நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந் திருவிழா

நல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா

உந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவிழா

எங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா

ஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா

இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.
"சும்மா இரு" - இருபத்தியிரண்டாந் திருவிழா

"முருகோதயம்" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் திருவிழா

"முருகோதயம்" என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.
தேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்...! - இருபத்துநான்காந் திருவிழா

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.
நல்லூரான் தீர்த்தோற்சவம் - இருபததைந்தாந் திருவிழா

இன்றைய நல்லை நகர் நாதன் தீர்த்தோற்சவ நன் நாளில் ஒரு இனிய ஈழத்து மெல்லிசையில் நல்லைக் கந்தன் பாடல் வருகின்றது. பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.
விசேட பதிவுகள்
மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!
2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்
2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்
15 comments:
நல்லூர் திருவிழா உற்சவம்
காணமுடியாத நிலையிலிருக்கும்
ஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை
இங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்!
வரலாற்று பதிவாக்கியமைக்கு நன்றிகளுடன்!
நாளும் வழிபடுவோம், நல்லூர் முருகனை!
நிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.
மிக்க நன்றி.
//ஆயில்யன் said...
நல்லூர் திருவிழா உற்சவம்
காணமுடியாத நிலையிலிருக்கும்
ஈழத்தமிழர்களுக்காக நான் செய்த உதவி தங்களின் பதிவுகளை
இங்கு வாழும் ஈழத்து நண்பர்களுக்கு சுட்டி காட்டி,அவர்கள் மகிழ, நானும் மகிழ்ந்தேன்!//
வணக்கம் ஆயில்யன்
தங்களின் பின்னூட்டம் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்து போனேன். கடல் கடந்து வாழும் எம்முறவுகளுக்கு எங்களால் முடிந்த பணியைச் செய்ய வைத்ததற்கு அந்த நல்லூரானை நன்றியுடன் நினைக்கின்றேன்.
பிரபா!
இன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்...
நல்லூர்
வேண்டியன பெற்றுத் தரும் நல்லூர்
தமிழ்க் கூட்டம் நாடிச் செல்லூர்
அந்த நல்லூரில் குடிகொண்ட கந்தப் பெருமானின் அருளை ஒவ்வொரு நாளும் வாறி வாறி வழங்கிப் பதிவுலகில் தானொரு பாரி என்று நின்ற கானா பிரபாவிற்கு நன்றி. நெல்லிக்கனி ஒன்றுதான் கொடுத்தான் அதியமான். நாளொன்றுக்கும் பதிவுகள் கொடுத்தான் இந்த அதிகமான். முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன்.
பிரபா!
எனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.
நாளும் காலை கணனியைத் திறந்து,நல்லூரானைக் கண்ணில் வைத்து விட்டு அடுத்த அலுவல் பார்க்கும் படி இருந்தது.
சுடச் சுடப் படமனுப்பிய செந்தூரன் மற்றும் அனைவருக்கும் நன்றி!
அடுத்த வருடம் நேரில் பார்க்க அழைக்கட்டும்.
//வடுவூர் குமார் said...
நிறைவான பதிவு.. படித்த எங்களுக்கு.
மிக்க நன்றி. //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வடுவூர் குமார்
அருமையான பணி தலைவா :)
அருமையான பாடல்கள், புகைப்படங்கள், வராலற்று தகவல்கள் என ஒவ்வொரு நாளும் சிறந்த பதிவுகளை இட்டமைக்கு மிக்க நன்றிகள் :)
//மலைநாடான் said...
பிரபா!
இன்னும் அனைத்துப் பதிவுகளையும் வாசிக்கவில்லை. ஆயினும் தொடர்பதிவொன்றினைத் தடையின்றித் தந்தமைக்காகப் பாராட்டுக்கள். பதிவுகள் குறித்துப் பின்னர்... //
மிக்க நன்றி மலைநாடான், மற்றைய பதிவுகளையும் வாசித்து முடிந்தால் அபிப்பிராயம் சொல்லுங்கள்
// G.Ragavan said...
முருகனருள் முன்னின்று வாழ்க. நல்லதொரு தொகுப்பாக இந்தப் பதிவுகள் நின்று நிலைக்க விரும்புகிறேன். //
வணக்கம் ராகவன்
தமிழ் வன்மையினாலேயே பின்னூட்டத்தைச் சிறப்பித்து விட்டீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
எனக்குக இவ்வருடம் கோவிலில் நானும் நின்றது போல் இருந்தது.//
வணக்கம் யோகன் அண்ணா
இந்தப் பெரும் பணிக்கு நீங்கள் ஓவ்வொரு பதிவிலும் தந்த ஊக்கமும் ஒரு பெரும் உதவியளித்தது. என்னோடு பயணித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
//கோபிநாத் said...
அருமையான பணி தலைவா :)//
மிக்க நன்றி தலைவா
பிரபா
நல்லூர்க் கந்தன் பொப் இசைப் பாடல் சிங்களவர் மத்தியில் வெகு பிரசித்தமானது.
எல்லோரையும் கவரக் கூடிய பாடல் அது.
சுமார் ஒரு மாதகாலமாகத் தொடர்ந்த உங்களது பணி இனிதே நிறைவு பெற்றுவிட்டது.வாழ்த்துக்கள்.
பஹீமாஜஹான்
வணக்கம் சகோதரி பஹீமாஜஹான்
உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கின்றது.
ஏ.ஈ.மனோகரனின் பரவலாக அறியப்பட்ட சிறந்த பொப் இசையில் இதுவுமொன்று.
இன்று தான் உங்கள் கவிதைகளை ஆனந்த விகடனில் வாசித்து மகிழ்ந்தேன். உங்களின் கவிதைகள் பரவலான வாசகர் வட்டத்தைச் சென்றதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈழத்துக் கலைஞர்கள், வரலாறு போன்றவற்றை அவ்வப்போது எடுத்து வருகிறீர்கள். உங்கள் ஆக்கங்கள் மிகவும் எளிமையான முறையில் பல பழைய நினைவுகள மீட்டி வருகின்றது. உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரு கோர்வையாக தருவதில் உங்கள் எழுத்து திறனின் வலிமை தெரிகின்றது. உங்கள் முயற்சிகள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் காரூரன்
Post a Comment