கடும் போர்க்காலத்தில் நமது ஈழத்து இலக்கிய வளம் பெருக, குறுகிய காலத்திலேயே தொடர்ந்து பல எழுத்தாளர்களது நாவல் இலக்கியங்களை மீரா வெளியீடு மூலம் வெளியிட்டவர். ஆரம்பத்தில் திரையிசைப் பாட்டுப் புத்தகங்கள் வெளியிட்டு வந்தவர். 1988 ஆம் ஆண்டு முதல் நாவல்கள் முதலான படைப்புகளை வெளியிட்டார்.
அச்சுத்தாளுக்கும் அரசு தடை போட்ட நெருக்கடியில் முட்டி மோதி இலக்கியம் சமைத்தவர்களில் ஒருவர்.
சின்னச் சின்ன நாவல்கள் ஆனால் எல்லாமே காத்திரம் நிறைந்தவை.
செங்கை ஆழியான் தொடங்கி ஈழத்தின் மூத்த படைப்பாளிகள், இளம் படைப்பாளிகள் எல்லோருக்கும் தன் படைப்பக வாசல் திறந்தவர்.
மழைக்காலம், ராதையின் நெஞ்சம், முடிவல்ல ஆரம்பம், மண்ணின் தாகம், பூஜைக்காக வாழும் பூவை, இருள் இரவில் அல்ல என்று ஒவ்வொன்றையும் விலை கொடுத்துப் படித்த காலங்கள் நினைவில் நிற்கின்றன.
அதன் சாட்சியமாக இன்னும் சில நூல்களை என் வீட்டு நூலகத்தில் பேணி வருகிறேன்.
எமது ஈழத்துப் பதிப்புலகத்தில் டேவிட் லிகோரியின் பெயர் அழியாது நிலைத்து நிற்கும் 🙏
கானா பிரபா
13.01.2025