


இன்றோடு என் நல்லைக் கந்தனின் மகோற்சவ காலப் பதிவுகள் ஒரு நிறைவை நாடுகின்றன. இருபத்தைந்து நாட்களுக்கு முன், எம் பெருமான் முருகக்கடவுளை நினைந்தவாறே நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பதிவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டேன். மாதத்துக்கு இரண்டு பதிவுகள் இடும் எனக்கு இது அசாதாரண முயற்சியாகவே ஆரம்பத்தில் தோன்றியது. ஆனால் பதிவுக்காக எமது ஈழவரலாற்றாசிரியர்களின் நூல்களை நுகர்ந்து பொருத்தமான பதிவுகளாக்கும் போது சுமை பருத்திப் பஞ்சாய் ஆனது. அத்தோடு என் இந்தப் பதிவுப் பயணத்தில் கூடவே பயணித்து எப்போதும் ஊக்கமளித்த பதிவுலக நண்பர்களுக்கும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றேன்.
இந்த நல்லூர்க்காலத்தில் என் நனவிடை தேய்தலாகப் பல பதிவுகளைத் தரவிருந்தேன். ஆனால் வரலாற்று, ஆன்மீக விடங்களோடு இயன்றளவும் உங்களை இருத்தி வைப்பதற்காக அவற்றைத் தவிர்த்து விட்டேன். அவை பிந்திய காலத்தின் பதிவுகளாக வரும்.
எனது இந்தப் பயணத்தில் உதவிய ஈழ வரலாற்றாசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், நல்லைக்கந்தன் மற்றும் நற்சிந்தனைப் பாடல்களையும், சங்கீத கதப்பிரசங்கத்தையும் வெளியிட்டுதவிய அமைப்புக்களுக்கும், யோகர் சுவாமிகளின் ஆக்கத்தை அளித்த அன்பர், மற்றும் பதிவுலக அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்.


ஈழ வரலாறு குறித்த மேலதிக வாசிப்பினைத் தருமாறு தமிழகச் சகோதரர்கள் கேட்டிருந்தீர்கள். எமது சகோதர வலைப்பதிவர் ஈழநாதன் பின்னூட்ட மூலம் மேலதிக தகவல்களை அளித்திருந்தார். நன்றியோடு அந்த இணைப்பையும் கீழே தருகின்றேன்.
நல்லூர் இராசதானி: வ.ந.கிரிதரன்
நல்லைக் கந்தன் பற்றிய வரலாற்று நூலில் நான் வாசித்தபடி ஜமுனா ஏரிக்கு அண்மையில் தான் முன்னைய கோயில் இருந்தது என்றும்.தற்போதைய இடம் முஸ்லிம்கள் குடியிருந்த இடமென்றும் ஞாபகமிருக்கிறது.தவிர நல்லூர் கோவில் ஞானியொருவரின் சமாதி மேல் கட்டப்பட்டிருப்பதால் ஆரம்பத்தில் மடாலயம் என்றே அழைக்கப்பட்டது
இதே நேரம் நல்லூரோடு யாழ்ப்பாணச் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு நூலகத்திலிருந்து தொடர்புடைய நூல்களுக்கான சுட்டிகள்:
யாழ்ப்பாணச் சரித்திரம்: ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை - PDF வடிவில்
யாழ்ப்பாண வைபவ மாலை: முதலியார் குல.சபாநாதன் - PDF வடிவில்

இதுவரை நாளும் நல்லை நகர்க் கந்தனாலயத்தின் மகோற்சவ காலப் பதிவுகளாக அணி செய்த பதிவுகளின் தொகுப்பை உங்கள் வசதிக்காக இங்கே தருகின்றேன்.
முதலாந் திருவிழா - நல்லூர்க் கந்தனிட்டைப் போவோம்

இரண்டாந் திருவிழா - கோயிலுக்கு வெளிக்கிட்டாச்சு

"அப்பா! இண்டைக்கு எனக்கு நல்லூர்க் கோயில் வரலாற்றைச் சொல்லுங்கோவன்"
என்று ஆவலோடு நான் அடியெடுத்துக் கொடுக்கிறேன்.
நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழா

நூற்றாண்டுகளாக விளங்கியுள்ளது.
அழிவுற்ற நல்லூர் இராசதானி - நாலாந் திருவிழா

நல்லைக் கந்தனுக்கு முதல் ஆலயம் - ஐந்தாம் திருவிழா

யார் இந்த செண்பகப் பெருமாள்? - ஆறாந் திருவிழா

உயிர்த்தெழுந்த இரண்டாம் ஆலயம் - ஏழாந் திருவிழா

போர்த்துக்கேயர் வருகை - எட்டாந் திருவிழா

சங்கிலி மன்னன் அரசாங்கம் - ஒன்பதாந் திருவிழா

கந்தனாலயத்தை அழித்த போர்த்துகேயர் - பத்தாந் திருவிழா

கந்தமடாலயம் அமைந்த கதை - பதினோராந் திருவிழா

குருக்கள் வளவில் எழுந்த கந்தவேள் கோட்டம் - பன்னிரண்டாந் திருவிழா

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகாமண்டபத்துக்கு கீழைச் சுவரிலே மேற்கு முகமாக இக்கோயில் தாபகராகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிரதிமையும், அவர் மனைவி பிரதிமையும் வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியர் காலத்து நல்லூர் - பதின்மூன்றாந் திருவிழா

நல்லூரும் நாவலரும் - பதின்னான்காம் திருவிழா

பொப் இசையில் மால் மருகன் - பதினைந்தாம் திருவிழா

எந்நாளும் நல்லூரை வலம் வந்து....! - பதினாறாந் திருவிழா

நல்லைக் கந்தசுவாமி மீது வாழி விருத்தம் - பதினேழாந் திருவிழா

நல்லை நகர்க் கந்தரகவல் - பதினெட்டாந் திருவிழா

உந்தன் அருள் வேண்டுமடா முருகா - பத்தொன்பதாந் திருவிழா

எங்கள் குருநாதன் - இருபதாந் திருவிழா

ஈசனே நல்லூர் வாசனே - இருபத்தியோராந் திருவிழா

இன்றைய திருவிழாப் பதிவில் சிவயோக சுவாமிகள் அருளிச்செய்த இரண்டு நற்சிந்தனைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. அத்தோடு இந்த ஆண்டு நல்லைக் கந்தனாலயத்தில் நிகழ்ந்த திருமஞ்சத் திருவிழாப் படங்களும் அலங்கரிக்கின்றன.
"சும்மா இரு" - இருபத்தியிரண்டாந் திருவிழா

"முருகோதயம்" சங்கீதக் கதாப் பிரசங்கம் - சப்பரத் திருவிழா

"முருகோதயம்" என்னும் இச்சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள்.
தேர் காண வாருங்கள்....கந்தனைத் தேரினில் பாருங்கள்...! - இருபத்துநான்காந் திருவிழா

இன்று நிகழ்ந்த இந்தச் சிறப்பான நாளின் நிகழ்வுகளை நீங்களும் காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆவலில், இடம்பெற்ற சில படையல்களை இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன். அத்துடன் இப்பதிவில் இடம்பெறும் நிகழ்வுப் படங்கள் 2005 இல் நல்லைக் கந்தனாலயத் தேர்த் திருவிழாவில் எடுக்கப்பட்டவையாகும்.
நல்லூரான் தீர்த்தோற்சவம் - இருபததைந்தாந் திருவிழா

இன்றைய நல்லை நகர் நாதன் தீர்த்தோற்சவ நன் நாளில் ஒரு இனிய ஈழத்து மெல்லிசையில் நல்லைக் கந்தன் பாடல் வருகின்றது. பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர் யாத்த "நல்லை முருகன்" பாடலை, மோகன்ராஜ் இசையமைப்பில் ரகுநாதன் பாடுகின்றார்.
விசேட பதிவுகள்
மஞ்சத் திருவிழாவில் தங்கரதம் வந்தது வீதியிலே....!
2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்
2007 நல்லைக்கந்தனின் ரதோற்சவப் படங்கள்