![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGjQfPe-ARNViXjzY5wG8dQiOcaGC6rSfMyuWnVXl02_-d6Oz63aAnHHvOqV2v1BaW_OdiGNdQsKAxPgc8wNCuJpTFeGHz3lfH5coPto2qGRefT-qpvUfBM1ULbWubyFAB8WCf/s400/untitled.bmp)
அங்கு 14 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான்.அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.அவனது குடும்பம் வறிய குடும்பம்.மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது.அந்த நிலையில் அவன் நாடகங்களில் பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான்.சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது.
இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக வெளியிட்டபோது தெருவழி அரங்குகளில் அவன் பாடிய பாடல்களும் புதிய பாடல்களும் இடம்பிடித்தன.இசையின் நுணுக்கங்கள் இல்லாத போதும் மக்களின் உள்ளங்களில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் எழுச்சியாகப்பாடியது அவனின் வெற்றி. அவன் கண்ணன். பல கண்ணன்கள் இசையுலகில் இருக்க இவன் குட்டிக்கண்ணன் என்று பெயர்பெற்றான்.அவனின் சிறுவன் குரல் இருக்கும் வரை சிறுவனாக பாடினான்.ஆடினான் மக்கள் மனங்களை கொள்ளை கொண்டான்.
இடம்பெயர்வாழ்வில் வறுமை வாட்ட போர்நிறுத்த உடன்பாடு அவனது குடும்பத்தை தாய்மண் திருமலை நிலாவெளிக்கு செல்ல வழிவகுத்தது.அங்கு ஓரளவு வசதியுடன் வாழ்க்கை போகத்தொடங்க அவன் குட்டிக்கண்ணன் என்ற நிலையில் இருந்து குரல் மாறியது.இந்த மாற்றத்துடன் அவன் பெரிதாக பேசப்படவில்லை. திருகோணமலையில் போர்நிறுத்த காலத்தில் மீண்டும் சிங்கள அரசின் இனச்சுத்திகரிப்பு தொடங்க மீண்டும் அவன் வன்னிக்கு வந்தான். பாடசாலை மாணவனாக உயர்தரத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் விடுதலைப்போராட்டத்தில் இணைந்தான்.குட்டிக்கண்ணன் தகுதியை குரலில் இழந்த அவன் பெரிய கண்ணனாக பாடல் பாட தன்னை தயார்படுத்திக்கொண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்து போராளியாகி களத்தில் குதித்தான். போராளி சிலம்பரசனாக உருவெடுத்துக் கொண்டார். சிறுவனில் மக்கள் குரலால் எழுச்சிகொள்ள வைத்த அவன் விடுதலைப்போராட்டத்தகுதிக்கான வயதை அடைந்ததும் தனது பாடல்களில் ஒலித்த குறிக்கோளை களத்தில் காட்டத்தொடங்கினார்.அவ்வாறு களத்தில் எதிரியுடனான போரில் அவன் வீரச்சாவைத் தழுவினான்.
குட்டிக்கண்ணன் நினைவாக அவன் குரலில் இரு பாடல்கள்
ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டு வந்த பூமி
அப்பன் ஆச்சி பாட்டன் பூட்டி சுற்றி வந்த வீதி