skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Thursday, June 05, 2008

மேளச்சமா...!

"மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எட்டு நாள், அப்பிடியெண்டா இண்டைக்கு வியாழன் தேர் நடக்கும், நாளைக்கு தீர்த்தம் என்ற என்ற மனக்கணக்கைச் செய்து முடித்தேன். எங்கட மடத்துவாசல் பிள்ளையாரடி கொடியேறிவிட்டால் நடக்கிற புதினங்களை ஒரு பதிவில் சொல்லேலாது. ஆனாலும் நாளையான் தீர்த்தத் திருவிழாவை நினைச்சால் அதைச் சொல்லவும் நிறைய விசயம் இருக்கு.

மடத்துவாசல் பிள்ளையார் கோயில் பத்து நாள் உற்சவம் முடிந்து பதினோராவது நாள் தீர்த்ததுக்காக களைகட்டும். முதல் நாள் தேரோட மல்லுக்கட்டின அலுப்பெல்லாம் ஒரு பொருட்டாவே இருக்காது எங்கட பெடியளுக்கு. இரவிரவா கோயில் கிணத்தடியில் சோடிக்கத் துவங்கி விடுவினம். கிணத்தடிக்குப் பக்கத்தில் வெள்ளைக் குருமணல் தறிச்சுப் பரவின ஓலைக்கொட்டகை தான் அது நாள் வரைக்கும் திருவிழாக் காலத்தில் அரட்டைக் கச்சேரிக்கும், கச்சான் உடைச்சுத் தின்னவும் புகலிடமாக இருக்கும். ஆனால் தீர்த்த நாளன்று அந்த இடமும் வெறுமையாக்கப்பட்டு கடலைச் சரை, கச்சான் கோது எல்லாம் அகற்றி, அமைச்சர் வரும் தொகுதி மாதிரி மாறிவிடும். அரட்டை அடிக்கிற கூட்டம் தண்ணீர்ப்பந்தலுக்கு பக்கத்திலை இருக்கிற கொட்டகைக்கு இடம் பெயரும்.

கடைக்கார மணியண்ணை தான் தீர்த்தத் திருவிழா உபயகாரர். ஆளைப் பார்த்தால் வாட்டசாட்டமாக மீசை முருகேஷ் போன்று "ல" வடிவ தொக்கை மீசையோட ஆஜானுபாகுவாக இருப்பார். அவரின் தோற்றத்தை வச்சு ஆளை மட்டுக்கட்டேலாது. அவரோட பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தால் "அப்பன்", "சொல்லு ராசா" எண்டு தேனொழுகப் பேசுவார். தீர்த்தத்துக்கு தண்ணியாகப் பணத்தைச் செலவழிச்சு கொண்டாடி மணியண்ணை "மணி" அண்ணை தான் என்று கோயில் ஐயரில் இருந்து கோடியில் இருக்கும் பொன்னம்மாக்கா வரை சொல்ல வைப்பார்.

தீர்த்த நாளும் வந்திட்டுது. பின்னேரம் பொழுது படமுதலே கூட்டம் கூட்டமாய் கோயில் கிணத்தடியில் வந்து அம்மாமாரும், அக்காமாரும் இடம்பிடிச்சு இருந்திடுவினம். வந்தன் மண்டபத்தில் சுவாமியை அலங்காரம் செய்வதில் எங்கள் ஊர் பூக்காரர் நாகராசாவும், உதவியாட்களும் இருப்பினம். வெளியிலை சுவாமிமாரைக் காவும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி கயிறு பிணைக்கும் வேலைகளில் சிறீமான் அண்ணையும் பெடியளும் இருப்பினம். அங்காலை பார்த்தால் ஐங்கரன் அண்ணையாட்கள் பெரும் தொகையாகப் பறிக்கப்பட்ட பன்னீர்ப் போத்தல்களின் பின்பக்கம் ஒரு குத்து விட்டு, தக்கையை எறிந்துவிட்டு கிடாரங்களில் பன்னீரால் நிரப்புவார்கள்.

வசந்த மண்டபத்தில் பூசை புனஸ்காரங்கள் தொடங்கிவிடும். வெளியில் கிணற்றடிக்குப் பக்கத்தில் இருக்கும் பந்தலில் நாதஸ்வர, மேளகாரர் நிரம்பியிருப்பினம். அளவெட்டியில இருந்து பத்மநாதன் குழுவினர், இணுவில் தவில் வித்துவான் சின்னராஜாவும் அவரின்ர இரண்டு பெடியளும், கோண்டாவில் கானமூர்த்தி பஞ்சமூர்த்தி குழுவினர், கோவிந்தசாமியின் மக்கள் இரண்டு பேர், சாவகச்சேரியில் இருந்து பஞ்சாபிகேசன் குழுவினர், இணுவில் பஞ்சமூர்த்தி (நாதஸ்வரம்) புண்ணியமூர்த்தி (தவில்), தவில்மேதை தட்சணாமூர்த்தியின்ர மேன் உதயசங்கர் இன்னும் ஞாபகத்தில் வாராத நிறையப் பேரை அண்டு தான் காணலாம்.

அரை வட்டமாக இருந்து கொண்டு முதலில் அடக்கமாக ஆரம்பிக்கும் மேளச்சமா. பிறகு மெல்ல மெல்ல நாதஸ்வரங்களின் தனி ஆவர்த்தனம். பிறகு ஒராள் சொல்ற வாசிப்புக்கு பதில் சொல்லுமாற் போல இன்னொருவர் வாசிப்பார். மெல்ல மெல்ல ஆரம்பிச்சு பெரிய மழையடிக்குமாப் போல இந்த மேளச்சமா களைகட்டும். பக்கத்தில் இருந்து அடுத்த தலைமுறை ஒன்று சுருதிப் பெட்டியை வாசிக்கும், இன்னொருவர் சிஞ்சா அடிப்பார். நாதஸ்வரம் வாசித்தவர் முறுவலோடு வாசித்து விட்டு முறுவலோடு எப்படி? என்குமாற் போலப் பார்ப்பார். அதற்குப் பதிலடி கொடுத்தவர் இது போதுமா? என்று வாசிப்பிலேயே கேட்பார். தவில்வித்துவானின் கழுத்தில் பாயும் வடச்சங்கிலி அங்கும் இங்கும் அலைந்து திரியும் வேகத்தில் அவரின் அகோர வாசிப்பு இருக்கும்.நாதவெள்ளத்தில் முழ்கியிருக்கும் போது ஒரு சில அடிகள் தவறுதலாக சிஞ்சா அடி நழுவினால் போதும் தவில் வித்துவான் சின்னராசா இருந்த இடத்திலேயே பல்லை நறுவி உறுக்குவார். பல சமயங்களில் பத்மநாதன் போல பெரிய நாதஸ்வர வித்துவான்களே தாங்கள் வாசிக்காத நேரங்களில் இருக்கும் தவில் கச்சேரிக்கு சிஞ்சா போட்டு சீரான இசையில் தங்கள் பங்களிப்பையும் கொடுப்பினம். தான் இளமையாக இருந்த காலத்தில் நடந்ததை பத்மநாதன் இப்படிச் சொல்லியிருக்கிறார், தொடர்ந்து போய்க் கொண்டிருந்த மேளக் கச்சேரி ஒன்றில் சிறுவானாக இருந்த பத்மநாதன் சஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறார், ஒரு கட்டத்தில் இவர் கையில் சிராப்பு ஏற்பட்டு இருந்து ரத்தம் பெருக்கெடுக்கவும், அப்போது வித்துவானின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்று கச்சேரி முடியும் வரை தொடர்ந்ததாகவும் சொல்லியிருக்கிறார். இப்படிப் பக்கவாத்தியம் வாசித்து, தமது குருவினதும், சக கலைஞர்களதும் வாசிப்பைக் கவனித்தவர்கள் தான் பிற்காலத்தில் நாதஸ்வர மேதைகளாகவும், தவில் வித்துவான்களாகவும் வந்திருக்கினம். அரை வட்ட வடிவாக அமர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் நாதஸ்வர தவில் வித்துவான்களின் வாசிப்பை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆறிலிருந்து அறுபது, எழுபது, எண்பது வரை. சிலர் கையில் தாளம் போட்டு தமக்கும் சங்கீத ஞானம் இருக்கு என்று நிரூபிக்க, இன்னுஞ் சிலரோ கண்களை மூடி தலையை மட்டும் ஆட்டுவார்கள்.


"வசந்த மண்டபத்தில இருந்து சாமி வெளிக்கிட்டுதாம்" கோயிலின் உள்ளேயிருந்து வரும் மேளச்சத்ததின் தொனியை வச்சே வெளியில இருக்கிற அம்மாமார் சொல்லுவினம். பஞ்சமுக விநாயகர் நடு நாயகமாக இருக்க, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், இலக்குமி, பார்வதி சமேத நடராசப் பெருமான் என்று சுவாமிகள் வசந்த மண்டபத்தில இருந்து வெளியில் வரும். தீர்த்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் உள்ள மேடையில் விக்கிரகங்கள் கழற்றப்பட்ட சுவாமிகள் இருக்கையில் அமரவும், சோமஸ்கந்தக் குருக்கள் தீர்த்த உற்சவச் சடங்குகளைத் தொடங்குவார். பகக்த்தில் உபயகாரர் மணியண்ணை குடும்பம் பவ்வியமா இருந்து பக்தியோடு பார்த்துக் கொண்டிருப்பினம்.

பக்கத்து கொட்டகையில் இருந்த நாதஸ்வர மேள கச்சேரி மெல்ல மெல்ல போட்டிகள் களைந்து ஒரே குடையின் கீழ் கூட்டணி ஆட்சியில் இருந்து வாசிப்பை தொடருவார்கள்.
சோமஸ்கந்த குருக்கள் தீர்த்தோற்வச நிகழ்வை நடத்தியதற்கு அறிகுறியாக கிடாரத்தில் இருக்கும் தீர்த்தத்தை மணியண்ணரின் தலையில் ஊற்றுவார். ஆள் கண்களை மூடிக்கொண்டு பரவசத்தொடு கைகூப்பியவாறே அமர்ந்திருப்பார். பிறகு ஐயர் சுற்றும் முற்றும் இருக்கும் சனங்களுக்கு பன்னீரால் சுழற்றி இறைப்பார். அவ்வளவு தான், சுதந்திரம் கிடைத்த திருப்தியில் பெடியள் கூட்டம் கிடாரத்தை அப்பால் தூக்கிக் கொண்டு அப்பால் நகரவும், அம்மாமார் தீர்த்தம் எடுக்க பொலித்தீன் பைகளுடன் கிணற்றடிக்கு முன்னேறுவார்கள்.

சுவாமிமார் வெளிவீதி வலம் வருவதற்காக, முன்னர் வந்த வாகனத்திலேயே ஏறி அமர, ஆளாளுக்கு ஒவ்வொரு வாகனத்தில் பிணைத்திருக்கும் மரத்தூணைக் கழுத்தில் செருகிக்கொண்டு முன்னேறவும், பன்னீர் கிடாரத்தோடு காத்திருக்கும் பெடியள் கையில் இருக்கும் அண்டாவில் நிறைத்த பன்னீரை வாரி அவர்கள் மேல் இறப்பார்கள். சுவாமிமார் ஆடி ஆடி முன்னுக்கு போவினம். பாரமான மரத்தூணில் சுவாமியை ஏற்றி அங்கும் இங்கும் ஆடுவது கழுத்துப் பகுதியை அண்டி அண்டி வலியை தூண்டும். ஆனால் அதற்கு ஒத்தடம் போடுமாற்போல பாய்ந்து வரும் பன்னீர்த் தெளியல் இதமாக இருக்கும். தண்ணீர் எறிதலும் விட்டபாடில்லை. கண்களுக்குள் பாயும் பன்னீர் இலேசான உறுத்தலைக் கொடுத்தாலும், "அரோகரா! அரோகரா" எண்டு கத்திக் கொண்டே எதையும் தாங்கி முன்னேறுவோம். அரைக்கட்டு கட்டிய வேட்டியில் பன்னீர் மழை தோய்ந்து உள்ளுக்குள் இருக்கும் நீலக்க்காற்சட்டை தெரியும். தூரத்தில் அருச்சனைச் சாமான்களுடன் ஹாப் சாறி (தாவணி)ஒண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருக்கும். கண்கள் மட்டும் அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

வானில் மேல் நோக்கிப் பாய்ந்து தோல்வியடைந்து விழும் பன்னீர் மழை ஒரு பக்கம், சுவாமிகளைத் தூக்கி ஆடும் பெடியள் ஒருபக்கம், அரோகரா அரோகரா என்ற காதைக் கிழிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒரு பக்கம், இன்னும் இன்னும் வேகமெடுத்து வாசிக்கும் தவில், நாதஸ்வர வித்துவான்களின் உச்சபட்ச வாசிப்பு ஒரு பக்கம் என்று ஒரு பெரும் ஊழிக் கூத்தே அங்கு நடக்கும்.

மணியண்ணையின் கண்களெல்லாம் பன்னீரையும் மீறி ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். அவற்றை வாயிலிருந்து முணுமுணுப்பாய்,

"என்ர பிள்ளையாரப்பு! எங்களையெல்லாம் காப்பாத்து"

000000000000000000000000000000000000000000000
கடந்த மார்ச் மாதம் 2008 சிட்னி முருகன் ஆலய மகோற்சவத்திற்காக வருகை தந்திருந்த சிட்னி முருகன் ஆலயத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பதற்கு ஈழத்தில் இருந்து வருகைதந்த இன்னிசை வேந்தன் எம்.பி நாகேந்திரன் அவர்கள், நாதஸ்வர கான விநோதன் பி.எஸ் பாலமுருகன் அவர்கள், லய ஞான செல்வம் ஆர்.வி.எஸ் சிறிகாந்த் அவர்கள், லய ஞான பாலன் பி.எஸ். செந்தில்நாதன் ஆகியோருடனான நேர்காணலை எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மூத்த அறிவிப்பாளர் நவரட்ணம் ரகுராம் அவர்கள் செய்திருந்தார். எங்கள் படைப்பாளிகள், கலைஞர்களை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அந்தப் பேட்டியை ஒலிவடிவிலும், எழுத்து வடிவிலும் இங்கே தருகின்றேன்.


ஒலி வடிவில் கேட்க


தரவிறக்கிக் கேட்க

கேள்வி: இந்த கலையை அதாவது இந்த வாத்தியத்தை கற்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

எம்.பி நாகேந்திரன்

பதில்: எனது தந்தையார்; புகழ்பூத்த நாதஸ்வர கலைஞர் கே.எம். பஞ்சாபிகேசன். தந்தையார் நாதஸ்வர கலைஞராக இருந்தமையால் எனக்கு இந்த கலையில் ஆர்வம் ஏற்பட அதுதான் முதல் காரணமாயிருந்தது.

அதோடு என்னுடைய பேரனாரும் நான் இந்த கலையை பழக வேண்டும் என்று விரும்பினார். அதனால் எனது 15வது வயதிலே நான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இந்த கலையை நான் கற்க ஆரம்பித்து விட்டேன்.

ஆரம்பக் கல்வியை எனது தந்தையாரிடமே பயின்றேன். பின்பு அளவெட்டி எம்.பி பாலகிருஸ்ண நாதஸ்வர வித்துவான் அவர்களிடம் ஆறு வருடம் அவரின் வீட்டில் தங்கியிருந்து குருகுல முறைப்படி இந்த கலையைப் பயின்று பின் தொடர்ந்து அவரிடமே 4 வருடம் நாதஸ்வரம் வாசித்து வந்தேன். பின்பு இந்தியாவிற்கும் சென்றும் இந்த கலையைக் கற்றிருக்கிறேன்.


பி.எஸ் பாலமுருகன்

எனது அப்பா குப்புசாமிபிள்ளை அவரும் நாதஸ்வர வித்துவான். நாதஸ்வரம் கற்க வேண்டும் என்று அவரின் விருப்பப்படிதான் நானும் நாதஸ்வரம் கற்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் தந்தையாரிடம் நாஸ்வரம் கற்றேன். பின்னர் துரைராஜாவிடம் ஒரு வருடம் நாதஸ்வரம் கற்றேன். அதற்கு பின்னர் எம்.கே பத்மநாதனிடம் இரண்டு வருடம் நாதஸ்வரம் கற்றேன்.

பி.எஸ். செந்தில்நாதன்

பாலமுருகன் எனது சகோதரர் தான். நானும் தந்தையாரிடம் தான் ஆரம்பத்தில் நாதஸ்வரம் கற்று பின்னர் நாச்சிமார் கணேச பிள்ளையின் மகன் சிவகுமாரிடமும் நாதஸ்வரம் கற்றேன்.


ஆர்.வி.எஸ் சிறிகாந்த்

எனது தந்தையார் ஆர்.வி. செல்வராஜா அவரிடம் தான் எனது 13 வது வயதில் ஆரம்ப கல்வியை பயின்றேன். அதனைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள பொன். முத்துக்குமாரசாமி அவரிடம் ஒரு வருடம் தவில் கற்றுக் கொண்டேன். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் தவில் வாசித்து வந்தேன். திருப்பி தாய்நாட்டிற்கு வரவேணும் என்ற ஆசை அதனால் நான் திரும்பி வந்துவிட்டேன்.

கேள்வி: நாகேந்திரன் அவர்களே ! இந்த கலையை எல்லோருமே உங்கள் தந்தையாரிடம் கற்று பின்னர் ஒரு குருவிடம் பயிற்சி எடுத்திருக்கிறீர்கள். அப்படி இல்லாமல் தனிபட்ட முறையில்; தாமாகவே பயிற்சிகளை எடுத்து ஒருவர் பிரசித்தமான கலைஞராக வர முடியாதா?

பதில்: அப்படி நடக்கிறது ரொம்பக் குறைவு. சாத்தியமில்லை. நிச்சயமாக எங்களுடைய கலையைப் பொறுத்த வரை குருகுல முறைப்படி ஒரு குருவிடம் முறைப்படி கற்று வந்தால் தான் பூரணமாக அதை நாங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி இதே நிலைப்பாடு தான் எத்தனையோ காலமாக தொடர்ந்து நடந்து வருகின்றது.

இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.

அந்த நிலைப்பாடு இலங்கையில இல்லை. ஒருக்கா யாழ்ப்பாண துர்காதேவி தேவஸ்தானத்தில நாதஸ்வர தவில் கல்லூரி ஒன்றைத் தொடங்கினவை.
அது சரியான முறையில நடைபெறவில்லை. பல சிக்கல்கள் அதனை ஓழுங்கான முறையில் சொல்லிக் கொடுப்பதற்கான ஆசிரியர்மார் வருவதும் குறைவு.

எங்கள் நாட்டைப் பொறுத்த சூழலில அந்த பிள்ளைகளுக்கு ஒரு கச்சேரி என்று வந்து விட்டால் அந்த பழகிற பிள்ளைகளும் கச்சேரிக்கு போய்விடுவார்கள். ஒழுங்கா அந்த நேரத்திற்கு கிளாஸ்வர முடியாது. எனவே அது அப்படியே மங்கிப் போய்விட்டது. தொடர்ந்து நடத்த முடியா நாட்டுச் சூழ்நிலை.

இந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன்.


கேள்வி: உங்களுடைய வாத்தியத்தைப்பற்றி சில விடயங்களை அறிந்து கொள்ள விரும்புகின்றேன். எல்லோரும் அந்த இசையை ரசிக்கின்றோம். ஆனால் அந்த வாத்தியம் எப்படியிருக்கின்றது? என்ன மரத்தினால் செய்யப்பட்டது போன்ற விடயங்களைஅறிவதில்லை. அதை நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

பதில்: நாதஸ்வரத்தை எடுத்துக் கொண்டால் 2 பகுதியாக பிரிக்க முடியும். அனஸ்சும் உழவும் இரண்டும் சேர்ந்தது தான் நாதஸ்வரம்.

அதற்கு போட்டு வாசிக்கக் கூடிய கருவியின் பெயர் தான் சீவாலி. சீவாலி இந்தியாவில் ஒரு புல்லிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. இலங்கையில் இல்லை.

நாதஸ்வரத்தின் பிரதான பகுதி என குறிப்பிடப்படும் உழவு அந்த காலம் தொட்டு ஆச்சா மரத்திலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.

ஆனா இப்ப சொற்ப காலமா ஒரு 10 வருடங்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தில் நாதஸ்வரத்தை தயார் செய்து கொடுக்கின்ற ஒரு நிலை ஒன்று ஏற்பட்டிருக்கு.

அராலி என்ற ஊரில அமரசிங்க ஆச்சாரியார் நாதஸ்வரத்தை தயாரிக்கின்றார்.

அவரும் ஆச்சா மரதில தான் தயாரிக்கிறார்.ஆனால் இலங்கையில் வேறு பெயர் சடவக்கி என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அதுவும் ஆச்சா மரத்தின்ர தன்மை தான். அது காட்டுப்பகுதிகளில தான் கூடுதலாக இருக்கும்.

இப்ப நிறையப் பேர் அதனையே பாவித்துக் கொண்டு வருகிறார்கள். நூற்றிற்கு தொண்ணூறு வீதத்தினர் அதனையே கையாள்கின்றனர்.

முக்கியமாக அது பராட்டப்பட வேண்டிய ஒரு பெரிய விஷயம். எத்தனையோ காலம் காலமாக யாழ்ப்பாணத்தில ஒருவரும் இதைப்பற்றி யோசிக்கவில்லை. கலை ஓங்கி வளர்ந்தளவிற்கு. இதை செய்ய வேண்டும் என்ற யோசனை யாருக்கும் தோன்றவில்லை. அவர் ஒராள் தான் சொந்த முயற்சியில எவ்வளவோ கஷ்ரப்பட்டு அந்த மரத்தைக் கண்டு பிடிப்பதற்கே எவ்வளவோ மிகவும் சிரமப்பட்டதாக அவர் என்னுடன் கதைத்த போது சொன்னார்.

இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட நாதஸ்வரம் அவர் தயாரித்த நாதஸ்வரம் இரண்டையும் வாசித்திருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

முன்னர் நாதஸ்வரத்திற்கு தட்டுப்பாடு இருந்தது. இந்தியாவிலிருந்து வந்தால் தான் வாசிக்கமுடியும் என்ற நிலையிருந்தது. ஆனால் எங்கட நாட்டிலயே அவர் தயாரிக்க தொடங்கிய பின்னர் எங்களுக்கு இலகுவாக பெற்று வாசிக்க கூடியதாகவிருந்தது. நாதஸ்வரம் இல்லை என்றால் உடன அராலிக்கு போய்விடுவம் நாதஸ்வரம் வாங்க.

கேள்வி: தவிலைப்பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் வாத்தியங்களை அறிந்து கொள்வது மிக மிக குறைவு. இசையை ரசித்துவிட்டு போய்விடுவோம். கலைஞர்கள் எவ்வளவு கஷ்ரப்படுகின்றனர் எவ்வளவு விடயங்கள் இருக்கின்றன என்பதனை நாங்கள் பார்ப்பதில்லை. அதைப்பற்றியும் அறிந்து கொள்ளவிரும்புகின்றேன். அதாவது தவிலைப்பற்றி பார்க்கும் போது தவில் கட்டை அது பிரதான என்ன மரத்தினால் செய்யப்படுகிறது?

பதில்: பலாமரத்தினால் செய்யப்படுகிறது. இரண்டு மரங்கள்; மூன்று மரங்களில் செய்யலாம் என சொல்லுவாங்க. ஆனால் அவை கிடைக்கிறது மிகவும் கஷ்ரம். கொண்டல் மரத்தில செய்யலாம். வில்வம் மரத்திலும் செய்யலாம் என்று சொல்லுறாங்க. அவ்வளவு பெரிய மரத்தை நாங்கள் பார்த்ததே இல்லை.

கூடுதலாக எல்லோரும் பலா மரத்தில தான் செய்கிறாங்க ஏனென்றால் சவுண்டு நல்லா இருக்கும். எங்களுக்கு வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.

முன்னர் வார்போட்டு வாசித்தார்கள். இப்பொழுது வாரிற்கு பதிலாக இரும்பு போடப்படுகின்றது. முன்னர் வார் வேலையிருந்ததலா எங்களால தவில் வேலை செய்து கொண்டு வாசிக்க முடியாது. அதனை கழற்றுவதற்கு அரை மணி நேரம் வேணும் அதனை கோர்ப்பதற்கு அரை மணி நேரம் வேணும். இப்பொழுது வந்த சிஸ்ரம் வந்து ஒரு பக்கம் ஏதாவது பிரச்சினை என்றால் இன்னொரு பக்கத்தை கழற்றி மாற்றலாம்.முன்னர்ஒரு பிரச்சினை என்றால் எல்லாத்தையும் புள்ளா கழற்றி மாற்ற வேண்டியிருக்கும்.
இது தூக்கிறத்திற்கு பாரமாய் இருந்தாலும் எங்களுக்கு இலகுவாக இருக்கின்றது.

அதே வேளையில் வலம்திரைத் தட்டு தொப்பித் தட்டு என்று இரண்டு பகுதிகள் இருக்கின்றன.

முதலில் வலந்திரை என்று எடுக்கப் போனால் முன்பு வார் தவிலுக்கு ஆட்டுத் தோல் பாவிச்சனாங்கள். இப்ப நாங்க இரும்பெல்லாம் பாவிக்கிறதால ஆட்டுத் தோலால் தாங்க முடியாது. ரைற் பண்ணி வைக்கும் போது சில நேரங்களில் வெடிச்சுப் போகும். அதனால நாங்கள் இப்ப வலந்தரைக்காக மாட்டுத் தோல் பாவிக்கிறம்.

ஒரு வலந்திரை தட்டு செய்கிறதிற்கு மூன்று நாள் வேணும். ரொம்ப கஷ்ரப்பட்டு தோல் எடுத்து தோல் அடித்து காய வைத்து அதைப் பதப்படுத்தி அந்த நிலைக்கு கொண்டு வாறதென்றால ரொம்ப கஷ்ரம். அதற்கே இரண்டு நாள் ஆகும். அதில மிக முக்கியமாக சொருகிறது என்று சொல்வாங்க அந்த வளையில வைத்து பசை போட்டு ரைற் பண்ணுவாங்க. வட்டவட்டமாக 11 ஓட்டைகள் இருக்கும். அதைப் போட்டு காயவைக்கிறதிற்கு அதற்கு மட்டும் ஒரு நாள் வேணும். அது ஊற வேண்டும். கண்ணுவிலக வேணும். இப்படி நிறையப்பிரச்சினைகள்.

அதே சமயம் தொப்பி தோல் அடிச்சு ஓருநாளில காய்ந்துவிடும். மறு நாள் தான் தோலை இழைக்கலாம் ஊறப்போட்டு காயப்போட்டு திருப்பி ஊறப்போட்டுத் தான் சுருங்க வேணும். அல்லது நல்ல சத்தம் கேட்காது. இருண்டால் பேஸ் சவுண் கிடைக்காது. அப்படி சில சில பிரச்சினைகள்.

தவில் தடி: அப்பவந்து திருவாத்தி மரங்கள் நிறையக் கிடைத்தது. இப்ப அதுகள் கிடைக்கிறது கொஞ்சம் கஷ்ரம். அது திருவாத்தி கருகாலி போன்ற வைரமான குச்சிகளால தான் வாசிப்பாங்க. இப்ப கிடைக்கிறது கஷ்ரமாக இருக்கிறதால இந்தியாவிலயிருந்து பம்மர் என்ற ஒரு மரம் வருகிறது. அதுவும் வாசிக்கிறதிற்கு இலகுவாக இருக்கும்.

கூடு என்று சொல்லுவாங்க கையில வலதரப்பக்கம் போட்டு வாசிக்கிறது. அதை இடியப்ப பசையில சுத்துறனாங்க. இப்ப சூழ்நிலைக்கு மாட்டுத் தோல் போடுகிறதனால அந்த கூட்டை இடியப்ப பசையில சுத்தி வாசிச்சா இரண்டு வாசிப்பிற்கே வீணாப் போயிடும். அதனால் அராட்ரைட் என்னும் பசையிருக்கு அதன் மூலமாக துணியை வைச்சு கையில சுத்துறனாங்க. என்னென்று சொன்னால் கைய மாதிரி கட்டை செய்து அந்த அளவிற்கு எடுத்து அதைச் சுற்றி காயப் போடுறனாங்க.

கேள்வி: நீங்கள் இப்பொழுது ஒரு வார் தொப்பி வலந்தரைத்தட்டு போடுவதற்கே கிட்டத் தட்ட ஒரு நாளிற்கு மேல் செல்லும் என்று சொல்லுகின்றீர்கள். அந்த தோலை பதப்படுத்துவதற்கு 3 நாள் செல்லும் என்று. அப்படியானால் நீங்கள் ஒரு தவில் வாத்தியத்தை நீங்கள் புதிதாகச் செய்வதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நாட்கள் செல்லும்.

பதில்: இன்றைய சூழ்நிலையில் எங்களுடைய கலை வளந்த மாதிரிக்கு சமான்களும் இப்ப இந்தியாவிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு இடத்திலிருந்து கொண்டு வந்து விற்கிறாங்க.

ஒரு தவில் செய்ய வேணுமென்று சொன்னால் முன்னர் புது தவில் கட்டை வாங்கணும். அதை 3 மாதம் காய வைக்கணும். அப்படி சூழ்நிலைகள்.

இப்ப எங்க போனாலும் அவங்க அவங்க இந்தியாவிலிருந்து 20து 30து 40து என வலந்திரை தட்டுகளாகவே செய்து கொண்டு வந்து அவங்களுக்கு தேவையானதை வைச்சுக் கொள்ளுறாங்க.

அதனால ஒரே நாளில தவில் செய்திடலாம் என்ற நம்பிக்கை இருக்கு.

கேள்வி: செந்தில் நாதன் நீங்கள் தவில் வாசிக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வாத்தியக்கருவி வைச்சிருப்பீங்க. அதற்கு பிரதியீடாக இன்னொரு வாத்தியக்கருவியும் வைச்சிருப்பீங்க. என நினைக்கின்றேன். கிட்டத்தட்ட எத்தனை வைத்திருப்பீர்கள்.

பதில்: நான்கு தவில் வைத்திருக்கின்றேன். வேறயா மாத்திறதிற்கு பாட்ஸ் பாட்ஸ்சா வலந்திரைத் தட்டு 10 தொப்பி 10 ஆணி அப்படி நிறைய வைத்திருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கு போகப் போகிறீர்கள் என்று வைத்தால் நீங்கள் அதற்கு தயார்படுத்துவதற்கு கிட்டத்தட்ட எவ்வளவு நேரம் செல்லும். உங்களுடைய ஒரு தவிலையோ, நாதஸ்வரத்தையோ அவை சரியாக இருக்கின்றதா என்று அதனை பார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கச்சேரிக்கு போனவுடனே கச்சேரியை ஆரம்பிக்க வேண்டி வரும். அதற்கு தயார் படுத்துவதற்கு எவ்வளவு நேரம் செல்லும்?

பதில்: முதல் நாளே நாங்கள் எல்லாம் பார்த்து வைச்சிடுவம். திடீரென போறதென்றால் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பார்த்து வைச்சிடுவம். சாதாரணமாக தவிலைப் பொறுத்தவரை திடீர் திடீர் என காலநிலை வித்தியாசத்தில் எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய ஒரு பொருள். நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையில்லை. நாங்க ஒரு அரை மணி நேரத்திற்கு முன்னர் அதை பார்திட்டு வாசிச்சிடலாம்.

கேள்வி: நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள் சில நாடுகள் சரியான குளிரான நாடுகள் சில நாடுகள் சரியான வெயிலான நாடுகள். இந்த தோல் மரமோடு சம்மந்தப்பட்டதுகள் திடீரென வெடிக்க கூடியவை. ஒரு நாட்டுக்குச் செல்லும் போது நீங்கள் அதனை எவ்வாறு எதிர்பார்த்து செல்கிறீர்கள்?

பதில்: முன்னர் மாதிரி வார் என்றால் அஜஸ்ட்பண்ணிக் கொள்ளுவது கஷ்ரம். இப்ப இரும்பில வந்திருக்கு வார் மாதிரி போட்டிருக்காங்க. அது வேண்டிய நேரத்தில ரைற் பண்ணி பாவச்சுக் கொள்ளலாம். அஜஸட்; பண்ணிக் கொள்ளலாம். இப்ப குளிரென்றால் அதிகம் ரைற் பண்ணிக்க மாட்டாங்க. அதனால வாசிப்பதற்கும் சவ்கரியமாக இருக்கும். சவுண்டும் நல்லா இருக்கும். ஆனால் காலநிலை வித்தியாசத்தால அதை கொஞ்சம் குறைச்சுக் கொள்ளலாம்.


கேள்வி: அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் மரத்தையும் தோலையும் கண்டால் அஜீரணம். எந்த வகையில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டதா?

பதில்: ஒவ்வொரு வருஷமும் இந்த பிரச்சினை நடந்து கொண்டேயிருக்கின்றது. நான் இது ஒன்பதாவது தடவை இந்த அவுஸ்திரேலியா நாட்டிற்கு வந்திருக்கிறன். எல்லா நாட்டிற்கும் போய் வந்திருக்கிறன்.

ஆனால் இந்த நாட்டில தான் இந்த தவிலுக்கு மட்டும் தனி மரியாதை.

வழமையாக நாங்க கண்டிப்பா எடுத்துக் கொண்டு போக வேணும் என்று ஏதோ சொல்ல, பதிந்து, ஒரு லெற்றர் கொண்டு வந்து, திருப்பி எத்தனையாம் திகதி நாங்க இந்த நாட்டை விட்டுப் போறமோ, எந்த ஊரிலிருந்து கிளம்பப் போறமோ, அந்த ஊரில கொண்டு போய்,; அவ்வளவு சமான்களையும் திருப்பி நாட்டிற்கு கொண்டு போறம் என்று காட்டி, அதனை உறுதிப்படுத்த வேண்டும். என்று சொல்லி ஒரு லெற்றர் தருவாங்க. அப்படித் தான் செய்து வந்தம்.

இந்த முறை சாயி மன்றம் எங்களுக்குச் சொல்லிச்சு இப்படி பல சிக்கல்.ஜேசுதாஸ் குறூப் வந்திருந்த பொழுது அவர்களுக்கு பெரிய சிரமம் கொடுத்திட்டாங்க. இந்த முறை கடுமையாக நிற்கிறாங்க என்று சொன்னதால,

நாங்க கொழும்பில வொறன்டிஸ் சேவிஸ் என்ற ஒன்றிருக்கு. அவங்களிட்ட எங்களுடைய இன்ஸ்ருமென்ட் எல்லாம் காட்டி அவங்களிட்ட அந்த சேட்பிக்கட்டையும் காட்டின போது எந்த பிரச்சினையும் இல்லை. கஸ்டம்ஸில் காட்டின உடன அவ்வளத்தையும் எந்த பிரச்சினையும் இல்லாம விட்டுட்டாங்க.

இந்த முறை அது ஒரு வழி என கண்டு பிடிச்சதால இனிமேல் இப்படியே செய்து கொண்டிருக்கலாம். எல்லா நாட்டிலையும் இது சம்மந்தமான நிறுவனம் இருக்கிறது. அவர்களிடம் அவ்வளத்தையும் கொண்டு போய் காட்டினா நாங்க எத்தனை பீஸஸ் கொண்டு போறம் என்று சொல்லி எழுத்து மூலம் அவங்க சேட்பிக்கேட் தர்றாங்க.

அங்கையும் சும்மா காட்டிட்டு எடுக்கிறது என்றில்லை. அவங்க அதை ஒரு நாள் றூமில வைச்சு ஏதோ கெமிக்கல் போட்டு ஏதோ புகையடிச்சு அதில கிருமி இல்லை என்று உறுதிப்படுத்தி சேட்பிக்கேட் லெற்றர் தந்தாப் பிறகு தான் இங்க எடுத்துக் கொண்டு வரலாம். அதை எடுத்துக் கொண்டு வந்ததால் இந்த முறை எந்த சிரமமும் இருக்கவில்லை.

கேள்வி: இப்படியாக நீங்கள் நாடுகளுக்கு வாத்தியங்களை கொண்டு சென்ற பொழுது ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதா? அதாவது காலநிலை காரணமாக அது வெடித்து அப்படி ஏதாவது அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?

பதில்: எனக்கு நடந்திருக்கிறது. நான் கனடாவிற்கு போயிருந்த நேரம் குளிர். நாதஸ்வரம் ஒன்று உடைஞ்சு போயிட்டுது. அந்த நேரம் பார்த்து நான் இரண்டு நாதஸ்வரம் கொண்டு போயிருந்தேன். இந்த முறையெல்லாம் ஒன்று தான் கொண்டு வந்தேன். அன்று இரண்டு நாதஸ்வரம் கொண்டு போனதால டப்பென்று மற்றதை எடுத்து வாசிக்கக் கூடியதாக இருந்திச்சு.

கேள்வி: நாகேந்திரன் அவர்கள் நீங்கள் பல நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள். நீங்கள் போகாத நாடே இல்லையென்று நினைக்கின்றேன். சீனாவையும் ஜப்பானையும் தவிர உங்களுக்கு அப்படி ஏதாவது ஏற்பட்டதா?

பதில்: எனக்கு அப்படி எதுவும் ஏற்படவில்லை. ஏதோ ஆண்டவன் அருள். நான் இப்ப வாசிக்கிற நாதஸ்வரம் வந்து 15 வருடங்களாக வாசிக்கிறன். எல்லோரும் வருஷத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒன்று என தான் வைச்சிருக்காங்க. ஏதோ கொடுத்து வைச்சனான் என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயமாக முதலும் ஒரு நாதஸ்வரம் வைச்சிருந்தனான் 18 வருஷமாக இப்ப மாற்றி 15வருடங்களாக வைச்சிருக்கன். பழைய நாதஸ்வரங்களில் அந்த பிரச்சினை வராது. புதுசு தான் எந்த நேரமும் எந்த காலநிலைக்கும் வெடித்துவிடலாம்.


கேள்வி: நீங்கள் ஆலயத்தில் தவிலை கிட்டத்தட்ட 4, 5 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக உங்களுடைய தோளிலே சுமந்த படி தான் வாசிக்கிறீர்கள். இந்த தவில் எவ்வளவு நிறையிருக்கும்?


பதில்: 21கிலோ தவிலின் நிறை. பழைய கட்டைகளாக இருந்தால் கொஞ்சம் வெயிற் குறைஞ்சு 18 கிலோ அப்படியிருக்கும்.

கேள்வி: நீங்கள் ஆலயத்தில் வாசிக்கும் பொழுது பல தடவை பார்த்திருக்கின்றேன் அதனை தூக்கித் தூக்கப் போடுவதை. ஏனெனில் நாதஸ்வர கலைஞருடன் ஈடு கொடுக்கவும் வேண்டும.; எடையை தூக்கிக் கொண்டும் வர வேண்டும். ஆக்களைப் பார்த்து சிரிக்கவும் வேண்டும். ஏனென்றால் நாதஸ்வர கலைஞர்கள் ஏன் இப்படி சிரிக்காமல் போகின்றார்கள் என்றும் பார்ப்பார்கள். அப்படியான ரசிகர்கள். மங்கள வாத்தியம் எனும் போது மிகவும் உன்னிப்பாக கவனிப்பார்கள். எப்படிச் சமாளிக்கின்றீர்கள்?

பதில்: நான் 13 வயதிலிருந்து வாசிக்கிறன். அப்ப என்னை சின்ன தவிலைக் கொடுத்து பழக்கப்படுத்தினார்கள். 8 கிலோ அப்படியிருக்கும். அந்த பழக்கம் அப்படியே வளர்ந்து வளர்ந்து வர தவிலோட பாரம் தெரியல. வாசிக்கிறத மாத்திரம் தான் கவனிக்கிறது. மற்றப்படி அதை நினைக்கிறதில்லை. பாரத்தைப் பார்த்தா வாசிக்க முடியாது. என்னோடு குறிக்கோள் எல்லாம் வாசிக்கிறதில தான்; இருக்கும்.

கேள்வி: விரலிலே இந்த பட்டைப் போட்டு அடிக்கின்றீர்கள். நாங்கள் ஒரு பத்து நிமிடம் கையை ஏதாவது செய்து கொண்டிருந்தாலே கையெல்லாம் விறைத்து விடும். நீங்கள் ஒரு கச்சேரியில் 3, 4 மணித்தியாலங்கள் வாசிக்கின்றீர்கள். ஒரு கச்சேரி முடிந்தவுடன் உங்களுடைய விரல்களின் உணர்வு, எந்த வகையில் உங்களுக்கு அது தாக்கமாக இருக்கும்?

பதில்: எல்லாம் இரத்தம் கண்டிப்போய் தான் இருக்கும். எல்லாம் வெடிச்சு சரியான கஷ்ரமாகத் தான் இருக்கும். போட்டு கழட்டுவது என்றா கஷ்ரமாகத் தான் இருக்கும்.


சில நேரங்களில அந்த காயங்கள் வழமையாக வருவது தான். கச்சேரியில் வாசிக்கும் பொழுது கஷ்ரம் தெரியாது. வாசித்து முடிஞ்ச பிறகு தான் கஷ்ரம் தெரியும். காரணம் என்னென்றா நாங்க சரியா வாசிக்கல என்று சொன்னால் நாதஸ்வர காரர்களுக்கு கோபம் வந்திடும்.

கை வலிக்கிறது என்று பாஸ்ரைக் குறைத்தோ அல்லது அளவுப் பிரமாணமில்லாம வாசிச்சாலோ அவங்கட பார்வையிலயே திட்டிக் கொன்றுடுவாங்க. நாங்க அவங்களையும் பார்க்கணும், அவங்க வாசிக்கிறதையும் கேட்கணும், நாங்களும் சரியா வாசிக்கணும், மக்களையும் பார்த்து சிரிக்கணும், சந்தோசமாகவும் வாசிக்கணும்.

இந்த சூழ்நிலையில கையெல்லாம் வலிச்சாலும் எங்களால ஒன்றும் பண்ண முடியாது. வாசிக்கிறத மட்டும் வலன்ஸ் பண்ணிக்கொள்வம். கைவலி எல்லாத்தையும் வீட்ட போய் தான் பார்த்துக் கொள்வம். அதற்கப்புறம் தான் மருந்தெல்லாம் போட்டுக் கொள்வம்.

கேள்வி: ஒரு கச்சேரிக்கு நீங்கள் செல்லும் பொழுது நீங்கள் ஏதாவது ஒரு அனுமானம் அல்லது இப்படித்தான் கச்சேரியைக் கொண்டு செல்லப்போகின்றோம் என்ற ஒரு திட்டத்தோடு போவீர்களா அல்லது அங்கு ரசிகர்களின் இரசனையைப் பொறுத்து நீங்கள் உங்கள் திட்டத்தை மாற்றிக் கொள்வீர்களா?

பதில்: போகும் போது எங்களுக்கென்று ஒரு கச்சேரி என்று சொன்னா இப்படித்தான் வாசிக்க வேணும் என்ற திட்டத்தோடு தான் போறதுண்டு. ஆனால் அங்க போய் ரசிகர்களின் நிலைப்பாட்டைப் பார்த்து அவர்களின் விருப்பப்படி இதை வாசிங்க என்று ஒவ்வொரு துண்டுகள் அனுப்புவாங்க. அவர்களையும் திருப்திப் படுத்த வேண்டியிருக்கும்;.

சிலபேருக்கு கர்நாட்டிக் விருப்பம், சில பேருக்கு மெல்லிசை விருப்பம் சில பேருக்கு சினிமா சம்மந்தப்பட்ட பாட்டு விருப்பம். எனவே எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. கச்சேரி என்று சொல்லுறப்போ கண்டிப்பா எல்லா தரப்பினரும் வருவினம். கூட்டத்தைப் பார்த்து கூடிய வகையில் எங்களால் முடிந்தளவு எல்லோரையும் திருப்திப்படுத்துகிற வகையில் தான் கச்சேரியை அமைச்சுக் கொள்வோம்.

கேள்வி: பாலமுருகன் நீங்கள் இப்ப பார்த்தீர்களானால் கிழமைக்கு ஒரு படம் வந்து கொண்டிருக்கிறது. அன்றைய கச்சேரியில் வாழமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடலை யாருமே விரும்பி கேட்க மாட்டார்கள் என்று நினைத்தேன். அதனைக்கூட யாரோ கேட்டு நீங்கள் வாசித்தீர்கள். அப்படியான பாடல்கள் வரும் பொழுது அந்த பாடல்கள் அனைத்தையும் அதாவது எல்லா பாடல்களையும் பயிற்சி எடுத்துக் கொள்வீர்களா அல்லது இந்த பாடல்களை ரசிகர்கள் கேட்பார்கள் என்று தெரிந்தெடுத்து பயிற்ச்சி எடுத்துக் கொள்வீர்களா எந்த வகையில் அதனை எடுத்துக் கொள்வீர்கள்? ஒரு பாடலை வாசிக்க எவ்வளவு நாள் செல்லும்?

பதில்: ஒரு நாளில வாசிச்சிடலாம்.

கூடுதலாக ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அப்படியான பாடல்களை பார்த்து தேர்ந்து எடுப்போம். அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்து தான் கூடுதலாக பாடமாக்கி வாசிக்கிறது.

கேள்வி: அந்த வகையில் இப்பொழுது நீங்கள் ஒரு பாடலை ஸ்வரத்திற்குத் தான் வாசித்துக் கொண்டு போகின்றீர்கள். அதேவேளையில் அந்த பாடல் எப்படி எழுதப்பட்டது என்ற அந்த சாகித்தியத்தையும் நீங்கள் உணர்ந்து கொண்டீர்களானால் அந்த வித்தியாசம் தெரியும். நீங்கள் வாசிக்கும் போது அது எவ்வளவு தூரம் முக்கியமான விடயமாவுள்ளது?

பதில்: சாகித்தியத்தை அறிந்து கொண்டு வாசித்தால் அதற்குரிய தன்மை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் பாட்டின் எல்லா வசனமும் எங்களுக்கு பாடமில்லை. நாங்கள் மெட்டை மட்டும் கேட்டமென்றால் உடன வாசிக்க கூடிய தன்மையிருக்கு. உதாரணத்திற்கு சொன்னப் போனால் அன்றைக்கு சித்திரம் பேசுதடி பாட்டு கேட்டு வந்திச்சு. ஒரு நாளும் நான் வாசிச்சதில்லை. ஆனால் பாட்டு கேட்டு பாடமிருக்கு. அதனால் அன்றைக்கு உடன வாசிச்சனான். எங்களைப் பொறுத்தவரையில் பாட்டுக் கேட்டு எங்கட மனசில படிஞ்சிட்டென்றால் நாங்க வாசிச்சிடுவம்.

கேள்வி: நாதஸ்வரத்தைப் பொறுத்தவரை உங்களுடைய சுவாசம் அதேவேளை உங்களுடைய உதடு நாக்கு என்பன மிக முக்கியமானவை. அது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது. அதற்கு எந்த வகையில் பயிற்சி எடுக்க வேண்டும்?

பதில்: அதுதான் நாங்க ஆரம்பகால பயிற்ச்சியின் போது எவ்வளவு கஷ்ரப்பட்டோமோ அது தான் இப்ப எங்களுக்கு பிரயோசனப்படுது. அப்ப ஆரம்பத்தில சின்ன வயசில் அவ்வளவு கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.

ஊரில எங்கட வீடுகளில நீங்க பார்த்திருப்பீங்க, காலை 4 மணிக்கெல்லாம் நாங்க நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிச்சிடுவம். 7மணி மட்டும் 3 மணி நேரம் பயிற்சி பெறுவது, சாயங்காலமும் அது மாதிரி, இப்படிப் பயிற்சி எடுத்தது தான், இப்ப 4, 5 மணி நேரங்கள் தொடர்ந்து வாசிக்கிறதிற்கு எங்களுக்கு சவ்கரியாக இருக்கு.

ஆனால் இப்பவும் வந்து ஒரு 10 நாள் வாசிக்கவில்லையென்றா அடுத்த முறை வாசிக்கும் பொழுது கஸ்ரமாக இருக்கும். உதடு பிடிக்கிறதெல்லாம் ரொம்ப பிரச்சினையாக இருக்கும்.

கச்சேரிகளில் வாசிச்சாலும் தினசரி பயிற்சிகளை கட்டாயம் எடுக்க வேண்டும். எவ்வளவு நேரத்தை நாங்கள் செலவழிச்சாலும் அவ்வளவு நேரமும் எங்களுக்கு பிரயோசனம் தான்.

ஆனால் சில நாடுகளில அந்த சூழல் இல்லை. யாழ்ப்பாணத்தில பிரச்சினையில்லை. நான் 10 வருஷமாக கொழும்பில இருந்தனான். கொழும்பிலயும் அதை செய்யக்கூடிய வசதிகள் குறைவு.

கேள்வி: ஒரு நாதஸ்வர கலைஞரும் தவில் கலைஞரும் கோஷ்ரியாக இணைந்து வாசிப்பதுண்டு. நான் இங்கு வந்தவர்களைப்பற்றி பேசவில்லை. ஊரிலே நீங்கள் வாசிக்கும் போது கோஷ்ரியாகத் தான் வாசிப்பீர்கள். ஒரு நாதஸ்வர கலைஞருக்கோ அல்லது தவில் கலைஞருக்கோ மற்றவர் எந்த வகையில் அமைகின்றார். அவருடைய எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைகின்றது, அவர் எவ்வாறு வாசிப்பார் என்பதைப் பார்த்து தான் நீங்கள் கோஷ்டியை அமைக்க கூடியதாக இருக்கின்றதா. அதை எவ்வாறு நீங்கள் தெரிவு செய்கின்றீர்கள்.

பதில்: ரொம்பக் காலமாக யாழ்ப்பாணத்தில அந்த முறைப்படி தான் இருந்து வந்தது. அதாவது ஒரு கோஷ்ரி என்றால்அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன் இவர் தான் நாதஸ்வரத்திற்கு வருவார். இவர் தான் தவிலுக்கு வருவார். இன்னார் இன்னார் தான் வருவினம் என்பது முதலே தெரியும்.

ஆனால் இப்ப அந்த நிலமை 10 வருடங்களாக மாறிட்டு. இன்றையகால நாட்டு நிலமையால கனபேர் வெளியில போய்விட்டார்கள். முன்னர் 6 மாதத்திற்கு நல்ல சம்பளம் பேசி தவில் காரரையும் நாதஸ்வரக்காரரையும் கொன்றைக் பேசி ஒரு குழு அமைக்கிற லீடர் வந்து எல்லாரையும் புக் பண்ணி வைச்சிருப்பார்.

6 மாதத்திற்கும் கச்சேரி போனால் அதே குறூப்பாக தான் போவாங்க அப்படி எத்தனையோ வருஷங்களுக்கு தொடர்ந்து இருப்பாங்க. இப்ப அந்த நிலமை இல்லை. பழைய ஆட்கள் கொஞ்சப்பேர் இருக்கினம் தான். புதுசு புதுசா கிளம்பிறவங்க அப்படியில்லை. ஒரு கச்சேரிக்கு போகும் போது அன்றைக்கு அன்றைக்கு யார் யார் இணைந்து கொள்ளுகிறார்களோ அவர்கள் போக வேண்டியது தான்.

கேள்வி: இது உங்களுக்கு கஷ்ரமாக இருப்பதில்லையா?ஏனெனில் அவர் முதல் கூறினார் நாதஸ்வரகாரரின் பார்வையிலிருந்தே தெரியும் நான் இங்கே பிழைவிடுகின்றேன் என்று. அந்த பார்வையின் அர்த்தம் விளங்க வேண்டும் என்னத்திற்காக பார்க்கின்றார் என்று. அதனை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள். கஷ்டமாக இருப்பதில்லையா?

பதில்: கண்டிப்பா மிகவும் சிரமம் தான். வாசிக்கும் போது ஓரிடம் பார்ப்பதே பெரிய கஷ்ரம். நாலாபக்கமும் பார்த்து வாசிப்பது என்றால் கஷ்ரம் தான். பக்க வாத்தியம் தவிலாகிய நானா இருந்தாலும் சரி அல்லது வேற வாத்தியங்களாக இருந்தாலும் சரி பாடுறவங்களோ வாசிக்கிறவங்களோ யாரா இருந்தாலும் சரி அவர்களுடைய பார்வை எங்க மீது இருக்க வேணும். எங்களுடைய பார்வை அவர்கள் மீது இருக்க வேணும.;

ஏனென்றால் சில சில பரிமாற்றங்கள் அவர் என்ன செய்யப் போறார் என்று எனக்கு முன் கூட்டித் தெரியாது. செய்கிறதிற்கு முன்னாடி சின்னதொரு சிக்கனல் என்று சொல்லலாம். ஏதாவது செய்யப் போறார் என்றால் சின்னதொரு மாற்றம் முகத்தில தெரியும் . அதைப்பார்த்து அதற்கு தகுந்த மாதிரி சிலவேளை காலப்பிரமாணம் ஏற்றப் போறார் என்று சொன்னால் சிலவேளை காலை ஆட்டுவதுண்டு. அதைப்பற்றி எங்களுக்குள்ள ஒரு புரிந்துணர்வு உண்டு. வாத்தியத்தை விட்டு நாங்கள் ஒன்றும் கதைக்க முடியாததால் இப்படித்தான் சைகையால் தான் காட்ட முடியும். ஏனெனில் அதுவும் மக்களுக்குத் தெரியக்கூடாது. எங்களுடைய பாசையில் நாங்கள் சொல்லிக் கொள்ளுவோம்.


கேள்வி: தனியாவர்த்தனம் அன்று நீங்கள் வாசித்த பொழுது நிச்சயமாக மற்றவர் என்ன வாசிக்கப் கோகிறார் என்பது உங்களுக்கத் தெரியாது. அதில் ஒரு போட்டியிருக்கும் அந்த போட்டியிலும் திறமை வெளிப்பாடாகத் தான் இருக்கும் அதைப்பற்றி சற்று கூற முடியுமா?

பதில்: என்னென்று சொன்னா கீர்த்தனைகளோ மற்றவைகளோ இல்லை . காலப்பிரமாணம் தான் நாங்கள் அமைக்கிறம். தனியாவர்த்தனம் என்பது அவரின் தனிப்பட்ட திறமை அந்த காலத்தில ஒரு தவில் வாசித்ததை இன்னொரு தவில் வாசித்துக் காட்ட வேண்டும். அப்படி ஒரு முறைகள் இருந்தது. தற்பொழுது அப்படியான சூழ்நிலை கிடையாது. என்ன காரணம் என்று கேட்டால் உங்களிடம் இருப்பது எனக்குத் தெரியாது. என்னிடம் இருப்பது உங்களுக்குத் தெரியாது இப்படியான ஒரு சூழ்நிலையில் யார் யார் திறமையாக இருக்கிறாங்களோ அவங்களுக்குத் தெரிந்ததை வாசிக்கலாம். நல்ல படியாக வாசித்தா சரி.

கேள்வி: என்னென்று கேட்டா இன்றைய தினம் தனியாவர்த்தனத்தை நீங்கள் தான் வாசித்தீர்கள். நீங்கள் என்ன வாசித்தீர்களோ, அதனைத் தான் அவர் வாசித்தார். அப்படித்தான் போய் கொண்டிருக்கும் எல்லா தனியாவர்த்தனத்திலும் அப்படித்தான் பார்த்திருக்கிறன.; அது தான் முறை. இவர் வாசித்ததை உங்களால் ஏதோ ஒரு கட்டத்தில் வாசிக்க செய்ய முடியவில்லை என்று சொன்னால் செய்வீர்கள்?

பதில்: நல்ல கேள்வி கேட்டிங்க. அது தான் கச்சேரியிலுள்ள நிலைப்பாடு அவர் வாசித்ததை கண்டிப்பா மற்றவர் வாசிச்சா தான் நல்லது. அப்படி அதே மாதிரி வாசிக்க முடியாவிட்டால் அதே அமைப்பில தன்னுடைய திறமைக்கேற்ப ஒன்றை வாசிக்கலாம்.

கேள்வி: இன்னுமொரு விடயம் இந்த ஆலயத்திற்கு இந்திய கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள் இலங்கை கலைஞர்களும் வந்து வாசித்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையில் வாசிப்பில் ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா? ஏன் அந்த கேள்வியைக் கேட்கின்றேன் என்றால் நீங்கள் வசந்த மண்டபத்திலிருந்து சுவாமி வெளிக்கிட்டவுடன் நீங்கள் மல்லாரி வாசிக்கின்றீர்கள். அதே வேளையில் ரதோற்சவத்திற்கு தேர் மல்லாரியைத் தான் இலங்கை கலைஞர்கள் வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய கலைஞர்கள் அப்படியான நடைமுறையில் வாசிப்பதில்லை. அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்.

பதில்: இலங்கையிலுள்ள ஆலயங்களில் கிரியைகள் வித்தியாசமான முறையில் நடக்கின்றன. அடுத்தது என்ன செய்யப் போறாங்க. என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் இந்தியாவிலிருந்து வரும் கலைஞர்களுக்கு தெரியாது. ஏனென்றால் குருக்கர்மாரைக் கேட்டா தெரியும் அங்கத்த முறைப்படி வேற மாதிரி இருக்கும். யாழ்ப்பாணத்தில நடக்கிற மாதிரி இந்தியாவில ஒரிடமும் நடப்பது இல்லை.

அதனால் தான் இன்னென்ன நேரம் இது நடக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. கொடியேற்றம் என்றால் பல தடவை நிற்பாட்ட வேண்டும். மணியடிக்கிற நேரம் தவில் தனிய வாசிக்கிறது. அப்படியான எங்கட நாட்டு முறையெல்லாம் அங்கில்லை. அது எங்களுக்குத் தெரியும்.

மற்றப்படி அவர்கள் எல்லாம் வாசிக்க கூடியவங்க. அவர்கள் வாசிப்பதில் எந்தவித வித்தியாசமும் இல்லை. மல்லாரி எல்லாம் வாசிப்பாங்க. எந்தெந்த கிரியைகளுக்கு என்னென்ன மல்லாரி வாசிக்க வேணும் என்ற முறை தெரியாது.

நாங்க சாமி கிளம்பின உடன தேர் மல்லாரி வாசிப்பம் வெளிவீதி வந்த உடன வெளி மல்லாரி வாசிப்பம். அதற்கப்புறம் இராகம் கீர்த்தனை முருகனுக்கேற்ற பாட்டுகள் என அப்படியான முறையில் நாங்க வாசிப்பம் அவ்வளவு தான்.

கேள்வி: பாலமுருகன் இன்று நீங்கள் நல்லூர் கந்த சுவாமி கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்துவானாக இருக்கின்றீர்கள். 41 வருடங்களுக்க மேலாக மறைந்த கலைஞர் எம.;கே. பத்மநாதன் தான் அங்க ஆஸ்தான நாதஸ்வர கலைஞராக இருந்தவர். ஆஸ்தான கலைஞர் வாசித்த இடத்தில் நீங்கள் இருந்து வாசிக்கும் பொழுது உங்கள் மனநிலையில் எவ்வாறு இருக்கும்.?

பதில்: நான் நினைக்கிறேன் அது எனக்கொரு வரப்பிரசாதம் என்று. எனது தநதையார் 30 வருடங்கள் நல்லூர் கந்தசுவாமி; கோயில ஆஸ்தான வித்துவானாக இருந்து வந்தார். அதற்கப்புறம் வயசாகிவிட்டதால அந்த கோயிலை விட்டுட்டார். அப்புறம் அவர் வாசித்த இடத்தில போய் நான் வாசிக்கிறதை எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே முடியல. அதைச் சொல்லத் தெரியல.

கேள்வி: நல்லூர் கந்த சுவாமி கோயிலைப் பொறுத்தவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் அதே வேளையில மங்கள வாத்தியத்தைப் சுற்றியே ஒரு ரசிகர் கூட்டம் அப்படியே வந்து கொண்டிருக்கும். அதை ரிவியில் கூட நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர்கள் சூழ்ந்திருக்கும் அந்த நிகழ்வு எந்தவகையில் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும், நீங்கள் ஒரு வாத்தியத்தை வாசித்துக் கொண்டு போகும் பொழுது அல்லது அவர்களுடைய அந்த பாட்டை வாசிக்க தொடங்கும்; பொழுது அவர்களுடைய அந்த அசைவு எந்த வகையில் உங்களை உற்சாகப்படுத்தும்?

பதில்: சபையில நாங்க பார்த்திடுவம். அவர்களுக்கு இது தான் பிடிக்குமென்று சொன்னால் அதை கூடுதலாக கையாளுகின்ற மாதிரியும். ஆனாலும் அதைக் கையாளுகிறது நல்லூர் கந்த சுவாமி கோயிலில் கொஞ்சம் குறைவு தான். அங்க வந்து வேற முறை தான். அங்க வந்து சினிமா ஸ்ரையில வாற பக்திப் பாட்டாக இருந்தாக் கூட்டி நாங்க அங்க வாசிக்க முடியாது. கீர்தனைகள் அப்படித் தான் வாசிப்பம் கடைசியாக பயும்ஸ் அப்படித் தான் வாசிக்கிறது. அதுவே சனத்திற்கு பெரிதாக இருக்கும். அந்த பயும்ஸ் வாசிக்கிறதே அங்க அரிது.

கேள்வி: நாதஸ்வரத்தை வாசிப்பவர்கள் நாதஸ்வரத்தைக் கற்க முன்னர் வாய்ப்பாட்டில் தேர்ச்சி பெற்றிருப்பது முக்கியம் என்ற ஒரு கருத்திருக்கிறது. அது சரியான அனுமானமா? வாய்ப்பாட்டை அவர்கள் கற்றிருப்பது எந்த வகையில் அவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்?

பதில்: அந்த சாகித்திய முறை அந்த முறையில வாசிக்கும் பொழுது அதற்குண்டான ஒரு தனித் தன்மை ஒன்றிருக்கு. சாகித்திய முறைப்படி நாங்கள் தெரிந்து அதை வாசிப்பது. சங்கீதத்தை எடுத்துப்பார்த்தால் வாய்ப்பாட்டு முக்கியம். வயலின் காரர்கள் வீணை எல்லோருக்கும் அதே மாதிரி நாதஸ்வர காரர்களுக்கும் வாய்ப்பாட்டு முக்கியம் தான். எல்லா சங்கீத அடிப்படையும் அதில தான் இருக்கு.

கேள்வி: இப்பொழுது குறிப்பாக வெளிநாடுகளிலே இவற்றைப் பயில்பவர்கள் நாட்டியமாக இருக்கட்டும், வயலினாக இருக்கட்டும், மிருதங்கமாக இருக்கட்டும், அவர்கள் அதில் பாண்டித்தியம் பெற வேண்டும, நல்ல நிலமைக்கு வர வேண்டும், என்பதை விட எப்போது நான் மேடையேறுவேன் என்ற நோக்கம் தான் இருக்கின்றது. இப்ப நீங்கள் இந்த தவில் நாதஸ்வரம் எனும் போது அதனுடைய பயிற்சிகளை சொல்லும் போது நீண்;ட ஆழ்ந்த பயிற்சிகளினூடாகத் தான் ஒரு சிறந்த கலைஞனாக வர முடியும். அதனை நீங்கள் பார்க்கும் பொழுது அதாவது இப்படியான மனநிலையில் இருப்பவர்களுக்கு இந்த நாதஸ்வரம் தவிலை பயில்பவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வளவு ஒரு கஷ்டமான பணி?

பதில்: யாழ்ப்பாணத்தப் பொறுத்த வரை நாதஸ்வர தவில் கலைஞர்கள் ஆரம்பத்தில இந்த தொழிலைப் பழகின உடனேயே அவர்களுக்கு கட்டாயமாக சிலசில குடும்ப சூழ்நிலை காரணமாக தொழிலுக்கு போக வேண்டிய கட்டாயமிருக்கின்றது. கோயில் செபம் என்று சொல்லுவது. எல்லோரும் ஆரம்பத்தின் போது கோயில் அபிஷேகம் பூசை என்று செபத்திற்கு போய்க் கொண்டு வருவது. அது ஆரம்பத்தில எங்களுக்கு பயிற்சி போல தான். அப்படி வாசித்து நல்ல நிலைக்கு வந்தாப் பிறகு தான் ஒரு செற்றாச் சேர்ந்து செய்வார்கள்.

கேள்வி: மற்றைய கலைகளை பின்பற்றுவது போல் நாதஸ்வரம் தவிலை அரங்கேற்றம் செய்வதோ பயிற்;சி எடுப்பவர்களோ மிகமிகக் குறைவு அதற்கு காரணம் இப்படியான கடுமையான பயிற்சி என்று சொல்லலாமா? ஏனென்றால் இப்படியான பயிற்சி எடுப்பதானால் தான் அவர்கள் சற்று தயக்கம் காட்டுகின்றார்கள். ஏனெனில் இளம் கலைஞர்கள் என்று அதற்குள் இருந்து புதிதாக வருவது என்பது மிகக்குறைவு. பார்த்தோமானால் எமக்கு அறிந்த கலைஞர்கள் தான் தொடர்ச்சியாக இருக்கின்றார்கள். புது கலைஞர்கள் என்று வருவது மிக மிகக்குறைவாக இருக்கின்றது. பயிற்சி காரணமாக சற்று தயக்கம் காட்டுகிறார்களா?

பதில்: அப்படி என்று இல்லை இன்றைய நாட்டுச் சூழல் ஒரு காரணம். இதனால நிறையப் பேர் வெளியில போட்டாங்க . நல்ல நல்ல நாதஸ்வர கலைஞர்கள் எல்லாம் நல்ல நிலைக்கு வரக் கூடியவர்கள் எல்லாம் போட்டாங்க. நாதஸ்வர தவில் கலைஞர்கள் சில பேர் வந்து கொண்டு தானிருக்கிறாங்க. உதாரணமாக பால முருகன் செந்தில் நாதன் எல்லாம் யாழ்ப்பாணத்திலே இந்த கலையைக் கற்று இப்ப தொழிலுக்கு வந்து முன்னனியில நிற்கிற புது கலைஞர்கள் தான் . இப்படி நிறையப்பேர் யாழ்ப்பாணத்தில இருக்கினம். இல்லையென்று சொல்வதற்கில்லை.

கேள்வி: நீங்கள் முதலே குறிப்பிட்டிருந்தீர்கள் நாகேந்திரன் அவர்களே இலங்கையிலே நாதஸ்வரம் தவிலுக்கு கல்லூரி என்று இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்று. அந்த குறை தீர்க்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கலாமா? அல்லது யாராவது முன்வந்து இப்படியான கல்லூரிகளை ஆரம்பிப்பார்களா? ஏனெனில் அண்மையிலே ஒரு செவ்வியில் பார்த்தேன் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக கொண்டுவர வேண்டும் என்ற ஒரு முனைப்பொன்று எடுக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் இது அந்த கலை இன்னும் வளர்ச்சி அடைவதற்கு உதவி செய்யுமென்று எதிர்பார்க்கின்றீர்களா?


பதில்: முயற்சிகள் நடக்குது இன்னும் செயல்முறையில் வரவில்லை. அப்படி வர வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பமும். வடபகுதி சங்கீதசபையில எடுத்திருக்காங்க. பல்கலைக்கழகத்திற்கு இன்னும் போகல.

நிச்சயமாக அப்படி ஒரு நிலை வரும் போது இன்னும் பிள்ளைகளுக்கு ஆர்வம் கூடும். பல்கலைக்கழக மட்டத்தில வந்தவுடன அந்த கலையை நாங்க பழக வேண்டும் என்று பிள்ளைகளுக்கு ஆர்வம் இன்னும் கூடும்.

இலங்கையைப் பொறுத்த வரை நல்ல குரு இல்லாதது பெரிய ஒரு பிரச்சினை பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் வெளியில் போய்விட்டார்கள்.

கேள்வி: அதேவேளையில் இந்த நாதஸ்வர தவில் துறைக்குள் பெண்கள் வருவது மிக மிகக் குறைவு. ஆரம்பத்தில் அறிந்திருக்கிறேன் ஒரு சில பெண்கள் அப்படியிருந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது சமத்துவம் சம அந்தஸ்து வேண்டும் என்று கூறிக் கொள்பவர்கள் இந்த துறையில் சற்று தயக்கம் காட்டுகிறார்கள். அது ஏன்?
நாதஸ்வரத்தில் அறிந்திருக்கின்றேன் ஆனால் தவிலில் பெண்களை நான் அறியவே இல்லை?


பதில்: இப்பவும் 2, 3 பேர் இருக்கிறார்கள். அப்ப நீங்கள் பார்த்தவர்களின் பிள்ளைகள் 2பேர் வாசிக்கினம். குறைவு தான். நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி இல்லை தான்.
கள்ளியங்காட்டில் 2 பேர்இருக்கிறார்கள். இப்பொழுது இளம் தலைமுறையில் இல்லைத் தான். பெண்கள் வந்து கஷ்டப்படுவது அவர்களுக்கு பிடிக்காது போல 21 கிலோ 22 தூக்கிறது என்று சொன்னால் அதனால இருக்கலாம்.


கேள்வி: நீங்கள் எத்தனையோ நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்கள்.இப்பொழுது இலங்கையில் இருக்கும் தமிழர்களை விட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தான் கூடுதலாக இருக்கின்றார்கள் நீங்கள் அப்படிச் செல்லும் போது மற்ற நாடுகளில் அவர்களைச் சந்திக்கும் பொழுது இப்ப சிட்னி முருகன் கோயிலில் சுவாமி வெளிவீதி சுற்றி உள் வீதிக்கு வந்த பொழுது அரை மணித்தியாலயம் ஒரு கச்சேரியை வைப்பீர்கள் அந்த நேரத்தில் இசையை கேட்கும் பொழுது எங்களுடைய மன உணர்வு சந்தோஷமாக இருக்கும். அப்பொழுது உங்களுடைய உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?

பதில்: நிச்சயாக எங்களுக்கும் சந்தோஷமான நிகழ்வு தான் வந்திருந்த அவ்வளவு கூட்டம் ஏனென்றால் சிட்னி முருகனைப் பொறுத்த மட்டில் ரொம்ப அதிகமான கூட்டம். அவ்வளவு கூட்டமும் கச்சேரியை இருந்து கேட்கும் பொழுது எங்களுக்கும் அதில வாசிக்கிறது ஆர்வமாக தான் இருக்கும். சந்தோசமாகவும் திருப்தியாக இருந்தது. எங்களுக்கு இன்னும் கொஞ்ச நேரம் கிடைக்காதா என்று மனதிற்கு கஷ்ரமாக இருக்கும் .

நேரம் பற்றாக்குறை தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் 20 ,30 நிமிடங்கள இருக்கும். சாமி உள் வீதிக்கு வருவதைப் பொறுத்து தான். நல்லூர் மாதிரி எங்கட சிட்னி முருகன் கோயிலும் நேரத்தை கடைப்பிடிப்பதில் முக்கியத்துவமானவை. அதே நேரத்தில நாங்களும் ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு வாறம்.

ஏனெனில் ஆலயத்திற்குள் உட்செல்லும் போது நல்லூர் ஆலயத்திற்குள் செல்வது போன்ற மன உணர்வு மனதிற்குள் ஏற்படும். அது எல்லோருக்கும் இருக்கின்றது. அந்த ஆலயத்தின் அமைப்போ என்னவோ தெரியவில்லை. உள்ளுக்குள் நுழையும் பொழுது அப்படியான உணர்விருக்கின்றது.

கேள்வி: அதேபோல் மற்றைய நாடுகளிலும் உங்களுக்கு எந்தவகையில் வரவேற்புக்கள் இருக்கின்றது?

பதில்: இதே மாதிரி தான் லண்டனிலும் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இங்க சாமியெல்லாம் உள்ள கொண்டுபோய் வசந்த மண்டபத்தில வைச்ச பிறகு தான். அங்க சாமி வடக்கு வீதியில வரும் பொழுதே. அங்க வந்து வடக்கு வீதி சின்னவீதி தான் அதற்குள்ளயும் அவ்வளவு கூட்டம் கூடுவாங்க. இதே மாதிரி கூட்டமில்லை. சிட்னி முருகன் பெரிய ஆலயம் அதற்குண்டான கூட்டம் ரொம்ப அதிகமாக இருக்கும். ஆனா அங்க சின்ன இடம் தான் அதற்குள்ள கூட்டம் ரொம்ப சிறப்பா இருக்கும். நாங்க வாசிக்கிற அந்த நேரத்திற்கு சாமி வடக்குவீதியில நிற்பாட்டிட்டு அரை மணி நேரம் ஊரில நடக்கிற மாதிரி கச்சேரி தான்.

கேள்வி: நீங்கள் ஒரு கச்சேரிக்கென்று வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஆகும் இந்த நாட்டிற்கு வந்து திரும்பிப் போக. உங்களுடைய குடும்பம் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, எல்லோரையும் பிரிந்து நீங்கள் இங்குள்ள இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்படியான சிரமங்களுக்குள் இருக்கின்றீர்கள். இது ஒரு நாடு இல்லை. இப்படி எத்தனையோ நாடுகளுக்கு தொடர்ச்சியாக செல்ல வேண்டியிருக்கும். அது எந்த வகையில் உங்களுக்கு நான் உங்கள் ஒவ்வொருவரினதும் மனநிலையையும் அறிய விரும்புகின்றேன். எவ்வளவு கஷ்ரமானது குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது என்பது மிக மிக கஷ்ரம் அதனால் தான் இந்த கேள்வியைக் கேட்கின்றேன்?

நீங்க இங்க ஒரு மாதம் இப்படி வேற நாடுகளுக்கும் போகும் போது வருடத்தின் சில நாட்களை இப்படித்தான் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் கேட்கின்றேன்.
எப்படியும் தொழில் என்று பார்த்தாலும் அதற்கப்பால் மனநிலை என்பது மிகவும் கஷ்ரம.; இசைக்கு அதுவும் முக்கியம் உங்களுடைய மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றதோ அதன் வெளிப்பாடு உங்களில் தெரியும் என்று நினைக்கின்றேன்.


பதில்: எனக்கு இரட்டிப்பு பிரச்சினை. எனது அப்பா அம்மா கொழும்பில இருக்கிறாங்க. நான் தற்சமயம் கனடாவில வதிவிட உரிமையை பெற்றிருக்கிறேன். எனது குடும்பம் எல்லாம் கனடாவில் தான் இருக்கின்றார்கள். இப்படியே கொமும்பில போய் இரண்டு மூன்று நாட்கள் அம்மா அப்பாவோடு நின்றுவிட்டு அப்படியே கனடாவிற்கு போறது. எல்லோருக்கும் அப்படியான சூழ்நிலை தான்.

கஷ்ரம் இருக்கும் தான். போன் பேசும் போதெல்லாம் ஆனால் நிகழ்ச்சிக்குபோய்விட்டா சரியாகிவிடும்.

கேள்வி: இப்பொழுது இந்த நாட்டில் வளர்ந்து வரும் கலைஞர்கள் அதாவது நாதஸ்வரம் தவில் கற்பதை பின்பற்றுபவர்கள் மிக மிகக் குறைவு. சத்திய மூரத்தி அண்ணாவிடம் கூடி நான் இதைப்பற்றி; கேட்டிருந்தேன். அவர் கூறியிருக்கிறார் இங்கு பயிற்சி எடுக்க வருபவர்கள் ஏதோ இலகுவான பயிற்சி என்று நினைத்து தான் வருகின்றார்கள். இங்கு வந்த உடனேயே கொஞ்ச நாட்களில் நின்று விடுகிறார்கள் என்று சொல்லி நீங்கள் இந்த வெளிநாட்டிலுள்ள கலைஞர்கள் எல்லாக்கலைஞர்களையும் தான் கேட்கின்றேன் நீங்கள் அதிலே நீண்ட காலம் தேர்ச்சி பெற்ற புகழ்பூத்த கலைஞர்கள் என்ற முறையில் அவர்களுக்க என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

பதில்;: அவர்கள் இந்த தொழிலை மறக்காமல் இங்கயிருந்தும் பின்பற்றி வருவதற்கு ரொம்ப சந்தோஷப்படுறன். இத்தனை வருடகாலமா சத்தியமூர்த்தி வைத்திஸ் இந்த நாட்டில் இந்த கலையை மறக்காமல் உங்களுக்கு வழங்கி வருகிறார்கள். இங்க பெரிய பெரிய ஆலயங்கள் எல்லாம் வந்துவிட்டது. உண்மையில் இந்த நாதஸ்வரக்கலையை இங்க இப்படியானவர்கள் இருக்கிறபடியால தான் அந்த சேவை இப்பவும் இருந்து கொண்டே இருக்கு. இல்லையென்றா கஷ்ரம் தான் நெடுக எல்லோரையும் கூப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதனால் அவர்கள் வேற தொழில் செய்தாலும் இதை மறக்கமல் இன்றும் அந்த தொழிலை காப்பாற்றிக் கொண்டு வருகினம். அதை நினைக்க ரொம்பத் சந்தோஷமாக இருக்கிறது. இங்க மட்டுமல்ல இப்படி பல நாடுகளிலும் இருக்கிறார்கள்.
பாலமுருகன்
நீங்க ரசிகர் இல்லாவிட்டால் இந்த கலையை வளர்க்க முடியாது. உங்களுடைய ரசிக்கிற தன்மையால தான் எங்களால இந்தளவிற்கு வாசிக்க முடியுது. அவங்க என்ன நினைக்கிறாங்களோ தெரியல. எங்கட மனதிற்குள்ள இந்த நாட்டிற்கு வந்து சிட்னி முருகனில வாசிச்சது ரொம்ப பெருமையா இருக்கு. இது நீடிக்கணும் என்று கேட்டுக் கொள்கிறன்.

எல்லோரும் ரொம்ப இரசிச்சினம் அதனை நினைக்க எங்களுக்கு சந்தோசமாக இருந்தது.

ரொம்ப மகிழ்ச்சி வாசிச்சம் இன்னும் பத்து நாள் திருவிழா கூட நடக்காதா என்று இருந்திச்சு. நாங்க கேட்டனாங்க நல்லூர் மாதிரி 25 நாள் திருவிழா செய்யலாமே என்று. புகழுறதிற்காக நாங்க சொல்லல பல நாடுகளுக்கு போய் வந்திருக்கிறம. இங்க 12 நாளும் வாசித்து முடிச்ச பிறகு மனசிற்கு சந்தோஷமாக திருப்தியாக இருக்கு. நாட்டு காலநிலையும் அப்படியிருக்கு. மற்ற நாடுகளில பயங்கர குளிர் அப்படி பிரச்சினை இருக்கும். அன்று சயு மன்றத்தில் நடைபெற்ற 4 மணித்தியாலய கச்சேரியில் அவ்வளவு கூட்டம். அந்த நேரம் ஒரு ரசிகர் கூடி அசைகிற மாதிரி தெரியல. எவருமே 4 மணித்தியாலங்களும் எழும்பவேயில்லை. அவ்வளவிற்கு அவர்கள் ரசித்தார்கள்.


கேள்வி: அதேவேளையில் உங்களுடைய இந்த நாதஸ்வர தவில் இசை தொடர்பான சிடி இசைத்தட்டுகள் வெளிவருவது மிக மிக குறைவு. ஏன் அப்படி, யாருமே அந்த முயற்சிகளை எடுப்பதில்லையா அல்லது நீங்கள்? ஏன் அதனைக் கேட்கின்றேன் என்றால் நாங்கள் வாகனங்களிலே செல்லும் பொழுது சிடி யை போடும் போது அந்த இசை எங்களுடைய பிள்ளைகளின் காதில் போய் சேரும் பட்சத்தில் தான் அவர்கள் அதை ரசிப்பார்கள் ஏனென்றால் ஆலயத்திற்கு வரும் பொழுது அவர்களை ஒரிடத்தில் இருத்தி அதனை கேட்க வைப்பது மிகவும் கஷ்ரம். அப்படியானவர்களுக்கு வாகனத்தில் போகும் போது போட்டால் அவர்களுக்கு அங்கு வேறு எந்த சிந்தனைகளும் இருக்காது. அப்பொழுது அவர்கள் இசையைத் தான் அவர்கள் ரசிப்பார்கள். அந்த வகையில் கூடுதலாக எதிர்கால சந்ததியினருக்கும் எம்முடைய பாரம்பரிய கலை வடிவம் சென்றடைய வேண்டுமென்பதற்காகத் தான் இந்த கேள்வியை கேட்கின்றேன்.


பதில்: வெளியிட்டிருக்கிறம், இங்க கிடைப்பது சிரமாக இருந்திருக்கலாம். ஆரம்பத்தில 95 ஆம் ஆண்டில் நானும் என்னுடைய குருநாதரும் சேர்ந்து 2 சிடி சுவிஸ்லான்ட் நாட்டில வெளியிட்டனாங்க. அதற்கப்புறம் கொண்டாவிலில் பஞ்சமூர்த்தி அண்ணையும் நானும் சேர்ந்து ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதன் பின் பத்மநாதனும் நானும் சேர்ந்தும் வெளியிட்டிருக்கிறம். கடைசியாக நானும் எனது தந்தையாரும் சேர்ந்து இப்ப 2 வருஷத்திற்கு முதல் ஒரு சிடி வெளியிட்டிருக்கிறம். அதைத் தான் ஆரம்பத்தில உங்கட ரேடியோவில போட்ட போது கேட்டிருக்கிறன. அப்படி பல சிடிகள் வெளியிட்டிருக்கிறன். பாலமுருகன் தான் ஒரு சிடியும் இன்னும் வெளியிடவில்லை. நாங்க எல்லோரும் சேர்ந்து செய்கிறதா ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் செய்யல காரணமென்னென்றால் நாங்க இப்படி எல்லா இடமும் போறபடியா சேர்ந்து எடிட்டிங் பண்ண முடியாம இருக்கு. அப்படி ஒரு சிந்தனை இருக்கு. விரைவில எதிர்பார்க்கலாம்.

புகைப்படங்கள் உதவி:
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் இணையத்தளம்,
சிட்னி முருகன் ஆலயம்.

நன்றி: சிறப்பானதொரு பேட்டியெடுத்து உதவிய அறிவிப்பாளர் திரு.நவரட்ணம்.ரகுராம்







Posted by கானா பிரபா at 8:22 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook

33 comments:

ஆயில்யன் said...

மனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா!

நாதஸ்வர ஒசை அதிகம் கேட்டே பழக்கப்பட்டிருந்தாலும், அது சார்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்திருந்தாலும் கூட ஏனோ இன்று பதிவிலும் ஒலியிலும் கேட்டு படித்தப்போதுதான் மனதில் மகிழ்ச்சி!

வாழ்த்துக்களுடன் நன்றி!

June 05, 2008 11:01 PM
ஆ.கோகுலன் said...

உங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு.
பூசலார் தியானத்தில் கோவில் கட்டியது போல நீங்கள் உங்கிருந்தவாறே இணுவில் தீர்த்ததிருவிழாவிற்கு அருமையான வர்ணனை தந்திருந்தீர்கள். மிக்க நன்றி.
மடத்துவாசல் பிள்ளையார் என்று நீங்கள் சொல்வது பரராஜசேகரப்பிள்ளையாரையா?

June 05, 2008 11:04 PM
ஆயில்யன் said...

//இப்ப இந்தியாவைப் பொறுத்தவரை நிறைய நாதஸ்வர தவில் பாடசாலைகள் வந்திருக்கு. தமிழக அரசே அவைகளை நிர்ணயித்து நடத்தி வருகினம்.
இந்தியாவில் பாடசாலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கு. அங்கும் ஆசிரியர் ஒருவர் இருந்து குருகுல முறைப்படி சொல்லிக் கொடுத்துக் கொண்டு வருகிறார். அப்படிப் பயின்றால் தான் முழுமையாக பயில முடியும் என நான் நினைக்கிறேன். //

உண்மைதான் ஆனாலும் பயில்பவர்களின் எண்ணிக்கை அந்தளவுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இல்லை என்பதும் உண்மை!

June 05, 2008 11:13 PM
ஆயில்யன் said...

//இந்தியாவில கும்பகோணத்தில மாயவரம் போகிற பாதையில் நரசிங்கன்பேட்டை என்ற ஒரு கிராமமிருக்கு. அந்த இடத்தில் தான் இதைச் செய்யக் கூடிய ஆச்சாரிமார் நிறைப்பேர் இருக்கிறாங்க.
//

ஹய் இது எங்க ஊரு பக்கத்துலதான் இருக்கே :))

June 05, 2008 11:13 PM
Anonymous said...

பிரபா
தட்சணாமூர்த்தியின் ஒலி நாடா உங்களிடம் இருக்கிறதா?

-தீவு-

June 05, 2008 11:26 PM
கானா பிரபா said...

தீவண்ணை

தட்சணாமூர்த்தி அவர்களின் தனித்தவில் கச்சேரி இறுவட்டாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கின்றேன். அவரைப் பற்றிய ஆவணப்படுத்தலை, அவருடன் வாழ்ந்தவர்களோடு பேசி செய்ய இருப்பது என் திட்டங்களில் ஒன்று. அது செயல்வடிவம் பெறும் போது தட்சணாமூர்த்தி அவர்களின் தவில் கச்சேரியையும் பதிவோடு இணைத்து விடுகின்றேன்.

June 05, 2008 11:29 PM
கானா பிரபா said...

//ஆயில்யன் said...
மனதை திருப்தி அடைய செய்த பதிவு நன்றி அண்ணா!//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆயில்யன். பேட்டியை பாதுகாத்து வைத்திருந்தேன். இன்று தான் போடவேண்டும் என்று கைகூடியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியே.

June 05, 2008 11:46 PM
Anonymous said...

அருமையான பதிவு கானாஸ்

June 06, 2008 12:05 AM
கோபிநாத் said...

அழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))

June 06, 2008 6:46 AM
கானா பிரபா said...

// ஆ.கோகுலன் said...
உங்களது பாணியிலேயே மிகவிரிவான பதிவு. ந.ரகுராம் அவர்கள் பேட்டி கண்டவிதமும் சிறப்பு. //


வாங்க கோகுலன்

பூசலார் மாதிரி தானே புலம்பெயர் வாழ்க்கை, மடத்துவாசல் தான் பரராஜ சேகரப்பிள்ளையார். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

June 06, 2008 3:17 PM
இறக்குவானை நிர்ஷன் said...

அருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே? ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது.
உண்மையில் ஈழத்தின் சிறப்பினை எடுத்துக்காட்டும் பதிவாக இருக்கிறது பிரபா.
தொடர்ந்து எழுதுங்கள்

June 06, 2008 3:43 PM
கானா பிரபா said...

//Thooya said...
அருமையான பதிவு கானாஸ்//

வருகைக்கு நன்றி தூய்ஸ்

//கோபிநாத் said...
அழகான திருவிழா பதிவு....ரசித்தேன் தல :))//

மிக்க நன்றி தல

June 06, 2008 6:43 PM
ஹேமா said...

வணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.மனதை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முடியவில்லை. ஏதாவது சொல்ல வேணும் போலவே இருக்கு.நானும் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலுக்கு திருவிழாக் காலங்களில் வந்திருக்கிறேன். அருமையான மேளக்கச்சேரி கேட்டு ஓய்ந்தது போல இருக்கு.என் சத்தியமூர்த்தி அண்ணாவைக் காண்பீர்களா?நான்(ரதி)கேட்டேன் என்று சொல்லுங்கள்.எத்தனையோ வருடமாச்சு பார்த்து.அவர் பார்வையில் வளர்ந்தவள் நான்.உறவுகளின் தூரம்.... நினைத்தாலே வலிக்கிறது.நீங்கள் சொன்ன வித்வான்கள் காலத்தோடேயே போச்சு நாதஸ்வரக் கலை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு வளர்ச்சி இப்போ இல்லை. பரம்பரையாகவும் உழைப்புக்காகவும் வளர்கிறதே தவிர ஆத்மார்த்தமாக நாதஸ்வரக் கலை இல்லை என்பது என் கருத்து.இன்று வெள்ளிகிழமை மனம் மங்களமாக நிறைவாக இருக்கிறது பிரபா.நிறைந்த நன்றி உங்களுக்கு.

June 06, 2008 7:36 PM
Sanjai Gandhi said...

இசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு.. நல்ல பதிவுக்கு எவ்வளவு மெனக்கெடறிங்க.. வாழ்த்துக்கள்.

June 06, 2008 8:37 PM
Anonymous said...

NICE POST PRABA ANNA..

June 06, 2008 11:31 PM
Anonymous said...

very nice your work. i like very much, i am staying in france but my native place inuvil. i am a musician. vocalist in carnatic;

June 06, 2008 11:53 PM
கானா பிரபா said...

//இறக்குவானை நிர்ஷன் said...
அருமையான பதிவு பிரபா. ஊரில் கோயில் திருவிழா என்றால் சொல்லவா வேண்டும். அத்தனையும் சுவாரஸ்யமான அனுபவங்கள் தானே? ந.ரகுராம் அவர்கள் அளிக்கும் பதில் அவர் தன் துறையில் கொண்டுள்ள அளவில்லா பற்றை எடுத்துக்காட்டுகிறது. //

வணக்கம் நிர்ஷான்

நம்மூர்த் திருவிழாவில் ஒரு சிறு பகுதி தான் இது. இதைப் போல் எத்தனையோ அனுபவங்கள் இல்லையா. சகோதரர் ரகுராம் அவர்களின் விசாலமான கேள்விகள் விரிவான பல தகவல்களைப் பெற வாய்ப்பாகிவிட்டது. மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு.

June 07, 2008 1:20 AM
கானா பிரபா said...

//ஹேமா said...
வணக்கம் பிரபா.அடிக்கடி ஊர் ஞாபகத்தைக் கொண்டு வந்து விடுகிறீர்கள்.//

வணக்கம் ஹேமா

உங்களின் விரிவான பின்னூட்டம் மனநிறைவை அளிக்கின்றது. சத்தியமூர்த்தி அவர்களைக் காணும் போது நிச்சயம் சொல்வேன். போரினால் ஊரை இழந்தோம், உறவுகளை இழந்தோம், இப்படியான கலையும் அழிவது வருத்தமேற்படும் விடயம். இந்தக் கலைஞர்கள் நம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்பது பெருமையிலும் பெருமையான விடயம். மிக்க நன்றி.

June 07, 2008 8:10 AM
Anonymous said...

Piraba Anna,

I like your writing style. The best writers are good at creating a vivid picture in our minds merely by using the right words ,style and dialogue format. And with new media you have taken it a step further by incorporating images and audio clips. Great work.

Love to read more of it in the future

June 07, 2008 11:09 AM
வடுவூர் குமார் said...

நல்ல ஒலி ஏற்றம்.
அப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.

லினக்ஸில் சிறிது நேரம் பிடிக்குது.54 நிமிடத்தையும் முதலில் கணினியில் பிடித்துவைத்து பிறகு ஒலியேற்றுகிறது.

June 07, 2008 2:41 PM
கானா பிரபா said...

//SanJai said...
இசை கேட்க நன்றாக உள்ளது... பதிவு தான் கொஞ்சம் பெரிசா இருக்கு..//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சஞ்சய், பகுதிகளாகப் பிரித்தால் அவற்றின் உள்ளடக்கம் தொய்ந்து விடுமென்பதால் தான் ஒன்றாகக் கொடுத்தேன்.

//Theivigan said...
NICE POST PRABA ANNA..
//

மிக்க நன்றி தெய்வீகன்.

//nanthaa said...
very nice your work. i like very much, i am staying in france but my native place inuvil. i am a musician. vocalist in carnatic;//

வணக்கம் நந்தா

எங்களூரவரைப் பதிவொன்று இணைத்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சலுக்கு ஒரு மடல் போடுங்கள். உங்கள் திறமையை ஊடகத்திற்குப் பயன்படுத்த விரும்புகின்றேன்.

kanapraba@gmail.com

June 07, 2008 3:53 PM
கிடுகுவேலி said...

அற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. நிச்சயமாக இந்த பேட்டியில் இசையைப் பற்றி கதைத்து கொண்டு இருந்தால் எல்லோராலும் ரசிக்க முடியாது. அதற்கு இசை பற்றிய ஞானம் வேண்டும். கேள்வி ஞானம் உள்ள எங்களால் அப்படியான பேட்டியை ரசிக்க முடியாது. அருமையான பேட்டி. ரகுராம் இடம் ஞானம் இருக்கிறது என்பதை விட, நல்ல ரசனை இருந்திருக்கிறது. உள்ள கிடக்கையெல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருக்கிறார். இதுதான் எங்களுக்கு வேண்டும். அதுதான் அவரின் வெற்றி.

இதை எமக்கு தந்த பிரபா, உங்களுக்கு நன்றி. தட்சணாமூர்த்தி பற்றிய அரிய பதிவை உங்களிடம் இருந்து வெகு சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.

அன்புடன் விசாகன்.

June 07, 2008 7:59 PM
கானா பிரபா said...

//Sakthi said...
Piraba Anna,

I like your writing style.// format.

மிக்க நன்றி சக்தி, எழுதும் போது வார்த்தைகளைத் தேடாமல், அல்லது வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் என் நினைவுகளைக் கொட்டவேண்டும் என்று தான் ஓவ்வொரு தடவையும் முயல்வேன். அது உங்களைப் போன்றவர்களுக்கு திருப்தியைக் கொடுத்திருந்தால் அது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.


//வடுவூர் குமார் said...
நல்ல ஒலி ஏற்றம்.
அப்படியே நேரிடையாக கேட்பது போல் இருந்தது.//


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார், தற்போது தரவிறக்கிக் கேட்கும் வசதியையும் கொடுத்திருக்கின்றேன்.

June 08, 2008 2:32 PM
கானா பிரபா said...

//கதியால் said...
அற்புதமான பேட்டி. இதுதான் தேவை பிரபா. //

வணக்கம் விசாகன்

திரு.ரகுராம் அவர்கள் நுட்பமாகக் கேள்விகளை அமைத்ததாலேயே கலைஞர்களிடமிருந்து முழுமையான விளக்கமான பேட்டி அமைந்திருந்தது. உண்மையில் இவற்றை ஆவணப்படுத்துவது நம் தேவை. தொடர்ந்தும் நம் கலைஞர்களைப் பொருத்தமான வேளைகளில் அறிமுகம்/ஆவணம் செய்வோம். மிக்க நன்றி.

June 09, 2008 12:41 AM
Anonymous said...

Thanx for refreshing our memories.

June 09, 2008 2:27 AM
கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ரகுராம்

June 10, 2008 3:14 PM
தமிழன்-கறுப்பி... said...

அண்ணன் நல்ல திருப்பதியான பதிவு ...
ஊர் நினைவுகள் பலதை கிளறி விட்டிருக்கிறீர்கள்...

June 16, 2008 9:57 AM
தமிழன்-கறுப்பி... said...

பதிவு பெரிசாக இருந்தாலும் எதையுமே விடமுடியாமல் எழுதியிருக்கிறீர்கள் எங்கடை ஊரிலயும் சுவாமி வடக்கு வீதிக்க வரும்பொழுது கட்டாயம் ஒரு சின்ன சமா நடக்கும் அது ஒரு தனி உற்சாகத்தோட இருக்கும் அந்த நேரத்தில நேயர் விருப்பங்களும் இருக்கும்... அதே மாதிரி சூரன் போர் நடக்கும் பொழுது வாசிக்கிற பாடல்கள் அதுவும் கடைசி நேரத்தில் பெடியளின்ரை களைப்பு போய் உற்சாகம் வருமளவுக்க வாசிப்பார்கள் அதெல்லாம்..ம்ம்ம்... ஞாபகப்பக்கங்களில் தனி அத்தியாயங்கள் அண்ணன் கோவில் திருவிழாக்கள்...

June 16, 2008 10:04 AM
கானா பிரபா said...

வணக்கம் தமிழன்

நாதஸ்வர நேயர் விருப்பம் நான் சொல்ல நினைத்து மறந்து போன விடயம், உங்கள் பின்னூட்டல் மூலம் சொன்னமைக்கு மிக்க நன்றி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

June 17, 2008 1:47 PM
Cherankrish said...

This is very interesting.questions also simple and reflecting a normal user manner.have a sharp voice like abdul hameed. good work :)

July 05, 2008 6:01 PM
கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சேரன் கிரிஷ்,

July 05, 2008 6:40 PM
நிஜமா நல்லவன் said...

தல நீண்ட பதிவாக இருந்தாலும் மிக அருமையான பதிவு. படித்தேன். ரசித்தேன். மிக்க நன்றி.

July 05, 2008 8:23 PM
கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல

July 05, 2008 8:47 PM

Post a Comment

Newer Post Older Post Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2023 (3)
    • ►  March 2023 (1)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ►  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ►  August 2021 (4)
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ▼  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ▼  June 2008 (3)
      • "எரியும் நினைவுகள்" உருவான கதை
      • சிவத்தமிழ்ச் செல்வி சோதியிற் கலந்தார்..!
      • மேளச்சமா...!
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • கே.எஸ்.பாலச்சந்திரனின் "கரையைத் தேடும் கட்டுமரங்கள்"
    கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த ...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • கலாநிதி க.குணராசா வழங்கிய "சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு
    செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் நாவல்களை, சிறுகதைகளைப் படைத்த கலாநிதி குணராசா அவர்கள் தன்னுடைய சொந்தப் பெயரில் மாணவருக்கான புவியியல், வரலாற்...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes