

சரஸ்வதி பூசைக் கடைசி வீடுப் பூசை நாளில் சிட்னிச் சனம் இரவுப் பூசையை மதியத்துக்குத் தள்ளி வைத்து (கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று)மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டே மாலை 6 மணி நிகழ்ச்சிக்கு 5 மணிக்கு முன்பே காரில் ஒபரா ஹவுசை நோக்கிப்படையெடுத்தது. 5 மணிக்கு முன் பார்க்கிங்கில் விட்டால் 39 டொலர் கட்டவேணும் என்ற ஒருமித்த சிந்தனை எல்லாக் கார்க்காரர்களிடமும் இருந்தது போலும். (ஏன் அநியாமாய் உவங்களுக்கு குடுக்கவேணும்) காரின் மணிக்கூண்டு 5 ஐக்காட்ட வெளியில் நோ பார்க்கிங்கில் (No parking) கூடத் தற்காலிகமாகத் தரித்து நின்ற கார்ச்சக்கரங்கள் ஒபரா ஹவுஸ் வாகனக் காப்பகத்துக்குள் ஊடுருவின.

ஐந்து அரங்கங்களைக் கொண்ட இந்த ஒபரா ஹவுஸில் மிகப்பெரிய அரங்கான The Concert Hall இல் ஜேசுதாஸ் குழுவின் இந்த இசை வேள்வி நடந்தது.
இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக முன் ஒபரா ஹவுஸ் சுற்றுலா வழிகாட்டிப் பெண்மணி இந்த மண்டபத்தில் சிறப்பைச் சொன்னது வெகு சிறப்பாக இருந்தது. மேலே அந்தத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கூடுகள் ஒலியமைப்புக்கேற்ற விதத்தில் தம்மை அடிக்கடி மாற்றிக்கொண்டு இசையின் துல்லியத்தைத் தரும் என்று சொன்னவர் இந்த அரங்கு 2670 இருக்கைகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். (நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர் 2100 வாக்கில் இரசிகர்கள் வந்ததாக என்னிடம் சொன்னார். காரணம் அரங்கின் பின் புற இருக்கைகளை விழா ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களின் செளகரிகம் கருதி நிரப்பவில்லை.)
5.30 மணிக்கே இரசிகர்கள் தம் இருக்கைகளில் அமரத் தொடங்கி 6 மணிக்கு முன்பே அரங்கை நிரப்பியிருந்தாலும் தமிழ்ப்பண்பாட்டு முறைப்படி 6.15 மணியளவில் நிகழ்ச்சி ஆரம்பமானது.
தொகுப்பாளராக பி.பி.சி. தமிழ்ச்சேவை புகழ் விக்னராஜா அல்ட்டல் சக ஆர்ப்பாட்டமின்றி மிக இயல்பானதொரு அறிவிப்பைச் சிறப்பாகவே செய்திருந்தார், பாடல்கள் வெளிவந்த ஆண்டு, படத்தின் பெயர் போன்ற விபரங்களைச் சொன்னவர் அந்தப் பாடல்களின் சிறப்பையும் சொல்லியிருக்கலாம் (ஆனாலும் பரவாயில்லை). சில அறிவிப்பாளர்கள் போல் 5 நிமிடப் பாடலுக்கு 10 நிமிட அறுவைக்கச்சேரி வகையறாக்கள் எல்லாம் இவரிடம் தென்படாதது மகா ஆறுதல்.



இந்த ஒலிப்பதிவைக் கேட்க -நன்றி தமிழ் சிட்னி
மேடையில் வழக்கத்துக்கு மாறாக நிறையப் பேசிய ஜேசுதாசை ஆவென்று வாய் பிளக்கப் பார்த்த இரசிகர் இடைவேளையில் வெளியில் வந்தபோது என்னிடம் சொன்னார் இப்படி "ஆளுக்கு வயசு போட்டுது".

ஆனால் "அதிசய ராகம்" (அபூர்வ ராகங்கள்) விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது என்று இரு தடவை பிழையாகச் சொல்லி ராமமூர்த்திக்கு அந்தப் பாடலின் பெருமையில் பங்கு கொடுத்துவிட்டார்.
இளையராஜா ஒருமுறை தன் வீட்டுப் பூஜை நிகழ்வில் " அண்ணே, நீங்க போட்ட பிச்சையில தான் நாங்க வாழுறோம்" என்று எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்த்துச் சொன்னதாகவும்" அப்படிச் சொல்லாதே தம்பி" என்று அவர் தன்னடக்கமாக குழைந்ததையும் சொல்லி நெகிழ்ந்தார் ஜேசுதாஸ்.


மஹதிக்குப் பெரிதாக வேலையில்லை. அவரின் தனிப் பாடலான “ஐயய்யோ ஐய்யயோ புடிச்சிருக்கு” பாடலை விஜய் ஜேசுதாசுடன் இணைந்து பாடியவர், மற்றய பாடல்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் தோள் கொடுத்தார். மஹதிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பல் டாக்டரை மணம் முடிக்கப் போகிறார் என்ற தகவலை ஜேசுதாசே சொன்னார்.

உன் பிள்ளையோடு கூட நான் பாடுவேன், இதை நான் நம்பிக்கையோடு சொல்வேன், என் குருநாதர் இதே செம்பை வைத்தியநாதபாகவதர் இதே போல எனக்குச் சொல்லியிருக்கார். எம்புள்ள முன்னாடி அவர் கச்சேரி செய்தும் இருக்கார்" என்று ஜேசுதாஸ் மஹதியைப் பார்த்துச் சொன்னது மெய்சிலிர்க்க வைத்தது.
“ஆறு வயசில ஒரு உறவினர் திருமணத்தில் ஜேசுதாஸ் அண்ணாவோடு பாட ஆரம்பித்தேன்” என்று பேச்சு வழங்கித் (அந்த நிகழ்வில் குட்டிப் பெண் சுஜாதாவைக் கைதூக்கி மேடையில் ஏற்றியதை நினைவு கூர்ந்தார் ஜேசுதாஸ்)தன் தனிப்பாடல்களான " பூப்புக்கும் ஓசை" (மின்சாரக்கனவு), "ஒரு இனிய மனது" (ஜானி), "நேற்று இல்லாத மாற்றம்"(புதியமுகம்) பாடல்களையும் பாடிக் கூடவே ஜேசுதாசுக்கு மற்றய பாடகிகள் பின்னணிக் குரல் கொடுத்த பாடல்களை இணைந்து சிறப்பாகவே வழங்கினார்.

சொல்லித் தன் இளமை ரகசியத்துக்கு ஆப்பு வைத்தார்.

1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குக் குட்டிப் பெண்ணாக சுஜாதா வந்திருந்தார், அந் நிகழ்வில் மறக்க முடியாத அனுபவம் பற்றிக் கேட்டபோது " எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்" என்று சொல்லிச் சிரித்தார் சுஜாதா.
மகன் தந்தைக் காற்றும் உதவி என்பது போல இந்த இசை நிழச்சிக்கு விஜய் ஜேசுதாசின் பங்கு மிக முக்கியமானது என்றுதான் சொல்லவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் என்று தன் " எனக்குப் பிடித்த பாடல்" (ஜூலி கணபதி) பாடலின் ஒரு சில வரிகளைப் பாடி முழுமையாகத்


"பூவே செம்பூவே" (சொல்லத்துடிக்குது மனசு) பாடலில் இளையராஜாவின் இசையமைப்பின் சிறப்பைச் சிலாகித்த ஜேசுதாஸ் பாடலைப் பாடும் போது இசை வேறு பக்கமாகவும் தன் பாடலை வேறுபக்கமாகவும் மாற்றிச் சலனப்படுத்தினார், பாடல் முடிவில் வர ஆரம்பித்த கைதட்டலைத் தடுத்து முழுமையாக அந்த இசைக் கலவை முடிவது வருவது வரை கேட்கவைத்து கை தட்டலைத் தொடரவைத்தார்.


முன் வரிசை ரசிகர்களுக்காக " மரி மரி நின்னை' பாடலின் ஒரு சில வரிகளைப் பாடியவர், கன்னடப் பாட்டுக் கேட்டவர்களுக்காகத் தன் பாணியில் " கிருஷ்ணா நீ பேகனே" பாடியது கொலோனியல் கசின்னை மறக்கடித்து மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.
"தெய்வம் தந்த வீடு" பாடலை அவர் பாடும் போது சீடியில் கேட்கும் உணர்வு ஆனால் விஜய் ஜேசுதாஸ் பின்னணியில் கை கொடுக்க அவர் பாடிய " என் இனிய பொன் நிலாவே" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பு போல் வேகமாகப் பாடியது உறுத்தல்.

நிறைவில் மற்றய பாடகர்களுடன் செம்மீன் படப் பாடலான "பெண்ணாலே" பாடினாலும் அவரின் இசை வாழ்வின் முத்தாய்ப்பான "கடலினக்கரை போனோரே" பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம். அலுக்கக் கூடிய பாடலா அது?
முடிவாக யாரோ ஒருவரைத் திருப்திப்படுத்தவோ என்னவோ "விஸ்வநாதன் வேலை வேணும்" என்ற பாடலை விஜயுடன் பாடினார், இதைப் பாடி நிறைவு செய்யாமல் இருந்தால் இன்னும் இனிய பல இசைஅனுபவதோடு திரும்பியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.

நடுத்தரவயசைக்கடந்த யாழ்ப்பானத்துக்காரர் யேசுதாசைச் சந்தித்தால் பெரும்பாலும் " கடலினக்கரை போனோரே" என்ற பாடலைத் தான் ரொம்பவும் சிலாகித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
எட்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் மூலம் ஒரு பொக்கிஷம் எனக்குக் கிடைத்தது. இன்றும் பத்திரமாக வைத்திருக்கும் அது, 1980 ஆம் ஆண்டு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கே.ஜே.ஜேசுதாஸ், சுஜாதா (அப்ப ரட்டைச் சடை போட்ட சரியான சின்னப் பிள்ளை) இருவரும் வழங்கிய இசை நிகழ்ச்சி. அப்போது பிரபலமாக இருந்த நியூ விக்டேர்ஸ் வீடியோ எடுத்திருந்தார்கள், பிரபல அறிவிப்பாளர்கள் அப்துல் ஹமீட், உங்ங்ங்கள்ள்ள..... அன்பு அறிவிப்பாளர்ர்ர்ர்.... கே.எஸ்.ராஜாவும் தொகுத்து வழங்கியிருந்தார்கள். வீரசிங்கம் மண்டபமே யாழ்ப்பாணச் சனம் அள்ளுப் பட்டுக்கிடந்தது.
அடுத்த பாடலை அப்துல் ஹமீட் அறிவிக்கின்றார். அவ்வளவு ரசிகர்களும் ஆரவாரித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றார்கள். அந்தப் பாடல் "கடலினக்கரை போனோரே.... காணாப் பொன்னினு போனோரே..."
கடந்த ஏப்ரல், 2006 யாழ்ப்பாணம் போன போது சில நினைவுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் இடங்களை என் கமராவில் சுட்டுக்கொண்டேன். ஒரு ஓட்டோவில் இருந்தவாறே ஒவ்வொரு இடங்களுக்குமாகத் தேடிப் போய்க் கமராக் கண்ணில் சுட்டவேளை வீரசிங்கம் மண்டபத்தின் நினைப்பும் வந்தது. ஓட்டோக்காரர்

"எத்தனை எத்தனை களியாட்டங்கள் நடந்த மண்டபம் இது" ஆட்டோவின் இருக்கையில் இருந்து பெருமூச்சாய் என் மனதில் தெறித்த அங்கலாய்ப்பின் வார்த்தைகள்.
46 comments:
நன்றாக பதிவு செய்திருக்கிறீர்கள் பிரபா...ஒலிக்கு நன்றி..
வணக்கம் ரவி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
ம் வீரசிங்கம் மண்டபத்தை இழுத்துவிட்டிருக்கிறீர்கள் ம் அதெல்லாம் ஒரு காலம் இல்லையா நல்லா இருக்கு கானாபிரபா
அன்புடன்
த.அகிலன்
vaazgha
//த.அகிலன் said...
ம் வீரசிங்கம் மண்டபத்தை இழுத்துவிட்டிருக்கிறீர்கள் ம் அதெல்லாம் ஒரு காலம் இல்லையா//
வணக்கம் அகிலன்
எங்கிருந்தாலும்... எங்கே போனாலும்... சுற்றிச் சுற்றி ஊர் நினைப்புத் தானே
பிரபா!
மண்டபத்தைப் பார்த்தது போலவும்;பாட்டுக் கேட்டது போலவும் இருக்கு!
நான் கனக்கக் ,இதுக்குக் கதைக்கவில்லை;
யோகன் பாரிஸ்
//icarus prakash said...
vaazgha //
வணக்கம் பிரகாஷ்
யாரை வாழ்க என்று சொன்னீங்க:-)))
சரி சரி நீங்க வாழ்க நான் வாழ்க, ஜேசுதாஸ் குழு வாழ்க
//Johan-Paris said...
பிரபா!
மண்டபத்தைப் பார்த்தது போலவும்;பாட்டுக் கேட்டது போலவும் இருக்கு!
நான் கனக்கக் ,இதுக்குக் கதைக்கவில்லை;
யோகன் பாரிஸ் //
வணக்கம் யோகன் அண்ணா
நீங்கள் கனக்கக் கதைக்காட்டிலும் வந்து கையெழுத்துப் போட்டதே எனக்கு நிறைவு:-)
pirabaa
கடலினக்கறா பொனரே பாடல் எங்ஏ எடுக்கலாம்
அருமை பிரபா .
நேரில் பார்த்தது போல ஒரு வருணனை.
பிரபா!
இந்தவாரத்தில் நீங்கள் குறிப்பிட்ட வீரசிங்கம் மண்டபக் கச்சேரி பாடல்கள் சிலவற்றை, நண்பரின் காரினுள் கேட்டபோது என்னுள்ளும் அந்தநாள் ஞாபங்கள் மீண்டன.
ஜேசுதாஸின் அண்மைக்காலக் கச்சேரிகளில், அவர் கதைப்பது சற்று அதிகம் போல்தான் தெரிகிறது. ஆனாலும், பவுணு பவுணுதான்
ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸ் கச்சேரியை இலவசமாகக் கேட்க வைத்தமைக்கு நன்றி!
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.
எனக்கு வீரசிங்கம் மண்டபம் எல்லாம் தெரியாது. :(
நல்ல அருமையான விவரணை பிரபா. ஒவ்வொரு பாட்டைப்பற்றியும் படிக்கேக்கெ மண்டைக்குள்ள பாட்டு ஓடிச்சிது. :)
அந்த காசட் பற்றி: அதை ஒரு சிடியா மாத்துங்கோவன். மாத்தினபிறகு சொல்லுங்க. ஒரு கொப்பி கேக்கிறன். :D
நன்றி பிரபா.
-மதி
//அருண்மொழி said...
pirabaa
கடலினக்கறா பொனரே பாடல் எங்ஏ எடுக்கலாம் //
வணக்கம் அருண்மொழி
ஒரு தனி மடல் எனக்குப் போடுங்கள், பாடலை அனுப்புகின்றேன்.
நல்ல பதிவு பிரபா... ஒலி வடிவத்தை தந்திருக்கிறீர்கள்.. நன்றி. உப்படி பல அரிதாக கிடைக்ககூடிய பல ஒலி பதிவுகள் உங்களிடம் இருக்கு என்று நினைக்கிறன்.. பதிவுகளுடன் இணைத்து எதிர்காலத்தில் தரூவீர்கள் என்று நம்புகிறன்
வீரசிங்க மண்டபத்தை நினைவு படுத்தினீர்கள்... தமிழராய்ச்சி மாகாநாட்டை... உந்த மண்டபத்துக்கு உள்ளை நடத்து வெளியாலை நடத்தாதே.. என்று சிறிமா-துரையப்பா கோஸ்டி ஆடின நாட்டியமே... தமிழராய்ச்சி மகாநாட்டு கடைசி நாள்.. கலவரங்கள்...
அருமையான பதிவு( வழக்கம்போல்)
இங்கே ஆக்லாந்துக்கு இந்த சனிக்கிழமை யேசுதாஸ் பாட்டு லபிச்சிருக்கு.
எங்களுக்கு? பட்டை நாமம்(-:
பரவாயில்லை. 7 மாசம் முந்தி இவரோட கர்நாடக இசைக் கச்சேரியைக் கேக்கும்
பாக்கியம் கிடைச்சது. 'கிருஷ்ணா நீ பேகனே'க்கு நாட்டியப்பேரொளி நடனமும்
ஆடினாங்க அப்ப. ஆஹா...........
போகக் கிடைக்கேல்ல. உங்கட விபரிப்புக் கேட்டதே நிகழ்ச்சிக்குப் போன மாதிரி இருக்கு பிரபா. இடையிடையே எங்கட சனத்தின்ட மனப்பாங்குகளையும் தெளிச்சிருக்கிறீங்க. சிரிப்பாக்கிடந்தாலும் உண்மை.
//சுஜாதா ... " எனக்கு அப்போது நீண்ட ஜடை இருந்தது, ஒரு பையன் கச்சேரி முடிந்ததும் ஸ்டேஜில் ஏறி இது உங்க சொந்த முடியான்னு கேட்டான்"//
எங்கட ஊர்ப் பெடியளுக்கெல்லாம் இருக்கிற fixationதான். சொல்லுறதுக்கு ஒண்டுமில்ல. :O)
மதி - கவலைப்பட ஒண்டுமில்ல.. எனக்கும் வீரசிங்கம் மண்டபத்தைத் தெரியாது. முத்தவெளியும் வெபர் ஸ்டேடியமுந்தான் தெரியும்! ஆனா ஒரு ஒற்றுமை.. அதுக்குள்ளையும் ஆமியிட சென்றிதான்.
//கார்திக்வேலு said...
அருமை பிரபா .
நேரில் பார்த்தது போல ஒரு வருணனை. //
வணக்கம் கார்திக்
ஊரில் இருந்தும் தாங்கள் வரவில்லைப் போலிருக்கின்றது:-)
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
//மலைநாடான் said...
ஜேசுதாஸின் அண்மைக்காலக் கச்சேரிகளில், அவர் கதைப்பது சற்று அதிகம் போல்தான் தெரிகிறது. ஆனாலும், பவுணு பவுணுதான்//
வணக்கம் மலைநாடான்
வெறுமனே ஒப்புக்குச் சிலைபோல நின்று பாடிவிட்டுப் போகும் பாடகரை விட இப்படித் தன் அனுபவங்களைப் பகிர்ந்து பாடுபவரை நன்றாக நான் ரசிப்பேன். எனவே ஜேசுதாஸ் இந்த விஷயத்தில் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
அருமையான விவரணையோடு கூடிய பதிவு. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத குறையைக்குறைத்தும் - நிகழ்ச்சியை பார்க்காத ஏக்கமும் ஒருசேர வருகிறது.
மதியிடம் கடன்வாங்கி:
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.
அந்த காசட் பற்றி: அதை ஒரு சிடியா மாத்துங்கோவன். மாத்தினபிறகு சொல்லுங்க. ஒரு கொப்பி கேக்கிறன். :D
உங்கள் பதிவை வாசிக்க வாசிக்க, ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சிங்கையின் கடற்கரையோர கலையரங்கு - எஸ்ப்ளனேட்-டில் நடந்த எஸ்.பி.பி & ஜானகி குழுவினருடன் படைத்த அந்திமழை இன்னிசை நிகழ்ச்சி ஞாபகம் வந்தது!
அந்திமழையின் மேலும் சில தூறல்கள்
//மதி கந்தசாமி (Mathy) said...
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.//
வணக்கம் மதி
உங்களுக்கும் இது போன்ற நிகழ்ச்சி பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
நியூ விக்டேர்ஸ் வீடியோ உரிமையாளர் தற்போது மெல்பனில் தான் இருக்கிறார். இந்த யாழ்ப்பாண இசை நிகழ்வின் பிரதியை ஜேசுதாஸுக்கு இம்முறை கொடுத்ததாகவும் அவர் அதை மகிழ்வோடு பெற்று " விஜய் 6 வயசு பையனாக இருந்தபோது வந்திருந்தான்" என்றும் சொல்லியிருந்தாராம்.
இந்த வீடியோவில் தகப்பனின் காலைப் பிடித்தவாறே மகன் விளையாடிக்கொண்டிருக்க, ஜேசுதாஸ் அவருக்கு போக்கு காட்டியவாறே பாடிக்கொண்டிருந்தது ஒரு ஹைக்கூ.
நிச்சயம் சீடியாக வரும், மெட்ராஸ் மெயிலின் சீடி அனுப்பினது போல:-)
//சின்னக்குட்டி said...
நல்ல பதிவு பிரபா... ஒலி வடிவத்தை தந்திருக்கிறீர்கள்.. நன்றி. உப்படி பல அரிதாக கிடைக்ககூடிய பல ஒலி பதிவுகள் உங்களிடம் இருக்கு என்று நினைக்கிறன்.. பதிவுகளுடன் இணைத்து எதிர்காலத்தில் தரூவீர்கள் என்று நம்புகிறன்//
வணக்கம் சின்னக்குட்டியர்
ஒலிப்பதிவுக்கான தளம் என்பது என் நீண்ட நாட் கனவு. கனவு மெய்ப்படவேண்டும்:-)
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
வீரசிங்கம் மண்டபம் எமது ஈழவரலாற்றின் பல தடங்களைப் பதித்து நிற்கின்றது...
அருமையான விவரணம்.
மண்டபத்துள் வந்து விட்டது போன்ற பிரமை.
ஓபரா கவுஸ் பற்றியும் அறிய முடிந்தது
//துளசி கோபால் said ... (October 04, 2006 9:18 AM) :
அருமையான பதிவு( வழக்கம்போல்)
இங்கே ஆக்லாந்துக்கு இந்த சனிக்கிழமை யேசுதாஸ் பாட்டு லபிச்சிருக்கு.
எங்களுக்கு? பட்டை நாமம்(-://
வணக்கம் துளசிம்மா
தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
முயற்சி செய்து ஆக்லாந்தில் ஜேசுதாஸின் தேனிசை மழையில் நீங்களும் சங்கமாயிடுங்க. கையெத்தும் தூரம் தானே:-)
ஓய்,
சுஜாதாவின்ர மகளுக்கு 20 வயசெண்டு தாய் சொல்லிறா. நீர் பதினெட்டு எண்டுறீர்.
என்ன விளையாடுறீரா?
தரவுகளைத் தந்தால் ஒழுங்காத் தரவேணும்.
;-)
//ஒலிப்பதிவுக்கான தளம் என்பது என் நீண்ட நாட் கனவு. கனவு மெய்ப்படவேண்டும்:-)
//
மெய்ப்பட வேணுமெண்டதுதான் என்ர விருப்பமும்.
//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
போகக் கிடைக்கேல்ல. உங்கட விபரிப்புக் கேட்டதே நிகழ்ச்சிக்குப் போன மாதிரி இருக்கு பிரபா. இடையிடையே எங்கட சனத்தின்ட மனப்பாங்குகளையும் தெளிச்சிருக்கிறீங்க. சிரிப்பாக்கிடந்தாலும் உண்மை.//
என்ன ஷ்ரேயா
அவல் கிளறுகிற பிராக்கில இசை நிகழ்ச்சியைத் தவறவிட்டிட்டியளே?
;-)
வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.
எங்கட ஊர்ப்பெடியள் ரொம்ப விபரமானவங்கள்:-))
//அன்பு said...
அருமையான விவரணையோடு கூடிய பதிவு. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத குறையைக்குறைத்தும் - நிகழ்ச்சியை பார்க்காத ஏக்கமும் ஒருசேர வருகிறது.
மதியிடம் கடன்வாங்கி:
இடுகையை முழுக்கவும் வாசிட்டு மூச்சை நல்லா இழுத்துவிட்டன்.//
வணக்கம் அன்பு
தங்கள் அன்புப்பாராட்டுக்கும் வருகைக்கும் என் நன்றிகள்.
தங்களின் அந்திமழை வாசித்"தேன்". பின் விபரமாகப் பதில் போடுகின்றேன். உங்களுக்கும் ஒரு சீடியா;-))
//Chandravathanaa said...
அருமையான விவரணம்.
மண்டபத்துள் வந்து விட்டது போன்ற பிரமை.//
வணக்கம் சந்திரவதனா அக்கா
உங்களைப் போன்ற திரையிசை ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் பிடித்திருக்கும்.
ஓபரா மாளிகையை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை. நான் இந்நிகழ்ச்சியைத் தவறவிட்டு விட்டேன். எனினும்,
//கடலினக்கரை போனோரே பாடாதது மன்னிக்கமுடியாத குற்றம்.//
அதிகம் இழக்கவில்லை:))
//வசந்தன்(Vasanthan) said...
ஓய்,
சுஜாதாவின்ர மகளுக்கு 20 வயசெண்டு தாய் சொல்லிறா. நீர் பதினெட்டு எண்டுறீர்.//
சரி சரி மாத்தியாச்சப்பா, 2 வயசு குறைச்சால் தேஞ்சே போயிடுவீர்;-)
obera house ஐ பாக்க பழைய ஞாபகமெல்லாம் சுத்தி சுத்தி வருது..
பிரபா, ஓபெரா ஹவுசுக்குள் இப்படியொரு அழகான அரங்கமா...பார்க்கவே சுகமாக இருக்கிறது. அங்கும் என்றாவது பாட்டு கேட்க வேண்டும்.
நிழச்சியை நேரில் பார்ப்பது போன்ற வருணனை. மிகச் சிறப்பு.
அதிசய ராகம் மெல்லிசை மன்னர் இசையல்லவா. சரி. வயதில் மறந்திருக்கலாம். விழியே கதையெழுது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
விஸ்வநாதனும் இளையராஜாவும் மிகவும் நட்பும் உரிமையும் பாராட்டுகிறவர்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏசுதாஸ் வாயிலும் இப்பொழுது வந்து விட்டது.
மஹதியும் நல்ல குரல்வளம் உடையவரே. சுஜாதாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா! காயத்ரி படத்தில் வரும் "காலைப் பணியில் ஆடும் மலர்கள்" பாட்டொன்று போதுமே.
பெண்ணாளே பெண்ணாளே பாடலில் முதன்மைக் குரல் பி.லீலாவுடையது. அவருக்கு மாற்றாக அன்று யார் பாடினார்கள். பெண்ணாளே பெண்ணாளே கறிமீன் கண்ணாளே....சலீல் சௌத்ரியின் முதல் மலையாளப்படம். செம்மீன்.
அருமையான விவரணம்...
பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான்.
தேன்மழை
கானா பிரபாவால் கொட்டியிருக்கு.........
அருமை!
//Kanags said...
ஓபரா மாளிகையை அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை. நான் இந்நிகழ்ச்சியைத் தவறவிட்டு விட்டேன்.//
வணக்கம் சிறீ அண்ணா
உங்களுக்கும் வீட்டுபூசை காரணமாக்கும். கருத்துக்கு நன்றிகள்.
//சயந்தன் said...
obera house ஐ பாக்க பழைய ஞாபகமெல்லாம் சுத்தி சுத்தி வருது.. //
இப்பவும் ஒண்டும் கெட்டுப்போகேல்லை, வீட்டுக்காரியைக் கூட்டிகொண்டு கங்காரு நாட்டுக்கு வாரும் ஐசெ "-)
கானா பிரபா said...
// G.Ragavan said...
பிரபா, ஓபெரா ஹவுசுக்குள் இப்படியொரு அழகான அரங்கமா...பார்க்கவே சுகமாக இருக்கிறது. அங்கும் என்றாவது பாட்டு கேட்க வேண்டும்.//
வணக்கம் ராகவன்
ஒபரா ஹவுஸ் உண்மையில் ஒரு கனவுலகம்.
நான் எதிர்பார்த்து சுஜாதா பாடாமல் ஏமாற்றியவை "காலைப் பனியில்" மற்றும் "காதல் ஓவியம் கண்டேன்"
பெண்ணாளே பாடலை ஜேசுதாஸ், விஜய், சுஜாதா மஹதி பாடியிருந்தார்கள்.
கண்டதில் ஒரு சுகம்... !! வாசிப்பு ஒரு இனிய அனுவம்...!! கலந்து கொள்ள இயலாதூரத்தில்... இந்த விலாசம் இழந்தவனும்... இருப்பினும்... காட்சிகள் கண் முன்னே விரிகின்றது... நன்றி.. பிரபா......ஒபரா ஹவுஸில் முதலில் தமிழை ஒலிக்கச்செய்ய வழிசெய்தவர்களுக்கும் விலாசம் இழந்தவர்கள் நன்றி சொல்லவேண்டியவர்கள்...!!!
ப்ரஷாராஜ்...ஒமான்...
//shanmuhi said...
அருமையான விவரணம்...
பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான். //
தங்கள் கருத்துக்கு நன்றிகள் ஷண்முகி. உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகள் எமது கடந்த கால நினைவுகளைத் தூண்டுவதும் நிழச்சியின் சிறப்பிற்கு ஒரு காரணம்.
Thanks...Nice site...
// AJeevan said...
தேன்மழை
கானா பிரபாவால் கொட்டியிருக்கு.........
அருமை! //
வாசித்துத் தங்கள் கருத்தளித்த அஜீவன், உங்களுக்கு என் நன்றிகள்
//கண்டதில் ஒரு சுகம்... !! வாசிப்பு ஒரு இனிய அனுவம்...!! கலந்து கொள்ள இயலாதூரத்தில்... இந்த விலாசம் இழந்தவனும்... இருப்பினும்... காட்சிகள் கண் முன்னே விரிகின்றது... நன்றி.. பிரபா......
ப்ரஷாராஜ்...ஒமான்... //
வணக்கம் ப்ரஷாராஜ்
வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி ஜேசுதாஸ் வருவார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அடுத்தமுறை அவரின் தேனிசை மழையில் நீங்களும் நனையுங்கள். தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.
//VKN said ... (October 05, 2006 7:17 PM) :
Thanks...Nice site...//
வருகைக்கு நன்றிகள் VKN
ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸ் குழு படைத்த இசை நிகழ்ச்சியின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அருமையான படங்களுக்கு நன்றி பிரபா...
ஆஹா பிரபா,
ஒரு அருமயான இசை நிகழ்ச்சியத் தவற விட்டுட்டேனே. நான் அங்க இருக்கும் போது நட்ந்து இருந்தா உங்களோடு சேந்து நானும் ரசிச்சிருப்பேனே.... ஆனா உங்க பதிவு அந்தக் குறய போக்கிட்டுது.
அப்புறம் அங்க நடந்த மாண்டலின் சீனிவாசனோட கச்சேரிக்குப் போனீயளா?
வணக்கம் நெல்லைக்கிறுக்கரே
நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிட்டீர்கள், ம் என்ன செய்வது:-)
அடுத்தவாட்டி பார்க்கலாம்.
மாண்டலின் சிறீநிவாஸ் கச்சேரிக்கு போக எனக்கு கிடைக்கவில்லை.
Post a Comment