“எனக்கு என் பிள்ளையின் வித்துடல் வேண்டும்”
எல்லோரையும் அமைதிப்படுத்தி விட்டு இராணுவ முகாம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.
மந்திகை இராணுவ முகாமில்
“நான் மொறிஸியஸின் அம்மா”
சிவா தியாகராஜா 🙏
வீரமறவர்களை வயிற்றில் சுமந்த அன்னை.
தன் மூன்று பிள்ளைகளை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஈய்ந்தவர் இன்று காலை விண்ணேகி அவர்களிடம் சேர்ந்தார்.
"அந்த வீட்டைச் சுற்றி இராணுவ முகாம்கள். நான் சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன்.
சுடச் சுடப் புட்டும், முட்டைப்பொரியலும் கொண்டு வந்து தந்து
“களைச்சிருக்கிறாய் அப்பு!
முதல்ல சாப்பிடு பிறகு கதைக்கலாம்”
என்றார்.
எனக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்து பொங்கியது. நான் பொங்கிய கண்ணீரைத் துடைக்கவில்லை. எனக்கு ஏற்கனவே பசி. தலை சுற்றுவது போல் உணர்வு. மளமளவென்று சாப்பிடத் தொடங்கினேன். அந்நேரம் அவ்வுணவு எனக்கு அமிர்தம் போலத் தோன்றியது. அம்மா என்னைப் பரிவோடு பார்த்தபடி இருந்தார்.”
“தான் பெற்ற பிள்ளைகளுக்கு மட்டும் அவர் அம்மா இல்லை, எங்கள் அத்தனை பேருக்கும் தான். நாம் துவளும் போதெல்லாம் தட்டிக் கொடுத்து எம்மை உயிர்ப்புடன் செயற்பட வைத்துக் கொண்டிருந்த அம்மா!”- ஈழ விடுதலைப் போராளி றியோ நிலவன்
“பெரு நினைவின் சிறுதுளிகள்” நூலில்.
1 comments:
நன்றி பிரபா
Post a Comment