skip to main | skip to sidebar

"மடத்துவாசல் பிள்ளையாரடி"

"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்"

Pages

  • Home

Sunday, August 08, 2021

ஈழத்து நாடக இயக்கக்காரர் க.பாலேந்திரா அகவை எழுபதில்


இன்று ஈழத்தின் முக்கியமானதொரு நாடக நெறியாளர் க.பாலேந்திரா அவர்களது 70 வது பிறந்த தினம். ஈழத்து மேடை நாடக இயக்கத்தின் மிக முக்கியமானதொரு செயற்பாடாக 48 ஆண்டுகளாக நிலைத்திருப்பவர். தமிழ் அவைக்காற்றுக் கழகத்தை நிறுவிய வழியே இந்த நாடக இயக்கம் இன்று புலம் பெயர் சமூகத்திலும் அவர் குழுவோடு பல்வேறு நாடுகளுக்கும் சென்று நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கின்றது.
தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் 30 வது ஆண்டு நிறைவில் திரு, பாலேந்திரா அவர்களை ஒரு சிறப்பு வானொலி நேர்காணல் கண்டிருந்திருந்தேன். ஆனால் அதனைத் தற்சமயம் எடுக்க முடியாத சூழல்.
இருந்த போதும், கனடா தாய்வீடு பத்திரிகையில் செப்டெம்பர் 2010 இல் ப.ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் பகிர்ந்த இடுகையை இன்று மீள் பகிர்வாகத் தருகின்றேன்.






“க.பாலேந்திரா – ஒரு நாடக இயக்கம்” – ப.ஶ்ரீஸ்கந்தன்
தமிழ் நாடகம் உலகத் தரத்திற்கு உயர வேண்டும் என்றும், தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும் என்ற ரீதியிலும் தொடர்ச்சியாக நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றங்கள் செய்து வரும் ஒரு நாடக இயக்கம் க. பாலேந்திரா அவர்- களைப் பதிவு செய்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தன் கல்வி சார்ந்த பொறியியல் துறையில் முழு நேரத் தொழில் செய்துகொண்டு, எந்த அமைப்புகளிடமிருந்தும் நன்கொடை பெற்றுக் கொள்ளாமல், நாடகமே மூச்சாக இயங்கி, இத்தனை வருட காலம் இடைவிடாது நாட- கங்களை நிகழ்த்துவது உலகத் தமிழ் நாடக அரங்கில் நான் அறிந்தவரை இவர் ஒருவராகத் தான் இருக்க முடியும்.
யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாலேந்திராவிற்கு அங்கு வருடா வருடம் நிகழ்ந்து வரும் சுதேசிய விழா நாடகங்களே ஆரம்ப அனுபவங்களாக இருந்தன. ஆயினும், 1972 கட்டுப்பெத்தை பல்கலைக் களகத்தில் பயிலும் நாட்களில், பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான நுட்பம் சஞ்சிகையின் ஆசிரியராகவும், சங்கத் தலைவராகவும் இருந்தபோது கலைஞர்கள், அறிஞர் களுடன் ஏற்பட்ட தொடர்புகள் ஒரு சீரிய நாடகக் கலைப் பயணத்துக்கு அடிகோலின
இவரை, முதன் முதல் அறியச் செய்தது இவர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த சுகைர் ஹமீட் அவர்களின் ‘ஏணிப்படிகள்’ என்ற நாடகமாகும். அப்போதைய அரசியல் கூட்டணிகளின் எதிர் பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் குறியீட்டு முறையில் வெளிப்படுத்தியது. 01.07.1973ல் இராமகிருஷ்ண மண்டபத்தில் மேடையேறிய இந்நாடகம் 74ல் யாழ்ப்பாண தமிழாராய்ச்சி மாநாட்டிலும் மேடையேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
74ல் தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் அலெக்சி அபுசோவின் ‘பிச்சை வேண்டாம்’, மற்றும் ‘கந்தன்கருணை’ போன்ற நாடகங்- களில் பங்குகொண்ட இவர் கலைவிழா நாடகங்களாக ‘இவர்களுக்கு வேடிக்கை’, ‘கிரகங்கள் மாறுகின்றன’, ‘தூரத்து இடிமுழக்கம்’ போன்றவற்றின் பிரதிகளை ஆக்கி நெறியாள்- கையும் செய்திருந்தார். ஆயினும் 27.10.1976ல் கொழும்பு லயனல்வென்ற் அரங்கில் மேடையேறிய இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’ நாடகமே இவர் முதன்முதல் தயாரித்து நெறியாள்கை செய்த நாடகமாகும். இதில் இவரும் ஆனந்தராணி அவர்களும் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர்.
இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும், உலகில் ஈழத்தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் மேடையேறிய இந் நாடகம் 22.07.2010 அன்று கூத்துப்பட்டறை, மூன்றாம் அரங்கு ஆதரவில் சென்னையில் மேடை- யேறியது நினைவு கொள்ளத்தக்கது. இம் மேடையேற்றத்திலும் பாலேந்திரா. ஆனந்தராணி ஆகியோர் அதேபாத்திரங்களை ஏற்று நடித் தமை அவர்களது கலைவாழ்வின் அர்ப்பணிப்பைச் சிறப்பாகச் சொல்லும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், இலக்கிய மன்றங்கள் போன்றவற்றிற்காக நாடகங்களை மேடையேற்றி வந்த இவர், தொடர்ந்து நாடக இயக்கத்துக்கு ஒரு அமைப்புத் தேவையெனக் கருதி தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தை 1978இல் ஆரம்பித்தார். இதன் மூலமாக ஈழத்து, தமிழகத்து, மற்றும் இந்தியப் பிறமொழி நாடகாசிரியர்கள், மேலும் பல நல்ல மேற்குலக நாடகாசிரியர்களின் நாடகங்களையும் நேர்த்தியாக மேடையேற்றி வருகிறார்.
குறிப்பாக ஈழத்து நாடகாசிரியர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம், மாவை நித்தியானந்தன், சி.சிவசேகரம், சி.மௌனகுரு, தர்மு சிவராம், சேரன், செழியன், ச.வாசுதேவன் ஆகியோரின் நாடகங்களையும், தமிழக நாடகாசிரியர்கள் இந்திரா பார்த்தசாரதியின் ‘மழை’, ‘பசி’, ந.முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’, ‘சுவரொட்டிகள்’, ஞான ராஜசேகரனின் ‘மரபு’ அம்பையின் ‘ஆற்றைக்கடத்தல்’, மற்றும் பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரிஷ் கர்னாட்டின் ‘துக்ளக்’, ரஞ்சித்ராய் சௌத்திரியின் ‘பாரத தர்மம்’ போன்ற நாடகங்களை தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் மூலமாகத் தயாரித்து நெறிப்படுத்தியுள்ளர்.
இது தவிர, மொழிபெயர்ப்பு மற்றும் தழுவல் நாடகங்களாக டென்னசி வில்லியம்சின் ‘கண்ணாடி வார்ப்புகள்’, ரெக்டின் ‘யுகதர்மம்’, கார்சியா லோர்காவின் ‘ஒரு பாலை வீடு’, செக்கோவின் ‘சம்பந்தம்’, வஸ்லோ காவலின் ‘பிரத்தியேகக் காட்சி + தரிசனம்’, பெக்கற்றின் ‘எப்போ வருவாரோ’ ஏரியல் டோப்மனின் ‘மரணத்துள் வாழ்வு’, இயூன் ஐயனஸ்கோவின் ‘இடைவெளி’, ஹரோல் பின்டரின் ‘போகிற
வழிக்கு ஒன்று’ என்பவற்றை பாலேந்திரா தயாரித்து நெறியாள்கை செய்துள்ளார்.
பாலேந்திராவின் நாடகங்களில், மனித குலத்தின் பொது அவலங்களைச் சொல்லும் பிரெக்டின் ‘யுகதர்மம்’ என்ற நாடகம் யாழ்.கண்ணனின் இசையில் மிளிர்ந்த புதுமையான பாடல்களுடனும் மற்றும் கூத்துவகை ஆட்டத்துடனும் கூடியது. இந்நாடகம் 79 – 80 இல் இலங்கையில் மட்டும் 30 தடவைகள் மேடையேறியது.
‘இயக்கவிதி – 3’, ‘துக்ளக்’ ஆகிய நாடகங்கள் இலங்கை அரசின் தணிக்கைக்கு உள்ளாகின. ‘கண்ணாடி வர்ப்புகள்’ நாடகம் ஆறு நாடகங்- கள் என்ற நூல் அச்சுச் செலவிற்காக யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பகல், இரவுக் காட்சிகளாக சிறப்பான காட்சி அமைப்புடன் மேடையேறியது. ‘மழை’, ‘அரையும் குறையும்’, ‘கண்ணாடி வார்ப்புகள்’ இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது மட்டுமல்லாமல் ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகம் இலங்கை ரூபவாகினித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
83 ஆடிக்கலவரத்தின் பின்னர் இங்கிலாந்தில் குடியேறிய இவர் அந்நியச் சூழலில் வாழும் எமது சிறுவர்கள் தமது சுய அடையாளத்தை இனம் காணவும், தன்னம்பிக்கையுடன் ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்பவும், தமிழ் மொழியைச் சரளமாகப் பேசிப் பயிலவும் சிறுவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, தொடர்ச்சியாக சிறுவர் நாடகங்களை மேடையேற்றி வருகிறார். சி.மௌனகுருவின் ‘வேடரை உச்சிய வெள்ளைப்புறாக்கள்’ முதல் இவ்வருட நாடகவிழாவில் மேடை- யேறிய மாவையின் ‘இது ஒரு நாடகம்’ என்று சிறுவர் நாடகங்கள் தொடர்கின்றன.
பிரெக்ற் என்ற பிறமொழி நாடகாசிரியரை ‘யுகதர்மம்’ மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்- தது போல் பல தரமான பிறமொழி நாடகங்களை எமக்கு அனுபவமாக அறியத்தந்தார். எனினும் பாலேந்திரா சுயமொழி நாடகங்களையே அதிகமாக மேடையேற்றினார். மேலும் ஈழத்தவரின் போர்ச் சூழல் குறித்த ‘எரிகின்ற தேசம்’, ‘பாரத தர்மம்’, ‘துன்பக் கேணியிலே’, ‘பெயர்வு’, ‘போகிற வழிக்கு ஒன்று’, ‘மரணத்துள் வாழ்வு’ போன்றன பார்வையாளர்களை நெருடிய நாடகங்களாகும்.
இவரது தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நாடக விழாக்கள் இலங்கை, இலண்டன், நோர்வே, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ்- லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலும் இடம் பெற்றுள்ளன.
கொள்கை என்று எந்தக் குழுவுடனும் இணையாமல் சுதந்திரமாகவும், நேர்மையா- கவும், தனித்துவமாகவும் இயங்கி, எந்நாளும் நாடகத்துக்கான தேடலை யாசித்து நிற்கின்ற இந்தக் கலைஞனின் சக்தி அதீதமானது.
பாலேந்திராவின் ஆரம்ப நாடகமான ‘ஏணிப் படிகள்’ இலிருந்து பெரும்பாலான நாடகங்களை நேரிடையாகவும், பல சிறுவர் நாடகங்களை வீடியோவிலும் பார்த்தவன் என்ற ரீதியில் ஒரு குறிப்பைச் சுருக்கமாகச் சொல்லமுடியும். “இவரது நாடகங்கள் எனது மனவெளியில் என்றும் ஜீவிதமாக இருப்பவை”.
பாலேந்திராவின் நாடகங்களில் பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமான உறவு பலமாக இருந்து கொண்டிருக்கும். எப்போதும் ஒரு உயிர்நிலை பேணப்படும். ஒரு கணம் சரிந்தாலே வீழ்ந்து போகக் கூடிய “மழை” என்ற நாடகத்துடன் இரு மணி நேரமாக எங்களைக் கட்டிப்போட்டு வைப்பதை உதார- ணமாகக் குறிப்பிடலாம். ‘கண்ணாடி வார்புகள்’ - டொம், மழை – அண்ணன் பாத்திரங்கள் இவரது நடிப்புக்குப் புகழ் சேர்த்தவை. ஆயினும் ‘பசி’யில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இவரது நாடகங்களில் இசை, ஒளி என்பன முக்கிய பாத்திரங்களாக அமையும்.
‘முகமில்லாத மனிதர்கள்’, ‘யுகதர்மம்’ மற்றும் அனைத்துச் சிறுவர் நாடகங்களிலும் இசையும், பாடல்களும் நிறைந்து காணப்படும். ‘கண்ணாடி வார்ப்புகள்’ நாடகத்தின் பிற்பகுதியில் இவர் கையாண்ட ஒளி அமைப்பும், இளையோடிய இசையும் பார்வையாளர்களை அவ்விரு நாடகப்பாத்திரங்களின் உலகிற்கு அழைத்துச் சென்றதை மறக்கமுடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக மனிதநேயத்துடன் மனித அவலங்களைச் சொல்கிற, எமது வாழ்க்கை அனுபவங்களோடு ஒட்டியதான இவரது நாடகத் தெரிவுகள் பிரசித்தமானவை.
இவ்வாறு நாடகக் கலையின் சகல பக்கங்களிலும் ஆற்றல் பதித்த இந்த மாபெரும் கலைஞன் “நாடகம் என்பது கூட்டு முயற்சி. தனது துணைவியார் ஆனந்தராணி மற்றும் சக நடிகர்கள், இசைக் கலைஞர்கள், காட்சி அமைப்பு உதவியாளர்கள், நாடக ஆசிரியர்கள் என்பவர்களால் தான் தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் இயங்கமுடிகிறது” என்று சொல்லும் எளிமையான மனிதர். பழகுவதற்கு மென்மையானவர்.
பாலேந்திரா, அவரது நாடகங்கள், அவர் சார்ந்த கலைஞர்கள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். இப்பக்கத்தில் இவை மட்டுமே எனக்குச் சாத்தியமாயிற்று.
க.பாலேந்திரா நெறிப்படுத்திய நாடகங்கள்
இலங்கையில் (1-23) புலத்தில் (24-62)
01 இவர்களுக்கு வேடிக்கை 1974
02 கிரகங்கள் மாறுகின்றன 1974
03 தூரத்து இடி முழக்கம் 1976
04 மழை 1976
05 பலி 1978
06 நட்சத்திரவாசி 1978
07 ஒரு யுகத்தின் விம்மல் 1978
08 கண்ணாடி வார்ப்புகள் 1978
09 பசி 1978
10 புதிய உலகம் பழைய இருவர் 1978
11 ஒரு பாலை வீடு 1979
12 இடைவெளி 1979
13 யுகதர்மம் 1979
14 நாற்காலிக்காரர் 1979
15 முகமில்லாத மனிதர்கள் 1980
16 திக்கு தெரியாத காட்டில் 1980
17 இயக்க விதி -3 1980
18 சுவரொடடி; கள் 1980
19 சம்பந்தம் 1980
20 அரையும் குறையும் 1981
21 மூன்று பண்டிதர்களும் காலம்-
சென்ற ஒரு சிங்கமும் 1981
22 துக்ளக் 1982
23 மரபு 1982
24 வார்த்தையில்லா நாடகம் 1983
25 பார்வையாளர்கள் 1985
26 எரிகின்ற எங்கள் தேசம் 1986
27 வேடரை உச்சிய-
வெள்ளைப்புறாக்கள் 1991
28 பாரத தர்மம் 1991
29 பிரத்தியேகக்காட்சி 1991
30 தரிசனம் 1991
31 தப்பி வந்த தாடி ஆடு 1992
32 துன்பக் கேணியிலே 1992
33 நம்மைப் பிடித்த பிசாசுகள் 1993
34 இரு துயரங்கள் 1993
35 ஐயா இலெக்சன் கேட்கிறார் 1994
36 போகிற வழிக்கு ஒன்று 1994
37 மலைகளை-
அகற்றிய மூடக்கிழவன் 1996
38 ஆற்றைக் கடத்தல் 1996
39 எப்போ வருவாரோ 1997
40 அயலார் தீர்ப்பு 1997
41 அவசரக்காரர்கள் 1997
42 மெய்ச்சுடரே 1997
43 பெயர்வு 1998
44 ஒரு பயணத்தின் கதை 1998
45 பரமார்த்த குருவும் சீடர்களும் 1999
46 பார்வைக் கோளாறு 2000
47 காத்திருப்பு 2001
48 வேருக்குள் பெய்யும் மழை 2002
49 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 2003
50 அவன்.அவள் 2003
51 திக்கற்ற ஓலம் 2003
52 பெருங்கதையாடல் 2004
53 அரசனின் புத்தாடை 2004
54 சர்ச்சை 2006
55 மலைகள் வழிமறித்தால் 2006
56 பாவி 2007
57 எல்லாம் தெரிந்தவர்கள் 2008
58 மரணத்துள் வாழ்வு 2009
59 படிக்க ஒரு பாடம் 2009
60 ஒற்றுமை 2010
61 இது ஒரு நாடகம் 2010
62 தர்மம் 2010
மேலதிக வாசிப்புக்கு
மல்லிகை அட்டைப்பட ஆளுமை
ஈழத்து தீவிர நாடகத்துறையின் கணிப்புக்குரிய நெறியாளர் திரு.க. பாலேந்திரா
https://noolaham.org/.../%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0...
நுட்பம் 1973
https://noolaham.org/.../%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0...
நாடகவிழா 1991.06.22
https://noolaham.org/.../%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0...
யுகதர்மம்: நாடகமும் பதிவுகளும்
https://noolaham.org/.../%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0...
நன்றி :
ப.ஶ்ரீஸ்கந்தன் , தாய்வீடு பத்திரிகை (கனடா)
நூலகம்.கொம்.
க.பாலேந்திரா ஃபேஸ்புக் தளம் (படங்கள்)
ஈழத்து நாடக நெறியாளர் திரு. க.பாலேந்திரா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Posted by கானா பிரபா at 12:24 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Thursday, August 05, 2021

கின்னஸ் சாதனை படைத்த ஈழத்தமிழன் “ஆழிக்குமரன்” ஆனந்தன்


வல்வெட்டித்துறை மண் தம் தேசம் காத்த வீர மறவர்களை மட்டுமல்ல, கல்விமான்கள், விளையாட்டு வீர்ர்கள் பலரையும் ஈன்றெடுத்த பூமி அது.

அப்படியாகப்பட்டதொரு வீரனாக விளைந்தவர் தான் ஆழிக்குமரன் ஆனந்தன். இவர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் சேவையில் பணிபுரிந்த விவேகானந்தனின் மகன் வி.எஸ்.குமார் ஆனந்தன். ஆனந்தன் மனைவி பெயர் மானில், ராஜன் மற்றும் ராஜேஷ் என்று இரண்டு மகன்கள்.





உலக சாதனை கொண்ட இந்த வீரன் தன் சிறு பிராயத்தில் இளம் பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். ஆனால் அவரின் பின்னாளைய சாதனைக்கு அதுவொன்றும் தடைக்கல் அல்ல.

ஆனந்தன் உலக சாதனைப் பதிவேட்டில் தன் பெயரைப் பொறிக்கும் முன்பே கல்வியிலும் ஆளுமைப்பட்டவராகத் துலங்கினார். 

அறிவியலில் B.Sc (லண்டன்),  சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் LL.B (இலங்கை) என்று பட்டப் படிப்புத் தேர்ச்சி கண்டு தன்னை ஒரு சட்டவாளராக உருவாக்கிய பின்னர் தான் தன்னுடைய சாதனைப் பயணத்தின் வீச்சை ஆழப்படுத்தினார்.

நீச்சல் உலகில் இவர் தன் சாதனைத் தடத்தைப் பதிய வைத்தது தனது 28 வது வயதில். 

அப்போது 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணை வழியே இலங்கையில் மன்னாரில்  இருந்து  தொடங்கி இந்தியாவின் தனுஷ்கோடி தொட்டு மீண்டும் மன்னாரை முத்தமிட்டார். அப்போது வெறும் 51 மணி நேரத்திலேயே இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார். இந்தச் சாதனையின் அடையாளமாக “ஆழிக்குமரன்” என்ற பட்டத்தை வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஈழத்தின் மூத்த ஊடக ஆளுமை எஸ்.டி.சிவநாயகம் வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் அதுவே அவரின் அடையாளமுமாய் ஆகிப் போனது.

இவரின் தொடர் சாதனைப் பயணத்தில் 

டிசம்பர் 1978 இல் 

128 மணி நேரம் ட்விஸ்ட் டான்ஸ் (Twist Dance)

மே 1979 இல்

187 மணிநேரம், 1487 மைல் தூரம் இடைவிடாத சைக்கிள் ஓட்டுதல் (Non-stop cycling)

மே 1979 இல்

33 மணி நேரம் ஒரு காலில் சமநிலைப்படுத்துதல் (Balancing on one foot)

டிசம்பர் 1979 இல்

136 மணி நேரம் Ball punching செய்தல்

மே 1980 இல்

இரண்டு நிமிடங்களில் 165 தடவை Sit up செய்தல்

டிசம்பர் 1980 இல்.

9100 முறை High Kicks செய்தல்

ஆகஸ்ட் 1981 இல் 

இடை விடா நடைப் பயணமாக 159 மணிநேரம், 296 மைல் தூரம்

ஆகஸ்ட் 1981 இல், 

சென்னை அண்ணா நீச்சல் குளத்தில் 80 மணி நேரம் Water-Treading 

அவர் ஒரு மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தைத் துரதிஷ்டவசமாகச் சந்தித்தார். ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்; பின்னர் அவர் இன்னும் ஆறு மாதங்கள் ஊன்றுகோலில் இருக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும், அவர் Billiards Cue-Levelling மற்றும் மோட்டார் சைக்கிள் வேக ஓட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டார். 

1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி சோகம் ஏற்பட்டது. இடை விடாச் சாதனை தாகம் கொண்ட வீரனின் வாழ்க்கையில் முற்றுப்புள்ளி போட்ட தினம் அது. 

இங்கிலாந்தின் தென்கிழக்கு முனையான Dover இலிருந்து பிரான்ஸின் தென் முனையமான Cap Gris-Nez வரையான (சுமார் 30 மைல்கள்) ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற போது

அவர் பாதி வழியில் சரிந்தார். சாதகமற்ற நீரோட்டங்கள் மற்றும் ஆறு மணி நேர வீர எதிர்ப்பிற்குப் பிறகு உலக சாதனை வீரனின் முடிவுரை எழுதப்பட்டது. 

“இந்தக் கடலின் தன்மைக்கேற்ப என்னைத் தயார்படுத்தக் பயிற்சிக் காலம் போதவில்லை” 

என்ற கவலையை உதிர்த்தே இவ்வுலகில் இருந்து விடைபெற்றார்.

ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இன்று 06.08.2021 “ஆழிக்குமரன்” ஆனந்தன் அவர்களது 37 வது நினைவாண்டாகும். (25 மே 1943 - 6 ஆகஸ்ட் 1984)

ஆழிக்குமரன் ஆனந்தன் குறித்து வீடியோஸ்பதி குரல் பகிர்வு

https://www.youtube.com/watch?v=FQBiTkeycT8





கானா பிரபா

மூலத் தகவல்கள் நன்றி : 

Dictionary of Biography of the Tamils of Ceylon (Published January 1997) (ஈழத்து நூலகம்.கொம்)

Compiled by: S.Arumugam

with assistance from M.Theagarajah and C.J.T.Thamotheran

ஈழ நாடு பத்திரிகை (08.08.1984) ஈழத்து நூலகம்.கொம்

படங்கள் நன்றி : eLanka.com.au


Posted by கானா பிரபா at 11:53 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Wednesday, August 04, 2021

ஈழத்து இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வி




இன்று ஈழத்தின் மூத்த இலக்கியப் படைப்பாளி தாமரைச்செல்வி (ரதிதேவி கந்தசாமி) அவர்களின் பிறந்த நாள் ஆகும்.

இவர் 1973 ஆம் ஆண்டிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், ஆறு நாவல்களும், மூன்று குறு நாவலகளும் எழுதியிருக்கின்றார்.

ஏழாவதாக இவர் படைத்த “உயிர் வாசம்” என்ற நாவல் அவுஸ்திரேலியாவுக்குப் படகு மூலம் வந்த ஈழ ஏதிலியர்களின் அவலங்களைச் சுமக்கும் படைப்பாகும். இது 2020 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் கே.பி.பாலசந்தர் நினைவு விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வன்னி மண்ணின் பிறந்த அந்த மக்களின் வாழ்வியலோடு, ஈழத்துச் சமூகத்தின் பல்வேறு சமூகச் சிக்கல்களைத் தன் எழுத்துகளில் கொண்டு வந்த விதத்தில் இவரின் படைப்புகள் அந்தந்தக் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்கின்றன.








தாமரைச் செல்வி எனும் வன்னியின் மூத்த பெண் படைப்பாளி – அகளங்கன்

https://vanakkamlondon.com/literature/2021/07/121424/


எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களின் தேர்ந்தெடுத்த படைப்புகள் ஈழத்து நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.


https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF



ஞானம் சஞ்சிகை அட்டைப்பட அதிதி தாமரைச் செல்வி

https://noolaham.net/project/848/84769/84769.pdf


எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உரித்தாகுக.

கானா பிரபா
Posted by கானா பிரபா at 12:30 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook

Sunday, August 01, 2021

பவள விழாக் காணும் ஈழத்து மூத்த படைப்பாளி குப்பிழான் ஐ.சண்முகன்


இன்று (01.08.2021) எங்கள் ஈழத்துச் சமூகத்தின் முது பெரும் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் தனது 75 வது அகவையில் காலடி வைக்கின்றார்.

ஈழத்து இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, பத்தி எழுத்துகள் என்று பன்முகப்பட்ட தளத்தில் தன் எழுத்துகளைத் தொடர்ந்து வருகின்றார்.

வீடியோஸ்பதி வழியாக குப்பிழான் ஐ.சண்முகன் குறித்த குறு அறிமுகப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=y6OEZUWsYjs

ஆகஸ்ட் 1, 1946 ஆம் ஆண்டு ஈழத்தின் குப்பிழான், சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த இவர் தன் கல்வியை குப்பிழான் விக்னேஸ்வரா வித்தியாசாலை, புன்னாலைக்கட்டுவன் மெ.மி.ஆங்கிலப்பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கற்று இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் ஆளானார்.

உயர்தர வகுப்புகளில் பொருளியல், தமிழ் ஆகிய பாடங்களிலும், இடை நிலை வகுப்புகளில் சமூகக் கல்வி, சமய நெறி ஆகிய பாடங்களிலும் சேவையாற்றியவர்.
கலாபூஷணம் விருது, ஆளுநர் விருது, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சங்கச் சான்றோன் விருது உள்ளிட்ட விருது அங்கீகாரங்களைக் கொண்டவர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும், பிரபஞ்ச சுருதி என்ற கவிதைத் தொகுதியையும், அறிமுகங்கள், விமர்சனங்கள், குறிப்புகள் என்ற பத்தி எழுத்து நூலையும் வெளியிட்டுள்ளார். (ஜீவநதி பெப்ரவரி 2019)



இவரது சாதாரணங்களும் அசாதாரணகங்களும் சிறுகதைத் தொகுப்பில் இவர் குறித்து எழுத்தாளர் சிலரது குறிப்புகள் குப்பிழான் ஐ.சண்முகனின் எழுத்தின் வீச்சின் பரிமாணத்தைக் காட்டும் கோடுகளாக,

எழுத்தாளர் குந்தவை

இளைஞர்களின் மன அவசங்கள், அவர்களால் வெளிப்படுத்தி உணர்த்திக் காட்ட முடியாத சோகங்கள், எதிர்பார்ப்புகள் இவற் றிஞல் அவர்களிடையே எழும் நடைமுறைக்கு ஒத்துப்போகாத பிடிப்பற்ற தன்மை, இவற்றை அழகுணர்ச்சியுடன் சித்தரிக்கும்
கலைஞர்.

எழுத்தாளர் அ.யேசுராசா

இவரது பாத்திரங்கள் எழுத்தாளனின் எவ்வித தலையீடுமின்றி தங்களைத் தாங்களே இயக்க வைக்கின்றன.
கலையுலகின் நவீன திரைப்படங்களின் தாக்கத்தை சண்முக னின் பிற்பட்ட காலக் கதைகளில் காணலாம். 'பளிச்', பளிச்சென
சணமுகன் கதையை கடத்திச் செல்லும் பாணி அலாதியானது.

எழுத்தாளர் மு. புஸ்பராஜன்

சண்முகன் என்ற பெயர் குறிப்பிடப்படும் போதெல்லாம் இவரது அழகிய, அலாதியான அந்த நடை கூடவே எழுவதைத் தவிர்க்க முடியாது. இவர் கதைகளில் சங்கீதத்தின் இனிய ஓசை பல்வேறு விதங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் அசோகமித்திரன்

இன்ப வேதனையின் இழையொன்று எல்லாக் கதைகளிலும் தென்படுகிறது.


ஈழத்து ஆவணகத்தில் குப்பிழான் ஐ.சண்முகன் அவர்களது வாய்மொழி வரலாறு

http://aavanaham.org/islandora/object/noolaham%3A21221?fbclid=IwAR1NPaxvYQhYBaomIteSXDDW2dgOs8xNyiMuPr2MnxFeuHYgUS8mzZNdzwI







ஈழத்து இணையத்தில் இவரது படைப்புகளை வாசிக்க


குப்பிழான் ஐ.சண்முகன் பேட்டி (பேட்டி கண்டவர் வெற்றி துஷ்யந்தன்)
ஜீவநதி பெப்ரவரி 2019 (பக்கம் 59)

https://noolaham.net/project/718/71733/71733.pdf


கோடுகளும் கோலங்களும்



https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D


சாதாரணங்களும் அசாதாரணங்களும்


https://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D



கானா பிரபா



Posted by கானா பிரபா at 2:27 PM 0 comments Email This BlogThis! Share to X Share to Facebook
Newer Posts Older Posts Home

About Me

My Photo
கானா பிரபா
ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்
View my complete profile

Blog Archive

  • ►  2025 (10)
    • ►  June 2025 (1)
    • ►  May 2025 (2)
    • ►  April 2025 (1)
    • ►  March 2025 (2)
    • ►  February 2025 (3)
    • ►  January 2025 (1)
  • ►  2024 (25)
    • ►  December 2024 (3)
    • ►  November 2024 (1)
    • ►  October 2024 (1)
    • ►  September 2024 (1)
    • ►  August 2024 (1)
    • ►  July 2024 (4)
    • ►  June 2024 (3)
    • ►  May 2024 (1)
    • ►  April 2024 (2)
    • ►  March 2024 (3)
    • ►  February 2024 (3)
    • ►  January 2024 (2)
  • ►  2023 (19)
    • ►  December 2023 (1)
    • ►  November 2023 (1)
    • ►  October 2023 (4)
    • ►  September 2023 (1)
    • ►  August 2023 (1)
    • ►  July 2023 (2)
    • ►  June 2023 (1)
    • ►  May 2023 (1)
    • ►  April 2023 (3)
    • ►  March 2023 (2)
    • ►  February 2023 (1)
    • ►  January 2023 (1)
  • ►  2022 (25)
    • ►  December 2022 (2)
    • ►  November 2022 (2)
    • ►  October 2022 (3)
    • ►  September 2022 (2)
    • ►  August 2022 (1)
    • ►  July 2022 (2)
    • ►  June 2022 (1)
    • ►  May 2022 (3)
    • ►  April 2022 (1)
    • ►  March 2022 (3)
    • ►  February 2022 (3)
    • ►  January 2022 (2)
  • ▼  2021 (33)
    • ►  December 2021 (4)
    • ►  November 2021 (2)
    • ►  October 2021 (5)
    • ►  September 2021 (2)
    • ▼  August 2021 (4)
      • ஈழத்து நாடக இயக்கக்காரர் க.பாலேந்திரா அகவை எழுபதில்
      • கின்னஸ் சாதனை படைத்த ஈழத்தமிழன் “ஆழிக்குமரன்” ஆனந்தன்
      • ஈழத்து இலக்கியப் படைப்பாளி தாமரைச் செல்வி
      • பவள விழாக் காணும் ஈழத்து மூத்த படைப்பாளி குப்பிழா...
    • ►  July 2021 (1)
    • ►  June 2021 (5)
    • ►  May 2021 (1)
    • ►  April 2021 (3)
    • ►  March 2021 (2)
    • ►  February 2021 (1)
    • ►  January 2021 (3)
  • ►  2020 (28)
    • ►  December 2020 (4)
    • ►  November 2020 (3)
    • ►  October 2020 (1)
    • ►  September 2020 (1)
    • ►  August 2020 (2)
    • ►  July 2020 (3)
    • ►  June 2020 (3)
    • ►  May 2020 (4)
    • ►  April 2020 (3)
    • ►  March 2020 (2)
    • ►  February 2020 (2)
  • ►  2019 (19)
    • ►  December 2019 (3)
    • ►  November 2019 (1)
    • ►  October 2019 (1)
    • ►  August 2019 (1)
    • ►  July 2019 (3)
    • ►  June 2019 (2)
    • ►  May 2019 (2)
    • ►  April 2019 (1)
    • ►  March 2019 (2)
    • ►  February 2019 (2)
    • ►  January 2019 (1)
  • ►  2018 (25)
    • ►  December 2018 (2)
    • ►  November 2018 (1)
    • ►  October 2018 (5)
    • ►  September 2018 (1)
    • ►  August 2018 (3)
    • ►  July 2018 (1)
    • ►  June 2018 (3)
    • ►  May 2018 (1)
    • ►  April 2018 (1)
    • ►  March 2018 (2)
    • ►  February 2018 (3)
    • ►  January 2018 (2)
  • ►  2017 (20)
    • ►  December 2017 (2)
    • ►  November 2017 (3)
    • ►  October 2017 (2)
    • ►  September 2017 (2)
    • ►  August 2017 (1)
    • ►  July 2017 (1)
    • ►  June 2017 (1)
    • ►  May 2017 (3)
    • ►  April 2017 (1)
    • ►  March 2017 (1)
    • ►  February 2017 (2)
    • ►  January 2017 (1)
  • ►  2016 (18)
    • ►  December 2016 (2)
    • ►  November 2016 (3)
    • ►  October 2016 (1)
    • ►  September 2016 (1)
    • ►  August 2016 (1)
    • ►  July 2016 (2)
    • ►  June 2016 (3)
    • ►  May 2016 (1)
    • ►  April 2016 (1)
    • ►  March 2016 (1)
    • ►  February 2016 (1)
    • ►  January 2016 (1)
  • ►  2015 (20)
    • ►  December 2015 (3)
    • ►  November 2015 (1)
    • ►  October 2015 (2)
    • ►  September 2015 (1)
    • ►  August 2015 (1)
    • ►  July 2015 (2)
    • ►  June 2015 (1)
    • ►  May 2015 (1)
    • ►  April 2015 (3)
    • ►  March 2015 (1)
    • ►  February 2015 (3)
    • ►  January 2015 (1)
  • ►  2014 (22)
    • ►  December 2014 (3)
    • ►  November 2014 (2)
    • ►  October 2014 (2)
    • ►  September 2014 (1)
    • ►  August 2014 (3)
    • ►  July 2014 (2)
    • ►  June 2014 (1)
    • ►  May 2014 (1)
    • ►  April 2014 (1)
    • ►  March 2014 (1)
    • ►  February 2014 (2)
    • ►  January 2014 (3)
  • ►  2013 (16)
    • ►  December 2013 (2)
    • ►  November 2013 (1)
    • ►  October 2013 (2)
    • ►  September 2013 (1)
    • ►  August 2013 (1)
    • ►  July 2013 (1)
    • ►  June 2013 (1)
    • ►  May 2013 (2)
    • ►  April 2013 (1)
    • ►  March 2013 (1)
    • ►  February 2013 (1)
    • ►  January 2013 (2)
  • ►  2012 (16)
    • ►  December 2012 (2)
    • ►  November 2012 (1)
    • ►  October 2012 (1)
    • ►  September 2012 (1)
    • ►  August 2012 (1)
    • ►  July 2012 (1)
    • ►  June 2012 (2)
    • ►  May 2012 (1)
    • ►  April 2012 (1)
    • ►  March 2012 (2)
    • ►  February 2012 (1)
    • ►  January 2012 (2)
  • ►  2011 (26)
    • ►  December 2011 (3)
    • ►  November 2011 (2)
    • ►  October 2011 (1)
    • ►  September 2011 (1)
    • ►  August 2011 (1)
    • ►  July 2011 (3)
    • ►  June 2011 (5)
    • ►  May 2011 (1)
    • ►  April 2011 (2)
    • ►  March 2011 (2)
    • ►  February 2011 (1)
    • ►  January 2011 (4)
  • ►  2010 (29)
    • ►  December 2010 (2)
    • ►  November 2010 (2)
    • ►  October 2010 (2)
    • ►  September 2010 (4)
    • ►  August 2010 (6)
    • ►  July 2010 (2)
    • ►  June 2010 (1)
    • ►  May 2010 (2)
    • ►  April 2010 (3)
    • ►  March 2010 (1)
    • ►  February 2010 (2)
    • ►  January 2010 (2)
  • ►  2009 (28)
    • ►  December 2009 (2)
    • ►  November 2009 (3)
    • ►  October 2009 (3)
    • ►  September 2009 (1)
    • ►  August 2009 (2)
    • ►  July 2009 (2)
    • ►  June 2009 (4)
    • ►  May 2009 (3)
    • ►  April 2009 (2)
    • ►  March 2009 (2)
    • ►  February 2009 (1)
    • ►  January 2009 (3)
  • ►  2008 (30)
    • ►  December 2008 (4)
    • ►  November 2008 (3)
    • ►  October 2008 (2)
    • ►  September 2008 (3)
    • ►  August 2008 (1)
    • ►  July 2008 (2)
    • ►  June 2008 (3)
    • ►  May 2008 (2)
    • ►  April 2008 (3)
    • ►  March 2008 (1)
    • ►  February 2008 (1)
    • ►  January 2008 (5)
  • ►  2007 (53)
    • ►  December 2007 (1)
    • ►  November 2007 (3)
    • ►  October 2007 (2)
    • ►  September 2007 (14)
    • ►  August 2007 (16)
    • ►  July 2007 (2)
    • ►  June 2007 (2)
    • ►  May 2007 (1)
    • ►  April 2007 (4)
    • ►  March 2007 (2)
    • ►  February 2007 (4)
    • ►  January 2007 (2)
  • ►  2006 (35)
    • ►  December 2006 (3)
    • ►  November 2006 (1)
    • ►  October 2006 (3)
    • ►  September 2006 (3)
    • ►  August 2006 (1)
    • ►  July 2006 (13)
    • ►  June 2006 (1)
    • ►  May 2006 (3)
    • ►  April 2006 (1)
    • ►  March 2006 (2)
    • ►  February 2006 (2)
    • ►  January 2006 (2)
  • ►  2005 (4)
    • ►  December 2005 (4)

Followers

Powered by Blogger.

கண்காணிப்புக்குழு

eXTReMe Tracker

Popular Posts

  • "அண்ணை றைற்"
    கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...
  • திரையில் புகுந்த கதைகள்
    "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல்...
  • நான் உங்கள் ரசிகன்
    முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, இன...
  • வாடைக்காற்று
    செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்...
  • வலைப்பதிவில் ஒரு வருஷம்
    தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமிழ்...
  • வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்
    இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...
  • சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!
    இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...
  • என் இனிய மாம்பழமே....!
    பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ...
  • மேளச்சமா...!
    "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...
  • அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை - சிறுவர் இலக்கிய உலகில் ஓர் புத்தொளி
    சில வாரம் முன் வலையுலகத்தை மேய்ந்த போது திடீரென்று கண்ணில் பட்டது அறிந்திரன் சிறுவர் சஞ்சிகை பற்றிய ஒரு அறிமுகம். அதைக் கண்டதும் என் பால்ய ந...

Social Icons

Featured Posts

 
Copyright (c) 2010 "மடத்துவாசல் பிள்ளையாரடி". Designed for Video Games
Download Christmas photos, Public Liability Insurance, Premium Themes