ஶ்ரீ மாஸ்டரிடம் CCA tuition centre இல் படிக்கும் போது வகுப்பு இடைவேளையில் பக்கத்தில் இருக்கும் லிங்கன் கூல்பாருக்குப் போய் ஒரு சர்பத், இரண்டு றோல்ஸ் சாப்பிடுவோம்.
ஒரு காலத்தில் சுபாஸ் கபே, கல்யாணி கிறீம் ஹவுஸ் வைத்திருந்த இடத்தை 90 களில் ராஜபோகமாக வைத்திருந்தது லிங்கன் தான்.
கல்லாப் பெட்டியில் உரிமையாளர் வெள்ளை வெளேரென்று முகப் பொலிவோடு இருப்பார்.
இப்போதும் தாயகம் போனால் கஸ்தூரியார் வீதியில் இருக்கும் கடையிலும், வெலிங்டன் சந்திக் கடையிலும் ஒரு ஸ்பெஷல் ஐஸ்கிறீம் வாங்கிச் சாப்பிடாட்டி ஆவல் அடங்காது எனக்கு.
ஊர் நினைவுகளுக்காக லிங்கனையும் படம் எடுப்பேன். 1971 இல் நிறுவப்பட்டு ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் அது.
லிங்கன் உரிமையாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும் 🙏


0 comments:
Post a Comment