
வானொலி கேட்கும் அனுபவம் என்பது தொட்டிலில் இருந்து என் சுடுகாடு வரை ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு வடிவத்தில் இருக்கும் போல. என் பதின்ம வயசுக்காலம் வரையான வானொலி கேட்பு அனுபவங்களை முன்னர் ஆகாச வாணியும் விவித் பாரதியும்....! என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது கட்ட அனுபவத்தில் நானும் ஒரு ஒலிபரப்பாளனாக, நிகழ்ச்சித்தயாரிப்பாளனாகவும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. கிட்டத்தட்ட 12 வருஷங்கள் கடந்த ஒலிபரப்பு அனுபவங்கள் சுகமும் சவாலும் நிறைந்த கலவையாகத் தான் பயணிக்கிறது. அது ஒருபுறமிருக்க, வானொலி நேயராகத் தொடரும் பயணத்தின் இன்னொரு பரிமாணத்தைத் தான் இங்கே சொல்ல வந்துள்ளேன். அதுதான் இணையவானொலிகள் என்றதொரு பரிமாணம்.
இணைய வானொலிகளில் தமிழ்ச்சேவை செய்து வரும் வானொலிகள் பல இன்னும் இந்த செல்பேசியூடான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டவரை THR ராகாவின் ஒலிபரப்பின் ஒலித்துல்லியம் மகா அருமை. சிங்கப்பூர் வானொலியையும் முதலிடத்தில் சேர்த்துக் கொள்வேன் ஆனால் இடையிடையே வரும் மக்கரை சரிசெய்து

இப்போதெல்லாம் செல்பேசி நிறுவனங்கள் செல்போனில் பாவிக்கும் இணையப் பாவனையைத் தாராளமாக்கியிருக்கின்றன. எனவே அதிக கட்டணம் ஆகும் என்றெல்லாம் பயந்து பயந்து வானொலியைக் கேட்க வேண்டிய காலமும் மெல்ல மறைகிறது.
காதுக்குள்ளே இன்ரநெற் றேடியோவைக் கேட்டுக் கொண்டே பதிவு எழுதுவதும் கூடச் சுகம் சுகமே... ;-)