Pages

Monday, August 10, 2026

வாகரைவாணன் விண்ணேகினார்

வாகரைவாணன் விண்ணேகினார்

கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி வாகரைவாணன் (சந்தியாப்பிள்ளை அரியரத்தினம்) தனது 85 ஆவது வயதில் இன்று விண்ணேகினார்.

டிசெம்பர் 22, 1941 ஆம் ஆண்டில் பிறந்த இவர் புனித பத்திரிசியார் கல்லூரியில் (1982 – 1996) ஆசிரியராகச் சேவை அளித்தவர்.

தன்னுடைய 15 ஆவது வயதில் 1956 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியவர் 42 நூல்களை ஆக்கியளித்துள்ளார்.

தமிழ், ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர்.

கவிதை, நாடகம், ஆய்வுக் கட்டுரை, சிறுவர் இலக்கியம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என்று தன் இலக்கியப் பணியை விசாலமாக்கிக் கொண்டவர்.

இலங்கை அரசின் இலக்கிய விருது (சின்னச் சின்னப் பூக்கள்), யாழ் இலக்கியப் பேரவையின் விருதுகள் இரண்டு (அருளாளர் அந்தோனியார் மற்றும் பாலர் தமிழ்ப்பாட்டு ) எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பு (கிழக்கிலங்கைத் தமிழகம்) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர்.

வாகரைவாணன் எழுதிய நூல்களில் சில

வாகரை ஒரு வரலாற்றுப்பார்வை

தமிழ் மண் மட்டக்களப்பு

மட்டக்களப்புக் காவியம்

கிழக்கிலங்கைத் தமிழகம் 

பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்

பாலர் தமிழ்ப்பாட்டு

புதுக்கவிதைப் புத்தகம்

விபுலாந்தம்

தமிழ்ப் பாவை (நெடும் பாடல்)

தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்

வாகரை வாணனின் ஆய்வுக் கட்டுரைகள்

நந்திக்கொடி

இனிக்குந் தமிழ்

இன்னாசியார் காவியம்

இன்ரநெற் தமிழ் 2000 (ஆய்வுரைத் தொகுப்பு)

பனிச்சங்கேணி அரசி

கிறிஸ்து காவியம்

கிறிஸ்து தத்துவம்

சமயம் - சில சிந்தனைகள்

சின்னச் சின்னப் பூக்கள் (மணம் கமிழும் மழலைத் தமிழ்ப்பாட்டு)

நீ வா நிலாவே (மழலைக் கவிதைகள்)

தமிழ்ப்பாவை தைப்பாவை

My Country

Pros and peotry – Swami Vipulananthar

அரசி உலகநாச்சியார்

ஒரு பூ மலர்கின்றது

கடற்கரைப் பூக்கள்

வாகரை வாணன் குறித்த விரிவான பகிர்வைக் காண

வாகரையின் வாணன் 

https://noolaham.net/project/1119/111824/111824.pdf

நன்றி : வாகரைவாணன் ஃபேஸ்புக் தளம்

வாகரையின் வாணன் 

நூலகம் தளம்

நமது ஈழத்துப் படைப்பாளி வாகரைவாணன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment