Pages

Monday, April 08, 2024

ஈழத்தின் பிரபல வயலின் மேதை “சுருதி வேந்தன்" அம்பலவாணர் ஜெயராமன் அவர்கள் விண்ணேகினார் 🙏

ஜெயராமன், அம்பலவாணர் (பிறப்பு 29.08.1959 ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலவாணர். இவர் யாழ்ப்பாணம் கலட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றார். தனது ஒன்பதாவது வயதிலிருந்து பிரபல வயலின் வித்துவான் எஸ். சர்வேஸ்வர சர்மாவிடம் முறைப்படி வயலின் இசையைக் கற்றுக்கொண்டார். வட இலங்கை சங்கீத சபைப் பாடத்திட்டத்திற்கு அமைய ஆசிரியர் தரம் வரை வயலின் இசையைப் பயின்றுள்ளார். இவரது முதலாவது தனி வயலின் இசைக் கச்சேரி வண்ணை ஶ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் பன்னிரண்டு வயதில் அரங்கேறியது.



வயலின் மேதை அமரர் உ. இராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து 1981 - 1983 வரை இலங்கையின் பல்வேறு இடங்களிலும் வயலின் வாசித்துள்ளதோடு ஆலயங்கள், கலைவிழாக்கள், இசை நிகழ்வுகள், திருமண நிகழ்வுகள், நடன நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் எனப் பல நிகழ்ச்சிகளில் வயலின் இசையைப் பக்க வாத்தியமாக இசைத்து வந்தவர்.

இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் அமைச்சு 2003 ஆம் ஆண்டு இரண்டாவது உலக மகாநாட்டு நிகழ்வின்போது இவரைப் பாராட்டிச் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் கௌரவித்துள்ளது. இவருக்கு இசைஞானசுரபி என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

(தகவல் குறிப்புகள் நன்றி : ஈழத்து நூலகம் தளம்)

ஈழத்துப் போர்க்கால இசை இலக்கியங்களிலும், கதாப்பிரசங்க ஒலியிசை வட்டுகளிலும் ஜெயராமன் அவர்கள் தம் வாத்திய இசையாய் வாழ்ந்து கொண்டிருப்பார்.

கானா பிரபா

08.04.2024

No comments:

Post a Comment