Pages

Friday, May 20, 2022

செம்பியன் செல்வன்


இன்று ஈழத்தின் இலக்கியப் படைப்பாளி செம்பியன் செல்வன் அவர்களது 17 வது நினைவாண்டாகும்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் செழுமையான படைப்புகள் வர வேண்டும் என்ற சிந்தனையும், ஈழத் தமிழரது சுய நிர்ணயப் போராட்டத்தில் சமரசமில்லாத போக்கும் கொண்டவர் என்பதை அவரை எட்ட நின்று தரிசித்து உணர்ந்திருக்கிறேன். 

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அறுபதுகளில் இருந்த இருந்த தமிழ் மாணவர் குழாம் பின்னர் ஈழத்து இலக்கியப் பயணத்தினைக் கொண்டு நடத்தும் முக்கிய எழுத்துலக ஆளுமையாக விளங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை என் பள்ளி நாட்களில் வாசிக்கக் கிட்டிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள் உணர்த்தி நின்றன. அவையிரண்டும் அதே மாணவர் குழாமில் ஒருவராக இருந்த செம்பியன் செல்வன் அவர்களது தொகுப்பாக அமைந்த

கதைப் பூங்கா

https://noolaham.net/project/181/18028/18028.pdf

மற்றும் 

விண்ணும் மண்ணும்

https://noolaham.net/project/16/1579/1579.pdf

ஈழத்து இலக்கியங்களைத் தேடி நுகர்வோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டி படைப்புகள் இவை.

செம்பியன் செல்வன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட அமிர்த கங்கை சஞ்சிகையைப் படித்தவர்கள் ஈழத்துச் சஞ்சிகைப் பரப்பில் அதன் செழுமையான பங்களிப்பைக் கண்டுணர்வர்.

https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

செம்பியன் செல்வன் அவர்களின் வாழ்க்கைப் பகிர்வு

https://noolaham.net/project/176/17555/17555.pdf

செம்பியன் செல்வன் குறித்து எழுத்தாளர் தெளிவத்தை யோசப்

https://www.vaaramanjari.lk/2020/03/15/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?fbclid=IwAR1NoDqlkG1NUpO27hNbzbcPQXvY7pLjS80FlhIBLbp_zJ4mUt1GeK6FIvI

1988 ஆம் ஆண்டு அநு.வை நாகராஜனின் "காட்டில் ஒரு வாரம்" என்ற சிறுவர் நாவல் வெளியீடு விழா வைத்தீஸ்வராக்கல்லூரில் நடந்தபோது செங்கை ஆழியானை முதன்முதலில் பார்தேன். அவரின் கையொப்பத்தை அந்த நிகழ்வு நிறைவுற்றபோது பெறலாம் என்று விழா அழைப்பை நீட்டினேன்.

" காயிததில எல்லாம் 

கையெழுத்தை வைக்காதயும்" 

என்று செங்கை ஆழியானைத் தடுத்துவிட்டு,

" தம்பி அந்தப் புத்தகத்தைக் குடும், அதில வைக்கட்டும்" 

என்றார் பக்கத்தில் நின்ற செம்பியன் செல்வன்.

சிரித்துக்கொண்டே நான் நீட்டிய புத்தகத்தில் தன் கையெழுத்தைப் பதித்தார் செங்கை ஆழியான்.

கானா பிரபா

செம்பியன் செல்வன் படம் மற்றும் இணைப்புகள் நன்றி ஈழத்து நூலகம்

No comments:

Post a Comment