Pages

Thursday, July 16, 2020

அ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”


சிறுகதை ஒலி வடிவம்

ஈழத்து எழுத்தாளர்களது சிறுகதைகளை ஒலி ஆவணப்படுத்தும் தொடரில் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான அ.செ.மு (அ.செ.முருகானந்தன்) அவர்களது “காளிமுத்துவின் பிரஜா உரிமை” என்ற சிறுகதையின் ஒலிவடிவத்தைப் பகிர்கிறோம்.

இந்த சிறுகதையின் ஒலி வடிவத்தைச் சிறப்பாக ஆக்கித் தந்தவர் அவுஸ்திரேலியா நன்கறிந்த ஊடகர், தமிழ்க் கல்வி ஆசிரியர் திரு.நவரட்ணம் ரகுராம் அவர்கள்.

எழுத்தாளர் அ.செ.மு குறித்து பேராசிரியர் சு,வித்தியானந்தன் “மனித மாடு” சிறுகதைத் தொகுதியில் இவ்விதம் குறிப்பிடுகிறார்,

ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை கால வரலாற்றில் 1930 ஆம் ஆண்டுகளின் பிற் பகுதியில் இலங்கையர்கோன், சம்ந்தன், சி. வைத்திலிங்கம் ஆகியோர் இத்துறையில் முதல் முயற்சிகளை மேற் கொண்டனர். இம்முதல் மூவரை அடுத்த இரண்டாவது தலைமுறையொன்று 1940 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற் சிறுகதைத் துறையிற் கவனம் செலுத்தத் தொடங்கிய இவ்விரண்டாம் காலகட்ட எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர் அ. செ. முருகானந்தம் அவர்கள்.

1921 ஆம் ஆண்டிலே மாவிட்டபுரத்தில் பிறந்த முருகானந்தம் அவர்கள் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிற் பயின்றவர். மஹாகவி, அ ந கந்தசாமி ஆகிய படைப்பாளிகளின் இலக்கியச் சூழலில் வாழ்ந்தவர். ஈழகேசரி, மறு மலர்ச்சி. சுதந்திரன், வீரகேசரி, ஈழநாடு முதலிய பத்திரிகை களினூடாக இலக்கியப்பணி செய்தவர். எரிமலை என்ற பத்திரிகையைச் சில காலம் வெளியிட்டவர். இவரது படைப்புகளில் புகையில் தெரிந்த முகம் என்ற குறுநாவல் மட்டுமே இதுவரை நூல் வடிவம் பெற்றது.

யாழ். மாவட்டக் கலாசாரப் பேரவையின் வழியாக “மனித மாடு” சிறுகதைத் தொகுதி வெளிவந்தும் அது பரவலான விற்பனைக்குச் செல்லாது முடங்கிய அவலத்தை செங்கை ஆழியான் அவர்கள் வருந்தி எழுதியிருக்கிறார்.

எழுத்தாளர் முருகபூபதி அவர்களும் “அ.செ.மு” அவர்களின் வாழ்வியலை விரிவாக எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிட வேண்டியது.

தொடர்ந்து அ.செ.முருகானந்தனின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை” ஒலி வடிவைக் கேட்போம்.

https://www.youtube.com/watch?v=2lZNTdI4vs0&t=339s

No comments:

Post a Comment