
அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக
தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.
இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
"என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே" (பெண் குரல்)
"பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது" (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.
இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான "தணியாத தாகம்" நாடகத்தில் வரும்
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே" என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய "தங்கமே தங்கமே" என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த "திரைவிருந்து"என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.


அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்
தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் "ப்ரூ காபி" விளம்பரமும் இத்தகையதே".

தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கு


அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு

புல

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. "போகாதே போகாதே" என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் ".....அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே" என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.
17 comments:
ம்ம்ம் உண்மைதான்...முன்னர் சர்வதேச வானொலியில் ஒலிபரப்பாகும் விளம்பரங்கள்.....இன்றும் மனதில் ஒலித்த வண்ணமே உள்ளது. “எமக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை” என்பது அடிக்கடி உச்சரிக்கப்படும் வசனம். ஆனந் பனியனை கடையில் வாங்கினேன் மாமாவுக்காக.... எங்க எங்க கொஞ்சம் நான் பார்க்கிறேன்...கண்ணை மூடு அதை நான் காட்டுறேன்...” என்று ‘முதல் மரியாதை’ - நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் - பாடலின் மெட்டில் அமைந்திருக்கும். “அன்ன நடை...சின்ன இடை...கையில் என்ன குடை...சிங்காரக் குடை இது சிங்கம் மார்க் குடை....”, “கைவலிக்குது கைவலிக்குது மாமா...” இது ஒறிஜினல் பாட்டைப் போட்டுவிட்டு...”இதோ வந்து விட்டது போலார் ஹைபவர் லோ வோல்ட்டேஜ் கிறைண்டர் மோட்டர்” என்பார்களே அற்புதமாக இருக்கும். இது தொடர்பாக கிடுகுவேலியிலும் உள்ளது...http://kidukuveli.blogspot.com/2009/10/blog-post.html
வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி கதியால்
Well written.
Cheers,
Kantharajah
உங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் என்னைக் கவர்வது யாழ் பேரூந்து நிலைய ஒலிபரப்புச்சேவை..பெயர் பெஸ்டோன் என நினைக்கிறேன்.. அருமையான குரல் அவருக்கு.
Anonymous said...
Well written.
Cheers,
Kantharajah
//
வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
சில விளம்பரங்கள் கேட்கும்போது திரும்ப கேட்கும் ஆசை உருவாகின்றது. ஆனால், சில விளம்பரங்கள் irritating.. உதாரணம் அந்த ஊறுகாய் விளம்பரம்.. எனக்கு சுத்தமா பிடிக்காத விளம்பரங்களில் இதுவும் ஒன்று அண்ணா
காலை வேளைகளில் வானொலி விளம்பரங்களோடு எங்களின் குரலும் எதிரொலித்துக்கொண்டிருக்க பள்ளிக்கு கிளம்புவது வழக்கமான ஒன்று! சொட்டு நீலம் டோய்,கோபால் பல்பொடி,பினோலக்ஸ் பைப் விளம்பரங்களில் தொடர்ந்து ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது! பிறகு முழுநேர விளம்பர வானொலியாகி போன சமயங்களில் கூட பொழுது போகாத தருணங்களில் சுவராஸ்யமாக்கியதும் விளம்பரங்கள்தான்!
நல்ல பதிவு நன்றி கானா ! :)
விசரன் said...
உங்கள் ஊருக்கு வரும் போதெல்லாம் என்னைக் கவர்வது யாழ் பேரூந்து நிலைய ஒலிபரப்புச்சேவை..பெயர் பெஸ்டோன் என நினைக்கிறேன்..//
நீங்கள் சொல்வது மணிக்குரல் விளம்பர சேவை கலக்கலான சேவை தான் அது ;)
மைபிரண்ட்
:0 என்னது அந்த ராகா விளம்பரம் பிடிக்கலியா #ஆச்சரியம்
வருகைக்கு நன்றி ஆயில்ஸ்
நானும் விளம்பரங்களை மிகவும் ரசிப்பேன். நீங்கள் குறிப்பிட்ட விளம்பரங்களும் எனக்கு இன்னும் மனதில் இருக்கிறது நண்பரே!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரோஸ்விக்
Thankyou for remembering the ad 'En athaanin'
இதில் உள்ள நுண்ணரசியல் புரியல பாஸ் உங்களுக்கு விளம்பரங்களால் மட்டுமே வானொலி நடத்திவிடலாம் என்பதற்கு உதாரணம் இந்த தி.எச்.ஆர் ராகாவின் விளம்பரங்கள்...
பெரும்பாலும் இம்மாதிரியான விளம்பரங்கள் மக்களின் எரிச்சலையே கொட்டிக் கொள்கின்றன... இதற்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ரீதியில் மின்னல் பண்பலை... :( கடந்த வருடம் மட்டும் இத்தனை மில்லியன் சம்பாத்தித்தோம் விளம்பரங்களின் வழி என்று மார்த்தட்டிக் கொள்ளும் இவர்கள் குறைந்த பட்சம் அதற்கு ஈடாக நிகழ்ச்சியின் தரத்தையும் மேம்படுத்த வேண்டும் அல்லவா...??விளம்பரங்கள் வழி சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அரசு வானொலிக்கு நிச்சயம் கிடையாது.
மலேசிய தமிழ் வானொலிகள் என் வரையில் தற்போது வெறும் வியாபார வானொலிகள்.. சிங்கை தமிழ் வானொலியில் உள்ள விளம்பர கட்டுப்பாட்டை மலேசிய வானொலிகளும் கடைப்பிடிக்கலாம்.
Anonymous said...
Thankyou for remembering the ad 'En athaanin'//
நீங்களும் அந்த விளம்பரத்தில் ஈர்க்கப்பட்டவர் என்று நினைக்கிறேன்
புனிதா||Punitha said...
இதில் உள்ள நுண்ணரசியல் புரியல பாஸ் உங்களுக்கு விளம்பரங்களால் மட்டுமே வானொலி நடத்திவிடலாம் என்பதற்கு உதாரணம் இந்த தி.எச்.ஆர் ராகாவின் விளம்பரங்கள்//
வணக்கம் புனிதா
இந்தப் பதிவின் நோக்கம் கச்சிதமான விளம்பரங்களால் நேயர்களை ஈர்க்கும் வானொலிகள், மற்றும் விளம்பரத்தைத் தயாரிக்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள். நீங்கள் குறிப்பிட்டது போன்று சில தனியார் வானொலிகள் விளம்பரமே கதி என்று இருந்தாலும் சாமர்த்தியமான வகையில் அவற்றைச் செய்கின்றார்கள் என்பதையே பதிவில் சுட்டினேன்.
கானா பிரபா.. தமிழ் விளம்பரங்களை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமே பெறலாம்.. அந்தளவுக்கு தமிழ் விளம்பரங்களில் மேடும் பள்ளமுமாக நிறைய விசயங்கள் உண்டு!!! சில வானொலிகள் குறிப்பாக சென்னை FM-கள், கனடாவில் ஆமைவேகத்தில் உச்சரிக்கும் வானொலிகள் தமிழி கொல்லுகின்றன எனலாம்.... ஆனால்.. சிங்கப்பூரின் ஒலி வானொலியில் எதோ ஒரு தனித்தன்மை இருப்பதை உணரக்கூடியதாக இருக்கு.... பதிவு பிரமாதம்...
அங்கிதா வர்மா
பதிவை வாசித்ததோடு உங்கள் சிறப்பான கருத்தைப் பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றிகள்
Post a Comment